Wednesday 27 March 2019

பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த மனித மிருகங்களை தூக்கிலிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்




பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த மனித மிருகங்களை தூக்கிலிட வலியுறுத்தி 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 18.03.2019 திங்கள்கிழமை மாலை 4.30 மணிக்கு திருப்பூர் காங்கயம் ரோடு CTC அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்ட்த்தில் மாநில பேச்சாளர் சகோதரர். கோவை R. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

தமிழகத்தையே உலுக்கியுள்ள பொள்ளாச்சி சம்பவத்தில் நூற்றுக்கணக்கான அபலைப் பெண்களை காம வெறியர்கள் சிலர் காதல் என்ற பெயரில் தனி இடங்களுக்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்து, அடித்துத் துன்புறுத்தி நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளனர்.

அந்த வீடியோவை வைத்து அப்பெண்களை மிரட்டிப் பணம் பறித்ததுடன் அதை வைத்தே அவர்களை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படாத காரணத்தினால்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

பொள்ளாச்சியில் நிகழ்ந்தது போன்ற பாலியல் கொடூரம் இனியும் நிகழாது இருக்க வேண்டுமென்றால் இதில் தொடர்புடையவர்கள், இதன் பின்னணியில் இருப்பவர்கள் என அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை பார்த்து இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட நினைக்கும் கயவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்பட வேண்டும்.

இவர்களுக்கு பொது மக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும். அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.



மாவட்ட துணைச்செயலாளர் சேக்பரீத் நன்றியுரை ஆற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட பெரிய தோட்டம் குமார்

அலை அலையாக இஸ்லாத்தை நோக்கி...

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையில் 20-3-2019 அன்று குமார் என்கிற சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். 

அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

Thursday 21 March 2019

வடுகன்காளிபாளையம் கிளையின் பொதுக்குழு 20-3-2019

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் பொதுக்குழு 20-3-2019 அன்று இஷா தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் மாவட்ட து.செயலாளர் சகோ.சேக்பரீத் மாவட்ட துணை தலைவர் சகோ.யாஸர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

கிளை தலைவர் - சிக்கந்தர் - 6383215588

கிளை செயலாளர் - யூசுப் - 7708662102 

கிளை பொருளாளர் - இஸ்மாயில் - 6381678934

கிளை துணைத் தலைவர்  - அப்துல் மாலிக் - 9952722404

கிளை துணை செயலாளர் - சுல்தான் - 9788828961

அல்ஹம்துலில்லாஹ்

Sunday 17 March 2019

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக ,
15.03.2019 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6:30 மணி முதல் தாராபுரம் ஜின்னா மைதானம் பகுதியில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சகோதரர். அபூபக்கர் சஅதி அவர்கள் *இஸ்லாமிய குடும்பம்* எனும் தலைப்பிலும்,

சகோதரர். ஜமால் உஸ்மானி அவர்கள் *சீரழியும் இளைஞர்களை சீர்திருத்தும் இஸ்லாம்* எனும் தலைப்பிலும்,உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்



Saturday 9 March 2019

மாவட்ட நிர்வாக குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாராந்திர மாவட்ட நிர்வாக குழு கூட்டம் 08/03/2019 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இன்ஷாஅல்லாஹ் வரும் 31/03/2019 அன்று நடத்தவுள்ள மாவட்ட தர்பியா நிகழ்ச்சியை சிறந்த முறையில் நடத்துவது பற்றி பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது.
மேலும் வருங்கால தாவா பணிகள் நிர்வாக பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Monday 4 March 2019

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ரிஷி _திருப்பூர் மாவட்டம்


அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மர்கஸில் 3/3/2019 அன்று திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியை சார்ந்த சகோதரர் ரிஷி அவர்கள் நேரில் வந்து தனது வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
தனது பெயரை ரபி என்றும் மாற்றிக் கொண்டார்.
இஸ்லாம் பற்றி பல்வேறு விளக்கங்களை ஆர்வமுடன் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் அவர்களிடம் கேட்டறிந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்ட செயற்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயற்குழு 03/03/2019 ஞாயிறு காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
அனைத்து கிளை நிர்வாகிகள், பேச்சாளர்கள் மற்றும் ஜமாஅத் ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டு வருங்காலத்தில் நமது தாவா செயல்பாடுகளை எவ்வாறெல்லாம் அமைத்துக் கொள்ளலாம் என்று கருத்துக்கள், ஆலோசனைகள், வழங்கினார்கள்.
இதில் மாநில மேலாண்மை குழு தலைவர் சகோ. M.S. சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு வருங்கால தாவா பணிகளை வீரியப்படுத்த பல்வேறு ஆலோசனைகள், மற்றும் மக்களின் கருத்துக்களுக்கு விளக்கம் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Friday 1 March 2019

மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனை

கூட்டம் 01/03/2019 அன்று 


மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு, மாவட்ட தர்பியா பற்றி ஆலோசிக்கப்பட்டு தீர்வுகள் ஆலோசனைகள் செய்யப்பட்டது.

மேலும் தாவா பணிகள்  நிர்வாக பணிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்