Monday 21 January 2013

தனி நபர் தஃவா _மங்கலம் _16012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 16-01-2013 அன்று திருப்பூரில் சுன்னத் வல் ஜமாஅத் இமாமாக இருப்பவரின் மகன்கள் மூன்று பேரிடம் மவ்லித் சம்மந்தமாக தனி நபர் தஃவா செய்யப்பட்டது.

தெருமுனைபிரசாரம் _மங்கலம்கோல்டன்டவர் _16012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக16-01-2013 அன்று கோல்டன்டவர்பகுதியில் மாலை 07:00 மணி08:00 முதல் மணி வரை தெருமுனைபயான்நடைபெற்றது. இதில் சகோ.தவ்ஃபிக் அவர்கள் "மவ்லித் ஓர் ஆய்வு" என்ற தலைப்பில் உரையாற்றினார்

பெண்கள் பயான் _யாசின்பாபு நகர் _20012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   
யாசின்பாபு நகர்கிளை சார்பாக  20.01.2013 அன்று மாலை  
யாசின்பாபு நகர்பகுதியில் 
பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர்.பசீர் அவர்கள்
"இறை அச்சம் "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

விபத்து தடுப்பு பேனர்கள் _திருப்பூர் மாவட்ட மருத்துவ அணி _20012013






திருப்பூர் மாவட்ட மருத்துவ அணி சார்பாக மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் 10 விபத்து தடுப்பு பேனர்கள் வைக்கப்பட்டு சமூகவிழிப்புணர்வு பிரச்சாரம்செய்யப்பட்டது.

வாராந்திரபேச்சாளர் பயிற்சி முகாம் _திருப்பூர் மாவட்டம் _20012013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம்   சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால் திருப்பூர் கோம்பைதோட்டம் 
மஸ்ஜிதுர்ரஹ்மான்பள்ளியில் பிரதி ஞாயிறு காலை 7.00மணி முதல் 9.30மணி வரை (முதல்வகுப்பு) உள்ளூர்வாசிகளுக்கும் , 
பிரதி ஞாயிறு காலை 10:00 மணி
முதல்1:00 மணி வரை  
 (இரண்டாம் வகுப்பு) 
வெளியூர்வாசிகளுக்கும்
நடைபெற்றுவருகிறது .
20.01.2013 அன்று   9 ஆவது வாரம்  
பேச்சாளர்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

வாழ்வாதாரஉதவி _திருப்பூர்மாவட்டம் _10000 _20012013

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் சார்பாக 20.01.2013அன்று  திருப்பூரில் செரங்காடு சகோதரர்.தாஜுதீன்  அவர்களுக்கு வாழ்வாதாரஉதவியாக ரூபாய்10000/= வழங்கப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்

வாழ்வாதாரஉதவி _திருப்பூர்மாவட்டம் _20012013

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் சார்பாக 20.01.2013அன்று  திருப்பூரில் வசிக்கும் சகோதரர்.அன்வர் பாஷா அவர்களுக்கு வாழ்வாதாரஉதவியாக ரூபாய்15000/= வழங்கப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

"யார் இவர்" விழிப்புணர்வு பிரச்சாரம் _பிற மத மக்களிடம்தஃவா _மாவட்ட மாணவரணி _20012013

TNTJ திருப்பூர் மாவட்ட மாணவரணி யின் சார்பாக 20.01.2013 அன்று காலை 9.30 முதல் மாலை 3.00மணி வரை
 மாமனிதர் நபிகள் நாயகத்தை பற்றி "யார் இவர்" என்ற    
விழிப்புணர்வு பிரச்சாரம் ,
திருப்பூர் காங்கயம் ரோடு,CTC பஸ் ஸ்டாப் அருகில்  
ஸ்டால் அமைத்து  நடைபெற்றது. 

 







இந்த நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் சம்மந்தமாக "யார் இவர்"பிரசுரம்5000, இஸ்லாம் கூறும்கடவுள் கொள்கை  பிரசுரம்5000, இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறதா? பிரசுரம்5000 இரத்த தான விழிப்புணர்வு பிரசுரம் பிரசுரம்5000 , இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் டிவிடி 150, மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் 40  ஆகியவை  




விழிப்புணர்வு பிரச்சார ஸ்டால், பழைய பேருந்து நிலையம் ,மற்றும் தாராபுரம் ரோடு பேருந்து நிலையம்ஆகிய இடங்களில் 
பிற மத சகோதர்களுக்கு வழங்கி தாவா செய்யப்பட்டது.








 














மேலும் பிற மத சகோதர்களின் சந்தேகங்களுக்கு
திருப்பூர் மாவட்ட பேச்சாளர்கள் சகோ.முஹம்மதுசலீம் ,சகோ.சேக்அப்துல்லாஹ் ,சகோ.சபியுல்லாஹ் ,சகோ.சாஹிது ஒலி ,சகோ.ராஜா ஆகியோர் மூலமாக விளக்கமளிக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

"மது ஒரு சமூக தீமை " _தெருமுனை பிரசாரம் _காலேஜ்ரோடு _20012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   காலேஜ்ரோடு  கிளை சார்பாக  20.01.2013 அன்று மாலை  
காலேஜ்ரோடு G.K.கார்டன்பகுதியில் 
 தெருமுனை பிரசாரம்நடைபெற்றது. 
இதில் சகோதரர்.தமீம். M.I.SCஅவர்கள்
"மது ஒரு சமூக தீமை "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

வெங்கடேஷ் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு முஹமது பைஸல் _திருப்பூர் மாவட்டம் _20012013

திருப்பூர் மாவட்டம் சார்பாக 20.01.2013 அன்று வெங்கடேஷ் என்ற சகோதரர்.  தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை முஹமது பைஸல்  என்று மாற்றி கொண்டார்.
அவருக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர்.அவர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கம்,இஸ்லாமிய அடிப்படையை அறிய புத்தகங்கள் மற்றும் dvd வழங்கி தாவா செய்தார்.

"மவ்லித்" பெண்கள் பயான் _காலேஜ்ரோடு _20.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   
காலேஜ்ரோடு  கிளை சார்பாக  20.01.2013 அன்று மாலை  
காலேஜ்ரோடு G.K.கார்டன்பகுதியில் 
பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி.மதினா அவர்கள்
"மவ்லித்"என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள். 

"மவ்லிது ஓதினால் நிரந்தர நரகமே " நோட்டீஸ் _V.K.P _20.01.2013

திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை சார்பாக 20.01.2013 அன்று
V.K.P பகுதியில் வீடுவீடாக சென்று 
"மவ்லிது ஓதினால் நிரந்தர நரகமே " எனும் நோட்டீஸ் மற்றும் "சுபஹானமவ்லிது ஓர் பார்வை"  எனும் நோட்டீஸ்  விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது

மாவட்ட தொண்டரணி ஆலோசனை கூட்டம் _20012013

திருப்பூர் மாவட்ட தொண்டரணி ஆலோசனை கூட்டம்
திருப்பூர் மாவட்ட தலைமை மர்கஸில் 20.01.2013 அன்று
மாவட்ட தொண்டரணி செயலாளர் சகோ.முஜிபுர்ரஹ்மான் தலைமையில் மாவட்டகிளைகளின் தொண்டரணி உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில்
தொண்டரணி செயல்பாடுகளை வீரியப்படுத்த
மாவட்டம் சார்பில் நடத்தப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தொண்டரணி பங்களிப்பு செய்வது என்றும்,
தொண்டரணி உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய ஜிம் மாவட்ட தலைமையில் உருவாக்குவது என்றும்,
மற்றும் பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட தொண்டரணி செயலாளர் வழங்கினார்.