Tuesday 25 December 2012

தர்ஹாக்களில் நடப்பது என்ன ? கேசட் தஃவா



 நீங்களும் செய்யலாமே
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக நவம்பர் முழுவதும் தர்ஹாக்களில் நடப்பது என்ன என்ற கேசட்டை மங்கலம் நால்ரோடு, காயிதேமில்லத் நகர், ஜக்கரியா காம்பவுன்ட், R.P.நகர், கொள்ளுக்காடு, கணபதிபாளையம் ரோடு, சின்ன பள்ளிவாசல், கோல்டன் டவர், EB.ஆபிஸ் அருகில், ஸ்டார்நகர்,சின்னவர் தோட்டம், இந்தியன் நகர், அன்பு இல்லம், வடுகன்காளிபாளையம், 
ஆகியபகுதிகளுக்கு சென்று சலுகை விலை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது 
(குறிப்பு : இலவசமாக கொடுத்தால் மக்கள் அலட்சியமாககருதுவார்கள்
என்பதால் சலுகை விலைக்கு விற்பனை செய்யப்பட்டது) 
இவ்வாறு விற்பனை செய்ததால் ஆர்வத்தோடு மக்கள் கேசட்டை வாங்கிச் சென்றார்கள்
300கேசட்கள் இவ்வாறாக விற்பனை செய்யப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

இஸ்லாம் ஒர் இனியமார்க்கம் _ உடுமலை _23122012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக   23.12.2012 அன்று உடுமலையில் நடைபெற்ற "இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" நிகழ்ச்சியில்
ஏராளமான பிறமத மற்றும் பிறகொள்கை சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு அவர்களின் இஸ்லாம் மார்க்கம் குறித்த
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு
சகோ.பக்கீர் முஹமது அல்தாபி அவர்கள் ,
தெளிவான பதில் மூலம் சத்திய இஸ்லாத்தினை எடுத்துரைத்தார்.
 இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான இஸ்லாமிய
சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டனர்.


கலந்து கொண்ட சகோதர சகோதரிகளுக்கு "இஸ்லாம்கூறும்கடவுள்கொள்கை " ,யார் இவர்?
ஆகிய துண்டு பிரசுரங்கள் , 
"அறிவை இழப்பதற்கா ஆன்மிகம் ",யார்கடவுள்?  மற்றும்  "மனிதன் கடவுளாக முடியுமா?" ஆகிய DVD கள் ,
 மற்றும் "மாமனிதர் நபிகள் நாயகம் " புத்தகம் வழங்கப்பட்டது.

உடுமலை கிளை சகோதரர்கள் திருப்பூர் மாவட்ட சகோதரர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்தினர்.

மேலும் இந்த நிகழ்ச்சி  
TNTJ web master சகோ.S.M.அப்பாஸ் அவர்களால் onlinepj.com இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால்,
உலகமெங்கும் ஏராளமானோர் கண்டு பயன்பெற்றனர்.
குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் உள்ளூர் கேபிள் டிவியில்
நேரடி ஒளிபரப்பு  செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

பேச்சாளர் பயிற்சிவகுப்பு _மங்கலம் _23-12-2012



தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை மாணவர்அணியின் சார்பாக 23-12-2012 அன்று பேச்சாளர் பயிற்சிவகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர்.பிலால்அவர்கள் "பெற்றோரைபேணுவோம்" என்றதலைப்பிலும், சகோதரர்.யூனுஸ்அவர்கள்"குர்ஆன்இறைவேதமே" என்றதலைப்பிலும், சகோதரர்.அப்துர்ரஹ்மான்அவர்கள் "இஸ்லாம் இறைமார்க்கமே"என்றதலைப்பிலும், சகோதரர்இத்ரீஸ்அவர்கள் "வெற்றியாளர்கள்யார்?"என்றதலைப்பிலும், சகோதரர்.சம்சுதீன்அவர்கள் "மதுவைஒழித்தஇஸ்லாம்"என்றதலைப்பிலும்,உரையாற்றினார்கள்.(அல்ஹம்துலில்லாஹ்)