Saturday 20 January 2018

எச்.ராஜா வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- திருப்பூர் மாவட்டம்














நமது உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் வம்புக்கிழுக்கும் வகையில் பேசிமதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் செயல்படும்  பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா வை கண்டித்தும்அவனை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும்,

       திருப்பூர் மாவட்டம் சார்பில் கடந்த 19/01/2018 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் நடத்தினோம்.

            திருப்பூர் பகுதி காவிகள் அராஜகம் மிகுந்த பகுதியாக உள்ளதாலும்காவிகளுக்கெதிரான நமது இந்த ஆர்ப்பாட்டம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.,

           மிக அதிகமான காவலர்களை அனுப்பி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
           பொதுமக்களும் மிக அதிகமாக பெரும் திரளாக எழுச்சியுடன் கலந்து கொண்டனர்,
           மாநில தலைமையின் FB பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ததை காவிகள் உட்பட  லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

        அதில் மாநில பொதுச்செயலாளர்  M.S. சையது இப்ராஹிம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

           இந்த ஆர்ப்பாட்டமும்அதில் மாநில பொது செயலாளரின் கண்டன உரையும்  வெகு ஜன மக்கள் மத்தியிலும் அரசு மற்றும் காவல்துறை மத்தியிலும் இஸ்லாம் பற்றியும்இஸ்லாமியர் பற்றியும்குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பற்றி நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்.