Thursday 31 October 2013

"பட்டாசுகளும்,முஸ்லிம்களும்" நல்லூர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 31.10.2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.பசீர்   அவர்கள் "பட்டாசுகளும்,முஸ்லிம்களும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

"வீண்விரயம் " _தெருமுனைபிரச்சாரம் _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 29.10.2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சிஹாபுதீன்  அவர்கள் "வீண்விரயம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

"வீண்விரயம் " செரங்காடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 27.10.2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சஜ்ஜாத்  அவர்கள் "வீண்விரயம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

"இறைவனின் கட்டளைகள் " _செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 27.10.2013 அன்று சகோ.ஆஸம்  அவர்கள்  "இறைவனின் கட்டளைகள் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கடன் நிபந்தனை _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 31.10.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் 
"கடன் நிபந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
 

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பிறமதசகோதரர்களுக்கு அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன = DVD 3 வழங்கி தஃவா _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-10-2013 அன்று பிறமதசகோதரர்கள்.கிறிஸ்டோபர் அருண், ராஜேஷ் நிர்மல், ராபர்ட், ஆகியோருக்கு தஃவா செய்யப்பட்டு இலவசமாக அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன = DVD 3, வழ
ங்கப்பட்டது.

உறவை பேணுவோம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 30.10.2013 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் உறவை பேணுவோம்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

"குர்ஆனின் சிறப்பு" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30.10.2013 அன்று கிழங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையா அவர்கள்  "குர்ஆனின் சிறப்பு"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

"செவியை பேணுவோம்" மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30.10.2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கிழங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள்  "செவியை பேணுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Wednesday 30 October 2013

கடன் ஒப்பந்தம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 30.10.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் 
"கடன் ஒப்பந்தம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
 

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நபிகளாரின் எச்சரிக்கை _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 29.10.2013 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் நபிகளாரின் எச்சரிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பழனி ஏழை சகோதரர்க்கு ரூ.10,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 28.10.2013 அன்று பழனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். மாமனமைதீன் க்கு   ரூபாய் 10,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.

Tuesday 29 October 2013

பட்டாசு வெடிக்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு .....


தீபாவளி கொண்டாடுகின்றோம் என்று சொல்லி முஸ்லிம்கள் பட்டாசு வெடிப்பதை காண்கின்றோம்; தங்களது பிள்ளைகளுக்கு பட்டாசுகளை வாங்கிக்கொடுத்தும் வெடிக்கச் செய்கின்றனர். 
பட்டாசு வெடிக்கும் முஸ்லிம்கள் ஹராம்களைச் செய்த குற்றத்தை அவர்கள் சுமப்பார்கள். பொருளாதாரத்தைப் பயனில்லாத வழியில் செலவிடுதல் மார்க்கத்தில் ஹராமாகும். காற்றை மாசுபடச் செய்து மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் கேடு விளைவிப்பதும் ஹராமாகும். நோயாளிகளின் நிம்மதியைக் கெடுத்து மாணவ- மாணவிகளின் படிப்பையும் இது கெடுத்து விடுகிறது. இதுவும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். பட்டாசு நெருப்பின் மூலம் குடிசைகள் எரிந்து பிறரது சொத்துகளும் நாசமாகின்றன. உயிர்களும் பலியாகின்றன. பட்டாசு வெடிப்பவர்களே பலியாகும் நிலையும் ஏற்படுகிறது. இப்படி மார்க்கம் தடுத்துள்ள அதிகமான காரியங்களின் தொகுப்பாக பட்டாசு வெடித்தல் அமைந்துள்ளதால் இதை முஸ்லிம்கள் உணர்ந்து பாவத்தில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.





பட்டாசுகள் வெடிப்பொருட்களில் பிறருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாதவை என்று எதுவும் இல்லை. அனைத்து பட்டாசுகளும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது. சிறிய பட்டாசைக் கொளுத்தினாலும் அதிலிருந்து வெளிவரும் நச்சுப்புகை சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றது. மனிதர்களின் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள பிராண வாயுவில் கலந்து பல்வேறு நோய்களை உருவாக்குகின்றது. சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் இதனால் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். குடிசைகளில்




பட்டாசு விழுந்து குடிசைகளைக் கொளுத்தி மனிதர்களையும் கொல்கிறது. இதய நோயாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் படிக்கும் மாணவர்களுக்கும் பலவிதமான கேடுகளை ஏற்படுத்துகின்றது.


ஒரு முஸ்லிம் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : மக்கள், "இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது செயலே சிறந்தது)'' என்று பதிலளித்தார்கள். நூல் : புகாரி 11


அபூதர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கüடம், "எந்த நற்செயல் சிறந்தது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வதும் அவனது பாதையில் ஜிஹாத் செய்வதும் (போராடு வதும்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள். நான், "எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்)'' என்று பதிலளித்தார்கள். நான், "என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "பலவீனருக்கு உதவி செய்; அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்'' என்று கூறினார்கள். நான், "இதுவும் என்னால் இயலவில்லையென்றால்....?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்குச் செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்'' என்று கூறினார்கள். நூல் : புகாரி 2518

எனவே பட்டாசுக்காக நாம் செலவிடும் தொகை வீணானது. இதைப் பயன்படுத்துவதால் பிறருக்குத் தீங்கு செய்த குற்றத்துடன் பொருளாதாரத்தை விரையமாக்கிய குற்றமும் ஏற்படும். எனவே முஸ்லிம்கள் இந்த பாவத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்.

ஏழை சகோதரிக்கு ரூ. 8400/= மருத்துவஉதவி _ M.S. நகர் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பாக 28.10.2013 அன்று M.S. நகர் கிளை சார்ந்த சகோதரர்.அர்ஷத் அவர்களின் தாயார் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு  ரூ. 8400/=  மருத்துவஉதவி வழங்கப்பட்டது.

"வீண்விரயம் " _காலேஜ்ரோடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை யின் சார்பாக 28.10.2013 அன்று சாதிக்பாட்சா நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.ஜபருல்லாஹ்   அவர்கள் "வீண்விரயம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

அனுமதிக்கப்பட்ட வியாபாரம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 29.10.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் 
"அனுமதிக்கப்பட்ட வியாபாரம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
 

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

"நபிகளாரின் நற்போதனைகள்" _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 28.10.2013 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.சிராஜ் அவர்கள் 
"நபிகளாரின் நற்போதனைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
 

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

"பெண்குழந்தையின் சிறப்பு" _மங்கலம் கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28.10.2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கோல்டன் டவரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. தவ்ஃபீக் அவர்கள்  "பெண்குழந்தையின் சிறப்பு" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.

"அல்-அலக் " -நல்லூர் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை சார்பில்28.10.2013 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள்  "அல்-அலக் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"வீண்விரயமும், இஸ்லாமும் " _பெரியகடைவீதி கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை யின் சார்பாக 28.10.2013 அன்று  பெரியகடைவீதி முஹமதியர் 1வது வீதி  பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ.மங்கலம் தவ்பீக்  அவர்கள் "வீண்விரயமும், இஸ்லாமும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

"வீண்விரயம் " _பெரியகடைவீதி கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை யின் சார்பாக 28.10.2013 அன்று  பெரியகடைவீதி M.N.R லைன் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.





இதில் சகோ.மங்கலம் தவ்பீக்  அவர்கள் "வீண்விரயம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

Monday 28 October 2013

பிற மத சகோதரிக்கு இரத்த தானம் _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 27.10.2013 அன்று திருப்பூர் G.H.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிற மத சகோதரி.ராமாத்தாள் அவர்களின் அவசர சிகிச்சைக்கு தேவைப்பட்ட B+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரரால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

பட்டாசுக்களால் பலியாகும் உயிர்கள் : தடுக்க வழி என்ன?


பட்டாசுக்களால் பலியாகும் உயிர்கள் : தடுக்க வழி என்ன?

சிவகாசி பட்டாசு வெடிவிபத்தில் ஏராளமானோர் பலியாகி பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது போன்று எதிர் காலத்தில் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முஹம்மது அப்துல்காதர், விருதுநகர்


அரசாங்கத்தை நடத்தக்கூடியவர்களுக்கு கொஞ்சம் மூளை இருந்து, அந்த மூளையைப் பயன்படுத்தி சட்டங்களை இயற்றி இருந்தால், இதுபோன்ற பேரழிவுகளைத் தடுத்திருக்க முடியும். வெடி மருந்துகள் மிகவும் ஆபத்தானவை என்பதை அனைவரும் அறிந்துள்ளோம். மிக அவசியமான தேவைகளுக்காகவே தவிர, வேறு எதற்காகவும் வெடி மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது என்றுதான் அறிவுடைய மக்கள் முடிவுக்கு வருவார்கள். பாறைகளை உடைப்பதன் மூலம்தான் சாலை வசதிகளைப் பெற முடியும் என்பதால், இதற்காக வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதை நம்முடைய அறிவு ஏற்றுக் கொள்கிறது. உணவைச் சமைத்துச் சாப்பிட நெருப்பு அவசியம். அதை உருவாக்கிட தீப்பெட்டி அவசியம் என்பதால் இதற்காக வெடிமருந்துகள் பயன்படுத்துவதை நம்முடைய அறிவு ஏற்றுக் கொள்கிறது.

படிப்படியாகக் குறைந்து வரும் தீப்பெட்டிப் பயன்பாடு காலப்போக்கில் அறவே இல்லாமல் போய்விடும். அதுபோல் ஜல்லிகள் மூலம் சாலைகள் போடுவதற்குப் பதிலாக பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் தொழில் நுட்பம் அதிகரிக்கும்போது பாறைகளை உடைக்கும் அவசியம் இல்லாமல் போய்விடும். அப்போது மக்களுக்கு வெடி மருந்துகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்விடும். அதுவரை மேற்கண்ட இரண்டு காரியங்களுக்கு மட்டுமே வெடிமருந்துகள் குறைந்த அளவுக்கு தேவைப்படும். இவற்றைத் தவிர மற்ற அனைத்துப் பயன்பாடுகளில் இருந்தும் வெடி மருந்துகளைத் தள்ளிவைப்பதுதான் அறிவுப்பூர்வமானது.

ஆனால் மக்கள் சர்வசாதாரணமாக வெடி மருந்துகளுடன் விளையாடும் நிலைக்கு பட்டாசு உபயோகமே காரணமாகும். தீபாவளி போன்ற பண்டிகைகளுடன் தொடர்புபடுத்தி இதற்கு பட்டாசு வியாபாரிகள் மதச் சாயம் பூசிவிட்டதே இந்த பேராபத்துக்குக் காரணம்.

உண்மையில் இதற்கும் இந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. பட்டாசுகள் பிற்காலத்தில் வந்த கண்டுபிடிப்பாகும். முந்தைய காலத்தில் தீபாவளி கொண்டாடிய இந்துக்கள் பட்டாசுகளை அறிந்திருக்கவில்லை. எனவே மதத்துக்கு வெளியே நின்று சிந்திப்பதுதான் சரியானதாகும். இப்படி சிந்தித்தால் பட்டாசுகள் வெடிப்பதால் கீழ்க்கண்ட தீமைகள் ஏற்படுவதை உணரலாம்.

•பொருளாதாரத்தைத் பயனற்ற வழியில் விரயமாக்குவது
•பட்டாசு வெடித்து உயிர்கள் பலியாவது
•பட்டாசுகள் மூலம் குடிசைகள் எரிந்து சாம்பலாவது •பட்டாசு வெடிப்பவர்களுக்கும் அருகிலிருப்பவர்களுக்கும் படுகாயங்களை ஏற்படுத்துவது
•மனிதனின் காதுகள் தாங்கிக் கொள்ள முடியாத அதிக சப்தம் காரணமாக கேட்கும் திறனில் ஏற்படும் பாதிப்புகள்
•இதய நோயாளிகளும், பச்சிளம் குழந்தைகளும், சிந்திப்பவர்களும், படிப்பவர்களும் இந்த சப்தம் காரணமாக கடுமையான பாதிப்புகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளாகுவது
•பட்டாசுகள் மூலமாக வெளியேறும் நச்சுப்புகை மூலம் காற்று மாசு படுகிறது
•அதை சுவாசிப்பதன் மூலம் மனிதர்களும், இன்னபிற உயிரினங்களும் கடும் பாதிப்புக்குகளைச் சந்திக்கின்றன.நோயாளிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
•பட்டாசு வெடிப்பதன் மூலம் குப்பைகளின் அளவும் அதிகரித்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.

•நச்சுப் பொருள் கலந்த குப்பைகளால் மண் வளமும் பாதிக்கப்படுகிறது.


இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் இதனால் எந்த நன்மையாவது உள்ளதா என்றால் அதுவும் இல்லை. நவீன சாதனங்கள் பயன்படுத்துவதன் காரணமாக காற்று மாசு படுவதாகவும், பூமி வெப்பமயமாகி வருவதாகவும், ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டு புற ஊதாக்கதிர்கள் பூமிக்கு வந்து மனிதர்களுக்கு கேடுகள் ஏற்படுத்துவதாகவும் கூறி அந்த நவீன சாதனங்களின் பயன்பாட்டைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேற்கண்ட

சாதனங்களால் சில கேடுகள் ஏற்பட்டாலும் அது பட்டாசினால் ஏற்படும் கேடுகளை விட பலப்பல மடங்கு குறைவானதுதான். அத்துடன் இந்த சாதனங்கள் மூலம் விரைவாகவும் பணிகள் முடிகின்றன. சொகுசான இன்பங்களை அனுபவிக்கிறோம். இதற்காக மேற்கண்ட தீமைகளை நாம் சகித்துக் கொள்வதில் அர்த்தம் உள்ளது. ஆனால் இதைவிட பெரும்கேடு ஏற்படுத்தும் பட்டாசுகளால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

அறிவுள்ள மக்களுக்குத் தெரியும் இந்த விபரம் ஆட்சியாளர்களுக்கு ஏன் தெரியவில்லை. அவசியமற்ற கேடுகள் விளைவிக்கின்ற பட்டாசுகளுக்கு அறவே அனுமதி இல்லை என்று முடிவு செய்தால், இதுபோன்ற அழிவுகளுக்கு இடமில்லை.

 பட்டாசைக் காரணம்காட்டி வெடி மருந்துகள் பரவலாகக் கிடைப்பதால்தான், வெடிகுண்டு தயாரிக்கும் பயங்கரவாதிகளுக்கும் வசதியாகப் போய்விடுகிறது.
இதைப்பற்றி சிந்திக்காமல் நீதி விசாரணை நடத்துவதும் நஷ்ட ஈடு கொடுப்பதும்தான் அரசின் நடவடிக்கையாக இருக்கும்பட்சத்தில் இதுபோன்ற பேரழிவுகள் தொடர்கதையாகிப் போய்விடும்.


Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/unarvuweekly/crackers-how-to-ban-17-03/
Copyright © www.onlinepj.com

தீபாவளி பட்டாசினால் உருவாகும் அலர்ஜியும் ஆஸ்துமாவும்

ஒவ்வொரு சமுதாயமும் தங்களது மகிழ்ச்சியை வெüப்படுத்துவதற்காக சில நாட்களைத் தேர்வு செய்து, அந்நாட்களுக்குப் புனிதம் வழங்கி அவற்றைப் பண்டிகைகளாகக் கொண்டாடி வருகின்றனர். 
பொதுவாக பண்டிகை என்றால் அதில் கேüக்கைகளும் இடம் பெற்றிருக்கும். தீபாவளி என்ற பண்டிகையை எடுத்துக் கொண்டால் அதில் பட்டாசு வெடிப்பது ஒரு வணக்கமாகவே கருதி செய்யப்படுகிறது. 
இது போன்ற பண்டிகைகüல் வசதி படைத்தவர்கள் மகிழ்ச்சியாக பட்டாசுகளை எரிய விட்டுக் கொண்டாடும் அதே வேளையில் ஏழைகள் அடுப்பெரிக்கக் கூட வழியில்லாமல் திண்டாடுவதைப் பார்க்கிறோம். ஆனால் மனித குலத்தின் வாழ்க்கை நெறியான இஸ்லாமில் வசதி படைத்தவர்களுடன் சேர்ந்து ஏழைகளும், பெருநாட்களைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக இரு பெருநாட்கüலும் இரு வேறு விதமான தர்மங்களை மார்க்கம் வலியுறுத்துகின்றது. நோன்புப் பெருநாளின் போது ஸதகத்துல் ஃபித்ர் எனும் தர்மம் வழங்குவதையும், ஹஜ் பெருநாளின் போது ஆடு, மாடுகளைக் குர்பானி கொடுத்து, அதன் இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்வதையும் இஸ்லாம் வணக்கமாக ஆக்கியிருக்கின்றது. இப்படிப்பட்ட மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களில் சிலரிடமும் பட்டாசுக் கலாச்சாரம் தொற்றிக் கொண்டு விட்டது. மாற்று மதத்தவர்களைப் பின்பற்றி, இவர்களும் பெருநாள் கொண்டாடும் போது பட்டாசுகளை வெடித்து மகிழ்கின்றனர். இந்தப் பட்டாசினால் மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்க வேண்டியது நமது கடமையாகும். பட்டாசு வெடிக்கும் போது நான்கு மீட்டர் தொலைவில் 125 டெசிபல் சப்தத்திற்கு மேல் வெடிக்கும் பட்டாசுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 125 டெஸிபலுக்கு மேலுள்ள வெடிகளை வெடிக்கச் செய்தால் அவர் 1986ஆம் ஆண்டு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் படி தண்டனைக்குரியவர் ஆவார். (தோராயமாக 30 டெஸிபல் வரையுள்ள சப்தங்களையே நாம் செவியுறுகிறோம்.) பேரியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சோடியம் நைட்ரேட் அயர்ன் பவுடர், மேக்னீசியம் பவுடர், ஸ்ட்ரோனடியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரேட் ஆகிய கலவைககள் அதிக அளவில் கலந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் மிக அதிக அளவிலான நைட்ரஜன் ஆக்ஸைட், சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு ஆகியவற்றை வெளியிடுகின்றன. இவை சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துகின்றன. இதனைச் சுவாசிக்கின்ற மனித இனத்திற்கு இது பெரும் உடல் நலக் கேட்டை ஏற்படுத்துகிறது. 


ஹிந்து நாளேட்டின் மதுரை பதிப்பில், "ஆஸ்துமாக்காரர்களுக்கு தீபாவளி மகிழ்ச்சிக்குரிய நாளல்ல'' என்ற தலைப்பில் 21.10.2006 அன்று வெளியான செய்தி இதோ: யானை வரும் பின்னே! மணி ஓசை வரும் முன்னே! என்பது போல் எட்டு வயது பவித்ராவுக்கு வண்ண வண்ண மத்தாப்புக்கள், வாய் சிந்தும் புன்னகைப் பூக்கள், வகை வகையான இனிப்புக்கள் என தீபாவளி வருகையை அட்டகாசமாகப் பறை சாற்றிக் கொண்டிருந்தன. அவள் பட்டாசு கொளுத்தி பண்டிகையைத் துவக்கியதும் இரண்டு நாட்களாகத் தொடர் இருமலும், இளைப்பும் அவளது பண்டிகை மகிழ்ச்சியைப் பறித்துக் கொண்டது. கடைசியில் அவள் கடுமையான ஆஸ்துமாவின் பிடியில் சிக்கி, தீபாளிக்கு முன்னால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். "கடந்த எட்டு மாதமாக அவள் சுகமாகத் தான் இருந்தாள். இந்த சீசன் தான் அவளுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. பட்டாசுப் புகை அவளது இளைப்பை அதிகரித்து, ஆட்டி அலைக்கழிக்கின்றது'' என்று அவளது தாயார் லெட்சுமி கூறுகிறார். பண்டிகை கொண்டாட்டம் தொடரத் தொடர, காற்று மேலும் மேலும் மாசுபட்டுக் கொண்டே இருக்கின்றது. அதிலும் ஈரப்பதமான குளிர் காற்றில் இந்த வெடி மருந்துப் புகை மண்டலம் ஒன்றாகக் கலக்கையில் அது மாசு படுவதன் அளவு அதிகரிப்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. எனவே இந்த சீசனில் நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் ஆகி விடுகின்றது. "ஒவ்வொரு தீபாவளியின் போதும் இளைப்பு மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக வருகின்றன. ஏற்கனவே வயது வந்த, நிரந்தர ஆஸ்துமாக்காரர்களுக்கு இந்தக் கால கட்டத்தில் ஆஸ்துமா அதிகமாகி விடுகின்றது. அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்'' என்று ஆஸ்துமா மற்றும் அலர்ஜி ஆய்வு மையத்தின் மருத்துவர் ஆர். ஸ்ரீதரன் கூறுகின்றார். இந்தக் கால கட்டத்தில் இத்தகைய நோயாளிகள் 50 சதவிகிதம் அதிகரித்து விடுகின்றனர் என்று அவர் குறிப்பிடுகிறார். "ஆஸ்துமா நோயுள்ளவர்கள் மட்டும் ஆபத்தில் மாட்டிக் கொள்வதில்லை! புள்ளி விபரப்படி, ஆஸ்துமா இல்லாத பல பேருக்குப் புதிதாக ஆஸ்துமா ஏற்பட்டு ஆபத்தில் மாட்டிக் கொள்கின்றனர். இதனால் புதிய ஆஸ்துமாக் காரர்களின் எண்ணிக்கை இந்தப் பருவத்தில் கூடி விடுகின்றது'' என்று மூச்சு ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவர் ஆர். நரசிம்மன் கூறுகின்றார். இதற்குக் காரணம் இந்தப் பட்டாசுப் புகை மூச்சுக் குழாயின் மேல் சவ்வை சிதைத்து விடுகிறது. இதனால் மனித உடலில் இயற்கையாக உள்ள எதிர்ப்பு சக்தி அழிந்து போய், அவர் மூச்சு சம்பந்தமான வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி விடுகிறார். இந்த வைரஸ்களில் ஒன்று பெரிய, சிறிய மூச்சுத் துவாரங்களை பாதிப்படையச் செய்கிறது. அதனால் அவர் மூச்சுத் திணறல் மற்றும் இளைப்பு நோய்க்கு உள்ளாகிறார். இவருக்கு ஏற்படும் இந்த நோயின் அறிகுறிகள் ஆஸ்துமா, இளைப்பின் அறிகுறிகளைப் போன்றவை தான். இந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆஸ்துமாவுக்குப் பலியாகி விடுகின்றனர் என்று டாக்டர் ஸ்ரீதரன் தெரிவிக்கிறார். மாசுபட்ட இந்தக் காற்று மூச்சுத் துவாரங்களில் வீக்கத்துடன் கூடிய அலர்ஜியை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பட்டாசுப் புகையைச் சுவாசிப்பவர் இந்த நோயினால் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்பட்டு விடுவார். அதிலிருந்து அவர் தப்ப முடியாது. பட்டாசில் சல்பர் டை ஆக்ஸைடு சேர்மானங்கள் கலந்திருக்கின்றன. எனவே அது வெடிக்கும் போது அவற்றின் புகை மூக்கின் வழவழப்புப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மூக்கின் அருகிலுள்ள குழிகளில் நீர் கோர்த்து, சளி பிடித்தல், மூக்கடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சளி அடைப்பு நோய் உள்ளவர்களது நுரையீரலின் கதையை முடிக்கும் அளவுக்கு இதன் வீரியம் அமைந்துள்ளது. பச்சிளம் குழந்தைகள் கூட, சாதாரண மூச்சுத் திணறல் முதல் நிமோனியா வரையிலான நோய்களால் மிகப் பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மருத்துவர்களின் வெறும் ஆய்வு அடிப்படையில் அல்ல! அனுபவ அடிப்படையில் தெரிவிக்கின்ற  
 
இந்தச் செய்தியை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். 
 
 இந்தப் பட்டாசுப் புகை சுற்றுப்புறச் சூழலை மட்டுமல்லாது நம்முடைய சுவாசப் பையையும் மாசுபடுத்தி, சேதப்படுத்தி விடுகின்றது என்பதை நாம் நன்கு விளங்கிக் கொள்கிறோம். பட்டாசு வெடிப்பதால் நாம் இரண்டு பாவங்களைச் செய்கிறோம். ஒன்று நம்மை நாமே அழித்துக் கொள்வது, மற்றொன்று, நாம் மற்றவர்களை அழிப்பது. இந்த இரண்டு பாவங்களும் ஒரு சேர பட்டாசில் அமைந்திருக்கின்றன.  
 
உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.  
 
அல்குர்ஆன் 4:29
 
 உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். அல்குர்ஆன் 2:195 
 
நம்மை நாமே அழித்து, மற்றவர்களையும் அழிக்கும் இந்தப் பாவங்களை நாம் ஒரு போதும் செய்யக் கூடாது என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது. இன்று பட்டாசினால் கை, கால், கண்கள் பறி போகின்றன. எத்தனையோ பேருக்குக் கண் பாதிக்கப்பட்டுள்ளது. கை, கால் முடமாகியிருக்கின்றது. பறி போன கண்ணை, கை, கால்களை யாராவது திருப்பித் தர முடியுமா? பட்டாசில் உருவாகும் நெருப்புக்கு, இது உயிருள்ளது, உயிரில்லாதது என்று பிரித்துப் பார்க்கும் ஆற்றல் உள்ளதா? ஏன் நெருப்புடன் இப்படி ஒரு விளையாட்டு? மனித உயிருக்கும் உடைமைக்கும் இன்ன பிற உயிரினத்திற்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் ஊறு விளைவிக்கும் இந்தத் தீயுடன் இப்படி ஒரு விபரீத விளையாட்டை நம்முடைய குழந்தைகள் விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் மிகப் பெரும் பொறுப்பும் கடமையுமாகும். திடுக்கிடும் தொட்டில் குழந்தைகள் பட்டாசுகள் வெடிப்பதால் இது வரை கண்ட இடையூறுகள் மட்டுமின்றி இன்னும் பல்வேறு இடையூறுகளும் உள்ளன. வெடிச் சத்தம் கேட்டவுடன் நாம் வளர்க்கும் கோழி போன்ற பறவையினங்களும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் அஞ்சி நடுங்குகின்றன; அலறித் துடிக்கின்றன. தொட்டிலில் தூங்கும் குழந்தைகள் வெடிச் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்து அழுகின்றன; அதிர்ச்சியடைகின்றன. இப்படி எல்லா இனத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் இந்தக் காரியத்தை ஒரு போதும் முஸ்லிம் சமுதாயம் செய்யக் கூடாது.
 
 "பிற முஸ்லிம்கள் எவரது நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். மேலும் எவர் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டதை விட்டும் ஒதுங்கிக் கொள்கிறாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 10 
 
வெடியின் விளைவுகளையும் விபரீதங்களையும் மாற்று மத நண்பர்களுக்கும் விளக்கி, அவர்களையும் இந்தத் தீமையை விட்டுத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்தப் பொறுப்பையுடைய நாமே இந்தக் காரியத்தைச் செய்யலாமா? வீணாகச் செலவழிக்கும் போது, "காசைக் கரியாக்காதே!'' என்று வழக்கத்தில் சொல்வதுண்டு! ஆனால் இன்று நம்முடைய குழந்தைகளுக்கு வெடியை வாங்கிக் கொடுத்து விபத்தைத் தேடிக் கொடுக்கிறோம் என்பது ஒரு புறமிருக்க, காசை எப்படிக் கரியாக்க வேண்டும் என்ற பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறோம். 
 
அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.  
 
அல்குர்ஆன் 102:8 
 
பொருளாதாரம் என்பது ஓர் அருட்கொடை! அந்த அருட்கொடையை எப்படிச் செலவழித்தோம் என்பது பற்றி விசாரிக்கப்படுவோம் என்ற பயம் நமக்கு வர வேண்டும். "ஓர் அடியான் தனது வாழ்நாளை எப்படிக் கழித்தான்? கல்வியை எப்படிச் செயல்படுத்தினான்? அவனுடைய பொருளை எங்கிருந்து சம்பாதித்தான்? அதனை எப்படிச் செலவழித்தான்? தன்னுடைய இளமையை எப்படிக் கழித்தான்? என்று விசாரிக்கப் படாமல் மறுமை நாளில் அவனது பாதம் நகராது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
 
அறிவிப்பவர்: அபூ பர்ஜா (ரலி) நூல்: திர்மிதீ 2341 
 
இந்த ஹதீஸின் படி பட்டாசு வகைக்காக செலவழித்த பணங்காசுக்கு நாம் பதில் சொல்லாமல் மறுமையில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 எம். ஷம்சுல்லுஹா

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/egathuvam/2007-ega/nov_2007/
Copyright © www.onlinepj.com

ஏழை சகோதரிக்கு ரூ.2200/= வாழ்வாதார உதவி _மடத்துக்குளம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பில் 27.10.2013 அன்று  2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும்  தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து  கண்ணாடிப்புத்தூர் பகுதியை சேர்ந்த ரசல் என்ற ஏழை சகோதரிக்கு ரூ.2200/= வாழ்வாதார  உதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

பெண்களுக்கான இஸ்லாமிய ஒழுங்குகள் _மடத்துக்குளம்கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 27.10.2013 அன்று மடத்துக்குளம்கிளை பள்ளியில்   பெண்கள் பயான் நடைபெற்றது.    
 






சகோதரி.சுமையா அவர்கள்.
 "பெண்களுக்கான இஸ்லாமிய ஒழுங்குகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

புதியபள்ளிவாசல் கட்ட _ மங்கலம் கோல்டன் டவர் கிளை செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக 28-10-2013 அன்று காலை 06:00 மணியளவில் கிளைசெயற்குழு மஸ்ஜிதுல் மாலிகுள் முல்க் பள்ளியில் மாவட்ட தலைவர். நூர்தீன் தலைமையில் நடைபெற்றது

 


இதில் கிளையில் புதியபள்ளிவாசல் கட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது

"அளவு நிறுவையில் மோசடி செய்யாதே" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 28.10.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள்  "அளவு நிறுவையில் மோசடி செய்யாதே" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

அலட்சியமாக கருதப்படும் நபிமொழிகள் _மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை யின் சார்பாக 27.10.2013 அன்று  மங்கலம் பெரியபள்ளிவாசல் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ இத்ரீஸ் அவர்கள் "அலட்சியமாக கருதப்படும் நபிமொழிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

“சொர்க்கம் ” _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 27.10.2013 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் “சொர்க்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

வீண் விரையம் _மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை யின் சார்பாக 27.10.2013 அன்று  மங்கலம் பெரியபள்ளிவாசல் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் "வீண் விரையம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

பெண்களுக்கான குழு தஃவா _மங்கலம் கிளைதர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-10-2013 அன்று தர்பியா நடைபெற்றது...
பெண்களுக்கான குழு தஃவா செய்தல் பற்றிய  பயிற்சி வழங்கப்பட்டது..

S.V.காலனி கிளை _தனிநபர்தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 27.10.2013 அன்று S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் தனிநபர்தாவா  
 ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரிடம் இருந்த தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது

இஸ்லாத்தின் பார்வையில் வீண் விரையம்" _S.V.காலனி கிளைபெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 



27.10.2013 அன்று S.V.காலனி கிளை மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில்   பெண்கள் பயான் நடைபெற்றது. 
 


சகோதரி.குர்சித் பானு ஆலிமா அவர்கள்."இஸ்லாத்தின் பார்வையில் வீண் விரையம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

பிறமத ஏழைசகோதரிக்கு ரூ.3000/= மருத்துவஉதவி _தாராபுரம் நகர கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பில் 27.10.2013 அன்று  2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும்  தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து  பிறமத ஏழைசகோதரி .வசந்தி  அவர்களின் மருத்துவ (கிட்னி பாதிப்பு) செலவினங்களுக்காக ரூ.3000/= மருத்துவஉதவி யாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

காங்கயம் கிளை தனி நபர் தஃவா

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 27.10.2013 அன்று கிளை மர்கசுக்கு வந்த இஸ்லாமிய சகோதரர்.லியாகத்அலி அவர்களுக்கு, இஸ்லாமிய அடிப்படை மற்றும் நபிவழி பற்றி  தனி நபர் தஃவா செய்யப்பட்டது. 

"கொள்கை உறுதி" _வடுகன்காளிபாளையம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை சார்பாக 27.10.2013 அன்று வடுகன்காளிபாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..
சகோ.யாசிர் அரபாத் அவர்கள் "கொள்கை உறுதி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்..
ஏராளமான பொது மக்களும் கேட்கும் வகையில் பள்ளி ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது...

Sunday 27 October 2013

"வீண்விரயம்" _பெரியகடை வீதி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி  கிளை சார்பாக 27.10.2013 அன்று திருப்பூர் பெரியகடை வீதி  கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது..
சகோதரி.ஷபாமா அவர்கள் "வீண்விரயம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..
சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

"தொழுகையின் முக்கியத்துவம்" காங்கயம் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 27.10.2013 அன்று காங்கயம் கிளை வளாகத்தில் தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது. 







 



சகோ.பசீர்அவர்கள் "தொழுகையின் முக்கியத்துவம்" எனும் தலைப்பிலும்
 சகோ.யாசிர் அரபாத் அவர்கள் "கொள்கை விளக்கம் " எனும் தலைப்பிலும், கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.