Tuesday 22 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 21.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 21.07.2014 அன்று  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "திருக்குர்ஆனில் அறிவியல் உண்மைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, புரஜக்டர் படக்காட்சிகள் மூலம் விளக்கியது அனைவருக்கும் உபயோகமாக மனதில் பதியும் வண்ணம் அமைந்தது. 
அல்ஹம்துலில்லாஹ்...

30 மினி போஸ்டர்கள் _ VKP கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை  சார்பாக  20.07.2014 அன்று  உணர்வு இதழில் பூமிக்கு அடியில் மிகப்பெரும் நீர்தேக்கம் என்ற தலைப்பில் வெளியான இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் கண்டுபிடிப்பை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக 30 மினி போஸ்டர்கள் DTP அடித்து ஒட்டப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்.

ஃபித்ரா குறித்து மினி போஸ்டர்கள் _ VKP கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை  சார்பாக  20.07.2014 அன்று பித்ரா சம்பந்தமாக பித்ரா தொகையை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக 30 மினி போஸ்டர்கள்  DTP அடித்து ஒட்டப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்...

மார்க்க அறிவுத் திறன் போட்டி _ பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 20.07.14 அன்று ரமளான் இரவு பயானுக்குப் பிறகு மார்க்க அறிவுத் திறன் போட்டியில் கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், சரியான பதிலை அளித்த சிறுமிக்கு சொர்க்கம் நரகம் எனும் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 20.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 20.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.ரஹ்மத்துல்லாஹ் பாகவி அவர்கள் சல்மான் ஃபார்ஸி(ரலி) வாழ்க்கை வரலாறு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 20.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 20.07.2014 அன்று இரவு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், "மஹ்ஷரில் மனிதனின் நிலை” எனும் தலைப்பில் சகோதரி. ஷாலு அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

பெண்களுக்கான சிறப்பு பயான் _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த ஞாயிறு 20-7-2014 அன்று பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் 30 க்கும் மேற்ப்பட்ட   சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ மங்கலம் கிளை - 19.07.14



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், மாநிலப் பொதுச்செயலாளர் சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரபு பயான் _ மங்கலம் கிளை - 17.07.14



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16.07.14 மற்றும் 17.07.14 ஆகிய இரு தினங்கள் இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. 
இதில், சகோ.யாசீன் அவர்கள் இஸ்லாத்தில் இளைஞர்கள் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்...

40 உணர்வு பேப்பர்கள் இலவச விநியோகம் _ மங்கலம் கிளை

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 18.07.2014 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டன.. அல்ஹம்துலில்லாஹ்...

80 உணர்வு பேப்பர்கள் விற்பனை _ மங்கலம் கிளை

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 18.07.2014 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 80 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...