Saturday 6 June 2015

"அத்துமீறினால் அடங்க மறுப்போம்" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 6/6/15அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "அத்துமீறினால் அடங்க மறுப்போம்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர் கிருஷ்ணராஜ் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக  பிறமத சகோதரர் கிருஷ்ணராஜ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து 1,திருக்குர்ஆன் தமிழாக்கம் 2,அர்த்தமுள்ள இஸ்லாம் 3,வருமுன் உரைத்த இஸ்லாம் 4,மாமனிதர் நபிகள் நாயகம் 5,மனிதனுக்கேற்ற மார்க்கம் 6,அர்த்தமுள்ள கேள்விகள் !அறிவுப்பூர்வமான பதில்கள் ! 7,என்னை கவர்ந்த இஸ்லாம் (DVD - 2) 8,அற்புத பெரு விழாக்களில் நடப்பது என்ன? (DVD- 1 ) ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது .

மாவட்ட நிர்வாக செலவினங்களுக்காகரூபாய் 500/- நிதியுதவி _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 05.06.2015 அன்று   மாவட்ட நிர்வாக செலவினங்களுக்காக ஜூம்மா வசூல் ரூபாய் 500/- நிதியுதவி வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

1யூனிட் A+ அவசர ரத்ததானம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பாக 6/6/15 அன்று சகோதரி. ஜரினாபேகம் அவர்களுக்கு அவசர பிரசவ
 சிகிச்சைக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் கிளை சகோதரர்களால்  1யூனிட்  A+   அவசரரத்ததானம் வழங்கப்பட்டது.

கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் _S.v காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  S.v காலனி கிளை சார்பாக 05-06-15 அன்று கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
 
நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான்  பள்ளியில் ஷூ காலோடு புகுந்து தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இன்ஷா அல்லாஹ்
09-06-15  மதுரையில் நடைபெறவுள்ள  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு   60 பேர் செல்ல 1பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பயண செலவுக்கு உதவி _ யாசின் பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 06.06.2015 அன்று  தூத்துக்குடியில் இருந்து திருப்பூருக்கு அவருடைய நன்பரை பார்க்க வந்த  முஹம்மது அலி என்ற சகோதரர் விஜயாபுரத்தில் வந்து மாட்டிக்கொண்டார். அவருக்கு தூத்துக்குடி  செல்ல டிக்கெட் எடுத்து கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மங்கலம் கிளை புக் ஸ்டால்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 05.06.15 அன்று புக் ஸ்டால் வைக்கப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமிய புத்தகங்கள், டி.வி,டிக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

பிறமத சகோதரிக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் _மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 02-06-15 அன்று அங்கையர் கன்னி என்ற சகோதரிக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்,  ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கோடைகால பயிற்சி வகுப்பு ஆசிரியை, ஆசிரியருக்கு பரிசு _மங்கலம் கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 31.5..15 அன்று மங்கலம் மதரஸாவில்  கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் பயிற்சி அளித்த ஆசிரியை, ஆசிரியருக்கு பரிசு வழங்கப்பட்டது

கோடைகால பயிற்சி வகுப்பு பரிசளிப்பு _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 31.5..15 அன்று மங்கலம் மதரஸாவில் நடைபெற்ற கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சியில் தேர்வான மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

என்னைக் கவர்ந்த ஏகத்துவம் _மங்கலம் கிளை பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 31.5.2015 அன்று சமுதாய விழிப்புணர்வு விளக்கக் பொதுக் கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில் குல்ஜார் நுஃமான் அவர்கள் நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள் என்ற தலைப்பிலும், 
அபுபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் என்னைக் கவர்ந்த ஏகத்துவம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். 
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இணைவைப்புக்கு எதிராக விழிப்புணர்வு மாணவிகள் நாடகம் _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 31.5.2015 அன்று சமுதாய விழிப்புணர்வு விளக்கக் பொதுக் கூட்டம் மற்றும் மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இணைவைப்புக்கு எதிராக
விழிப்புணர்வு மாணவிகள் நாடகம்  நடத்தினார்கள்.

"இரண்டு மரணம்" _யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 05.06.2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "இரண்டு மரணம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

"ரமலானை வரவேற்போம்" காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 4/6/15அன்று சாதிக்பாஷாநகர் பள்ளி வீதியில் இரவு 8-30மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "ரமலானை வரவேற்போம்" எனும் தலைப்பில்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

மாவட்ட நிர்வாக செலவினங்களுக்காகரூபாய் 560/- நிதியுதவி _மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 05.06.2015 அன்று   மாவட்ட நிர்வாக செலவினங்களுக்காக ஜூம்மா வசூல் ரூபாய் 560/- நிதியுதவி வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட மதன் -கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக 04.06.2015 அன்று ஏஞ்சல் இன்ஜினியரிங் கல்லூரியில் 2 ஆம வருடம் பயிலும் திருப்பூரை சேர்ந்த சகோதரர். மதன் அவர்கள் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்..
கிளை சகோதரர்கள் அவருக்கு இஸ்லாமிய அடிப்படை களை எடுத்துச் சொல்லி  மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கினர்...
அல்ஹம்துலில்லாஹ்....