Friday 27 June 2014

ரமலானின் சிறப்புகள்_தாராபுரம் கிளை சார்பாக பெண்கள் பயான்

திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 22-6-2014 ஞாயிறு அன்று நேதாஜி தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி குர்ஷீத் ஆலிமா அவர்கள் `ரமலானின் சிறப்புகள்´ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏரளமான பெண்கள் கலந்துகொன்டனர். 
அல்ஹம்துலில்லாஹ்....

 

"ஹஜ்ஜில் கடைபிடிக்க வேண்டிவைகள் " _யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 27.06.2014 அன்று  சகோ.சுலைமான்  அவர்கள் "ஹஜ்ஜில் கடைபிடிக்க வேண்டிவைகள் "  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தெருநாய்களை உடனடியாக பிடிக்கக் கோரி அலுவலரிடம் மனு _கோம்பைத் தோட்டம் கிளை சமூகசேவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 26.06.2014 அன்று கோம்பை தோட்டம் பகுதியில் தெருநாய் தொல்லையை விளக்கியும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பட  தெருநாய்களை உடனடியாக பிடிக்கக் கோரி , திருப்பூர் மாநகராட்சி அலுவலரிடம்   மனு அளிக்கப்பட்டது..

நல்லூர் கிளை சார்பாக தாயத்து அகற்றம்

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 21.06.14 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஷிர்க்கான பொருட்கள் தாயத்து அகற்றம் செய்து அழைப்புப்பணி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

நல்லூர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 26.06.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.    இதில் சகோ.ராஜா உரையாற்றினார். இந்த உரையை மக்கள் கேட்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...