Wednesday 18 June 2014
"பரிந்துரை பயன் தருமா?" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 18.06.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "பரிந்துரை பயன் தருமா?" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
பரிந்துரை பயன் தருமா?.
பரிந்துரை பயன் தருமா?.
மறுமையில் ஒருவருக்காக மற்றவர் பரிந்துரை செய்ய இயலுமா? என்பதில் மூன்று வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன.
1. அறவே பரிந்துரை கிடையாது.
2. நல்லடியார்களும், நபிமார்களும் விரும்பியவர்களுக்குப் பரிந்துரை செய்வார்கள்.
3. நிபந்தனையுடன் பரிந்துரை உண்டு.
இம்மூன்று கருத்துக்களில் முதல் இரண்டு கருத்துக்களும் குர்ஆனைப் பற்றிப் போதிய அறிவு இல்லாதவர்களின் கருத்தாகும்.
திருக்குர்ஆன் 2:48, 2:123, 2:254, 6:51, 6:70, 6:94, 26:100, 32:4, 36:23, 39:43,44, 74:48 ஆகிய வசனங்களை மட்டும் காண்பவர்கள் மறுமையில் பரிந்துரை என்பதே இல்லை எனவும், பரிந்துரை பயன் தராது எனவும் கூறுகின்றனர்.
பரிந்துரை இல்லை என்ற கருத்தில் சில வசனங்களும், பரிந்துரை இருக்கிறது என்ற கருத்தில் சில வசனங்களும் உள்ளன. இருந்தாலும் முரண்பட்ட இந்த இரண்டையும் இணைக்கும் வகையில் பரிந்துரைக்கு சில நிபந்தனைகள் உள்ளன என்று கூறும் வசனங்களும் உள்ளன. இவ்வசனங்கள் இந்த முரண்பாட்டை நீக்குகின்றன.
அவன் அனுமதியின்றி யார் பரிந்துரைக்க முடியும்? (திருக்குர்ஆன் 2:255)
அவன் அனுமதி பெறாமல் எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. (திருக்குர்ஆன் 10:3)
ஆகிய வசனங்களில் இருந்து இறைவனிடம் அனுமதி பெறாமல் பரிந்துரை செய்ய முடியாது என்பதை அறியலாம். இறைவன் இதற்கு அனுமதியளிக்க மாட்டான் என்றால் இவ்வாறு கூற மாட்டான்.
அவன் பொருந்திக் கொண்டவர்களுக்கே தவிர அவர்கள் பரிந்துரை செய்யமாட்டார்கள். (திருக்குர்ஆன் 21:28)
ரஹ்மானிடம் உடன்படிக்கை எடுத்தவர் தவிர மற்றவர்கள் பரிந்துரைக்கு உரிமையாளர் அல்லர். (திருக்குர்ஆன் 19:87)
அவன் யாருக்கு அனுமதி அளிக்கின்றானோ அவருக்கே தவிர மற்றவர்களுக்குப் பரிந்துரை பயன் தராது. (திருக்குர்ஆன் 20:109)
அவன் யாருக்கு அனுமதி அளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை பயன் தராது. (திருக்குர்ஆன் 34:23)
சத்தியத்துக்குச் சாட்சி கூறியவர்கள் தவிர மற்றவர்கள் பரிந்துரைக்கு உரிமையாளராக மாட்டார்கள். (திருக்குர்ஆன் 43:86)
தான் நாடியவருக்கு அல்லாஹ் அனுமதியளித்த பின்பே தவிர அவர்களுக்குப் பரிந்துரை பயன் தராது. (திருக்குர்ஆன் 53:26)
சிலருக்குப் பரிந்துரை செய்ய அனுமதியளிக்கப்படும் என்பதையும், அந்தப் பரிந்துரை பயன் தரும் என்பதையும் இவ்வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
குர்ஆனைப் பற்றி போதிய அறிவு இல்லாத ஒரு சிறு கூட்டத்தினர் மறுமையில் பரிந்துரை இல்லை எனக் கூறுகின்றனர். அது தவறு என்பதற்கு இவ்வசனங்கள் போதிய சான்றாகும்.
எவரது பரிந்துரையும் இன்றி நல்ல மதிப்பெண் பெற்று எடுத்த எடுப்பிலேயே சொர்க்கம் செல்லத்தான் ஒவ்வொருவரும் விரும்ப வேண்டும். அதைத்தான் இறைவனிடம் கேட்க வேண்டும்.
"என் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும் கூறினார்கள்.
மறுமையில் அல்லாஹ் யாருக்கு அனுமதியளிப்பான் என்பது யாருக்கும் தெரியாது. எனவே "மகானே! எனக்கு மறுமையில் பரிந்துரை செய்யுங்கள்'' என்று இங்கே வாழும் போது கேட்கக் கூடாது. அது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும்.
மக்காவில் வாழ்ந்தவர்கள் இவ்வாறு பரிந்துரை வேண்டிய காரணத்தினால் தான் இணைவைப்போர் ஆனார்கள். (பார்க்க திருக்குர்ஆன் 10:18)
யார் பரிந்துரை செய்வார் என்பது மட்டுமின்றி யாருக்காகப் பரிந்துரை செய்யலாம் என்பதையும் அல்லாஹ் தான் தீர்மானிப்பான் என்பதால் பரிந்துரையை யாரிடமும் வேண்டக் கூடாது.
அல்லாஹ்வே நம்மை மன்னிக்க முடிவெடுக்கும் போது ஒருவரை அழைத்து "இவருக்குப் பரிந்துரை செய்'' என்பான். பெயரளவில் தான் இது பரிந்துரையே தவிர தீர்மானம் அல்லாஹ்விடத்தில் மட்டுமே உள்ளது.
(பார்க்க புகாரி: 99, 335, 448, 3340, 4476, 4712, 6304, 6305, 6565, 6566, 6570, 7410, 7440, 7474, 7509, 7510)
தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 79, 83, 100, 104, 121, 122, 140, 141, 193, 213, 215, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளைக் காண்க!
"ரமலானில் நாம் செய்யவேண்டிய நன்மைகள்" தர்பியா நிகழ்ச்சியில் அனுப்பர்பாளையம் கிளை சகோதரர்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்
கிளை சார்பில்
S.V. காலனி கிளையில் 15.06.2014 அன்று சகோதரர் H.M.அஹமதுகபீர் அவர்கள் "ரமலானில் நாம் செய்யவேண்டிய நன்மைகள்" எனும்
தலைப்பில், உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கி நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சியில் 8 சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்..
கிளை சார்பில்
S.V. காலனி கிளையில் 15.06.2014 அன்று சகோதரர் H.M.அஹமதுகபீர் அவர்கள் "ரமலானில் நாம் செய்யவேண்டிய நன்மைகள்" எனும்
தலைப்பில், உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கி நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சியில் 8 சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்..
Subscribe to:
Posts (Atom)