Tuesday 10 February 2015

2யூனிட் அவசர இரத்த தானம் - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர்மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பில் 06.02.2015  அன்று அவசர இரத்த தேவைக்கு கிளை சகோதரர்கள் 2யூனிட் O+ ரத்தம்  வழங்கப்பட்டது.

"நற்பண்புகளுடன் வாழ்வோம்" _காலேஜ் ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 09.02.2015 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "நற்பண்புகளுடன் வாழ்வோம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...

"சீராக்கப்படும் கை விரல் ரேகை " _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 09.02.2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "சீராக்கப்படும் கை விரல் ரேகை " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

" குர்ஆனோடு தொடர்பு " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-02-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " குர்ஆனோடு தொடர்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 09-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

(4) மங்கலம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற வெள்ளிங்கிரி குடும்பத்தார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் 09.02.2015 அன்று சகோதரர்.வெள்ளிங்கிரி தமது குடும்பத்துடன்  தூய இஸ்லாத்தை ஏற்று தமது பெயர்களை  வெள்ளிங்கிரி – அப்துல் மாலிக் ஆகவும், அமுதா-ஆயிஷா பாத்திமா ஆகவும்,ஜீவகிரி-சாமிரா பானு  ஆகவும், சூரியகிரி-ஆமிரா பானு ஆகவும், பெயரை மாற்றிக்கொண்டனர்.
கிளை நிர்வாகிகள் அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை விசயங்களை தெரிவித்தனர்..

அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர் மகாலிங்கம் அவர்களுக்கு புத்தகம் வழங்கி இஸ்லாம் குறித்து தாவா _Ms நகர்கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 09-02-15அன்று ஜெயவர்சினி பேக்கரி உரிமையாளர் பிறமத சகோதரர் மகாலிங்கம் அவர்களுக்கு   "மனிதனுக்கேற்றமார்க்கம் " புத்தகம் வழங்கி 
இஸ்லாம் குறித்து  தாவா செய்யப்பட்டது..