Monday 22 April 2013

பார்வையைஇழந்த பிறமத சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் திருப்பூர் மாவட்டம் 19042013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 19.04.2013 அன்று கண்களின் பார்வையை முற்றிலும் இழந்த பிறமத சகோதரர்.தீனதயாளன்   அவர்கள் நமது மர்கஸில் வருகை தந்து இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன் இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார்.அவற்றை பார்வையுடைய நண்பர்களை படிக்க வைத்து அறிவேன் என கேட்டதிற்கு இனங்க  திருக்குர்ஆன் தமிழாக்கம்,மாமனிதர் நபிகள்நாயகம், அர்த்தமுள்ளகேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள், இதுதான்இஸ்லாம், குற்றச்சாட்டுகளும் பதில்களும் ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

கோடைகால தண்ணீர் பந்தல் _திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை சார்பாக 22.04.2013 அன்று முதல் காலேஜ்ரோடுகிளை பள்ளிவாசல் மஸ்ஜிதுல் முபீன் அருகில் பிரதான சாலையின் ஓரத்தில் பந்தல் அமைத்து கோடைகாலத்தில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் மற்றும் நீர் மோர் ஆகியவற்றை  பொது மக்களுக்கு வழங்கினர்.

"நல்ல மனைவி"_செரங்காடு கிளை பெண்கள் பயான் 20042013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பில் 20.04.2013அன்று  யாசின்-பாபு நகர்பகுதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது.அதில் "நல்ல மனைவி" எனும் தலைப்பில் சகோ.செரங்காடு அப்துல்லாஹ்  அவர்கள் உரைநிகழ்த்தினார்.

V.K.P. கிளை இரத்த தான முகாம் 21042013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை சார்பில்  21.04.2013 அன்று சூலூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் V.K.P. கிளை மற்றும்   திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது.  இதில் 40 சகோதரர்கள்  இரத்த தானம்  வழங்கினார்கள்.


 




 மேலும் அங்கு நடைபெற்ற இரத்த பிரிவு கண்டறியும் முகாமில் 40 க்கும் மேற்பட்டோர் தமது இரத்த பிரிவை அறிந்து இரத்த தானம் வழங்க உறுதி ஏற்றனர்.





"மரணம்" -பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம் -21042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில்  21.04.2013 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் சகோ.அப்துல்லா.M.I.Sc.,அவர்கள் "மரணம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது.

"மரணசிந்தனை " பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம் _21042013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில்  21.04.2013 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் சகோ.சபியுல்லா அவர்கள் "மரணசிந்தனை " எனும் தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது.

"இஸ்லாம் ஓர் அறிமுகம் " -S.V.காலனி கிளை தெருமுனை பிரச்சாரம் _21042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில்  21.04.2013 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "இஸ்லாம் ஓர் அறிமுகம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது.