Thursday, 14 February 2013

பிப்ரவரி14 சமூகசீரழிவு தினம் _நோட்டீஸ்விநியோகம் உடுமலை _13022013




திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 13.02.2013 அன்று
பிப்ரவரி14 சமூகசீரழிவு தினம்  
எனும்நோட்டீஸ் 2000 உடுமலை நகரின் முக்கிய பகுதிகளில் இளைஞர்கள்,பெண்கள் மத்தியில் விநியோகம் செய்து
சமூக சேவை மற்றும் தாவாசெய்யப்பட்டது.

வாழ்வாதாரஉதவி _உடுமலை _14022013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 14.02.2013 அன்று
கோவை மாவட்டம் கொள்ளுப் பாளையம் சகோதரர்.முஹம்மதுஅன்சாரி குடும்பத்தாருக்கு
ரூபாய். 2000 வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது.

"எச்சரிக்கை -கற்பு கொள்ளையர் தினம்" _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _13022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 13.02.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம்  பகுதியில்   தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது 
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ்   அவர்கள் 

"எச்சரிக்கை -கற்பு கொள்ளையர் தினம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.

Wednesday, 13 February 2013

இஸ்லாத்தை ஏற்ற திருப்பூர் மேனகா _ஆயிஷா ஆக _திருப்பூர் மாவட்டம் _13022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 13-02-2013 அன்று திருப்பூர்  காந்தி நகர் பகுதியை சேர்ந்த பிற மத சகோதரி.மேனகா என்பவர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை ஆயிஷா  என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு இஸ்லாத்தின் அடிப்படைகளை திருப்பூர் மாவட்ட செயலாளர் ஜாகிர்அப்பாஸ்அவர்கள்  விளக்கம் அளித்தார்.(அல்ஹம்துலில்லாஹ்)

செரங்காடு மணிகண்டன் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம் _திருப்பூர் மாவட்டம் _12022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில்  
12.02.2013 அன்று திருப்பூர் மாவட்டம் செரங்காடு  பகுதியை சேர்ந்த  பிற மத சகோதரர்.மணிகண்டன்   அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் , அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள்  இஸ்லாமிய அடிப்படைகள் குறித்து தாவாசெய்து, வழங்கப்பட்டது.

"தொழுகையின் அவசியம் " _பெண்கள் தர்பியா _தாராபுரம் _10022013

தாராபுரம்  கிளை சார்பாக.  10.02.2013 அன்று
தாராபுரம்  கிளை மஸ்ஜிதுர்ரஹ்மான் மர்கஸில் பெண்கள் தர்பியா நடைபெற்றது. 
"தொழுகையின் அவசியம் " எனும் தலைப்பில்
சகோதரி.குர்ஷித்ஆலிமா அவர்கள் பயிற்சி வழங்கினார்.

பெண்கள்பயான் _வெங்கடேஸ்வரா நகர் _10022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 10.02.2013 அன்று மாலை வெங்கடேஸ்வரா நகர் மதரசதுத்தக்வா வில் பெண்கள்பயான் நடைபெற்றது. இதில் மதரசா ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
ஏராளமான பெண்கள் தமது குழந்தைகளுடன்
இந்த மார்க்க விளக்க சொற்பொழிவில் கலந்து கொண்டனர்.

சகோதரர்.ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம்" வழங்கி தாவா _உடுமலை _11022013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 11.02.2013 அன்று
உடுமலை பிற மத சகோதரர்.ஸ்ரீனிவாசன்  அவர்களுக்கு
"திருகுர்ஆன் தமிழாக்கம்" வழங்கி தாவா செய்யப்பட்டது

சகோதரர்.ஜேம்ஸ் _க்கு "திருகுர்ஆன் தமிழாக்கம்" வழங்கி தாவா _வெங்கடேஸ்வரா நகர் _11022013


TNTJ திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பில் 11.02.2013 அன்று கிருத்துவ சமயத்தை சார்ந்த சகோதரர்.ஜேம்ஸ் என்பவருக்கு
"திருகுர்ஆன் தமிழாக்கம்" வழங்கி தாவா செய்யப்பட்டது .மேலும் அவருடைய சந்தேகங்களுக்கு பதில் கொடுக்கப்பட்டது.....
அல்ஹம்துலில்லாஹ்.....

சகோதரர்.ஆறுமுகம் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம், இஸ்லாமிய அடிப்படைபுத்தகங்கள் வழங்கி தாவா_திருப்பூர்மாவட்டம்_12022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  
12.02.2013 அன்று திருப்பூர் மாவட்டம் M.S.நகர் பகுதியை சேர்ந்த 
பிற கொள்கைசகோதரர்.ஆறுமுகம்  அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் , அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமானமற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள்  இஸ்லாமிய அடிப்படைகள் குறித்து தாவாசெய்து, வழங்கப்பட்டது.
(குறிப்பு:இவர் தீவிர பெரியாரிஸ்ட் இதன் காரணமாக இவருடைய வீட்டிற்க்கு பெரியார் இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறார்.)

Monday, 11 February 2013

"குழந்தைகளை கண்காணிப்பதும்,அக்கறையே,அவசியமே " _தெருமுனை கூட்டம்_திருப்பூர் மாவட்டம்_10022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  காதலர் தினம் எனும் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 10.02.2013 அன்று மாலை   திருப்பூர்  பெரிய கடை வீதி டூம்லைட்மைதானம்  பகுதியில்   தெருமுனை கூட்டம்  நடைபெற்றது   இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ்  அவர்கள்  
"குழந்தைகளை கண்காணிப்பதும்,அக்கறையே,அவசியமே " எனும் தலைப்பில் உரையாற்றினார்.

"மனித சமுதாயத்திற்கு இஸ்லாம் கூறும்கற்பொழுக்கம் "_ தெருமுனை கூட்டம் _திருப்பூர் மாவட்டம் _10022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 
காதலர் தினம் எனும் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக

10.02.2013
அன்று மாலை   திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியில்  
தெருமுனை கூட்டம் 
நடைபெற்றது 
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹம்மது ஹுசைன்  அவர்கள்  
"மனித சமுதாயத்திற்கு இஸ்லாம் கூறும்கற்பொழுக்கம் "
எனும் தலைப்பில்உரையாற்றினார்.

பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம் _திருப்பூர் மாவட்டம் _10022013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  காதலர் தினம் எனும் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 10.02.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம்  CTCபேருந்து நிலையம்  பகுதியில்   தெருமுனை கூட்டம்  நடைபெற்றது 
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.சேக் பரீத்  அவர்கள் "பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம்" எனும் தலைப்பில்உரையாற்றினார்.

"உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?" _தெருமுனை கூட்டம் _திருப்பூர் மாவட்டம் _10022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  காதலர் தினம் எனும் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 10.02.2013 அன்று மாலை   திருப்பூர்  வெங்கடேஸ்வரா நகர் பகுதியில்   தெருமுனை கூட்டம்  நடைபெற்றது 
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹமது சலீம் அவர்கள்

"உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

பிற மத சகோதரர்.சேரன் அவர்களுக்கு இஸ்லாமிய கொள்கை வழங்கி தாவா _M.S.நகர் _10022013

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில்  

10.02.2013 அன்று திருப்பூர் மாவட்டம் M.S.நகர் பகுதியை சேர்ந்த  

 பிற மத சகோதரர்.சேரன் அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்து தாவாசெய்து

 இஸ்லாமிய கொள்கை புத்தகங்கள்   வழங்கப்பட்டது.

மாவட்ட கண்காணிப்பு _காலேஜ்ரோடு கிளை _திருப்பூர் மாவட்டம் 10022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக  மாவட்ட கண்காணிப்பு மஸ்வரா
 10.02.2013 அன்று காலேஜ்ரோடு கிளை , மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் மாவட்ட நிர்வாகிகள்  சகோ. முஹம்மது சலீம்,மற்றும் சகோ.அலாவுதீன் கலந்து கொண்டு காலேஜ்ரோடு கிளை செயல்பாடுகளை கேட்டு அறிந்தும் ,வருங்கால செயல் திட்டங்களுக்கு ஆலோசனையும் வழங்கி மஸ்வரா நடைபெற்றது.

"இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு " _தெருமுனை பிரச்சாரம் _காலேஜ்ரோடு _10022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   காலேஜ்ரோடு  கிளை சார்பாக  10.02.2013 அன்று காலேஜ்ரோடு G.K. கார்டன் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர்.பதுருதீன்   அவர்கள்  
"இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு  "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .

"மறுமைநாள் " _பெண்கள்பயான் _காலேஜ்ரோடு _10022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   காலேஜ்ரோடு  கிளை சார்பாக  10.02.2013 அன்று காலேஜ்ரோடு G.K. கார்டன் பெண்கள்பயான் நடைபெற்றது.இதில் சகோதரி.மதீனா  அவர்கள் "மறுமைநாள் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .

அல்குர்ஆன் _தர்பியா _காலேஜ்ரோடு _07022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   காலேஜ்ரோடு  கிளை சார்பாக  07.02.2013 அன்று
காலேஜ்ரோடு மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் தர்பியா நடைபெற்றது.
இதில் சகோதரி.கோவை சமீனா  அவர்கள் அல்குர்ஆன் விளக்கவுரை வழங்கினார்.

"ஒழுக்கம்" _பெண்கள் பயான் _M.S.நகர் _10022013


திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை

சார்பாக 10.02.2013அன்று

M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்    
பெண்கள் பயான் நடைபெற்றது. 

இதில் சகோதரர். ரசூல்மைதீன் 

அவர்கள் "ஒழுக்கம்" என்ற 

தலைப்பில்  உரையாற்றினார்

"அல்லாஹுவை நம்புவது எப்படி? " _தர்பியா _10022013

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில்  10.02.2013அன்று M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் தர்பியா
"அல்லாஹுவை நம்புவது  எப்படி? " எனும் தலைப்பில்  சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் நடத்தினார்கள்.

Sunday, 10 February 2013

TNTJ மாணவரணி மாநில தர்பியா முகாமில் _திருப்பூர் மாவட்டம் _10022013

TNTJ மாணவரணி சகோதரர்களுக்கான மாநில அளவிலான  
முதல் தர்பியா முகாம் சென்னை டி.நகரில்  10.02.2013  நடைபெறுகின்றது. இதில் மாநிலத்தலைவர் பி.ஜைனுல் ஆபிதின் உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும், மாநில,  மாவட்ட, கிளை மாணவரணி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். 









இந்த மாணவரணி மாநில தர்பியா முகாமில் திருப்பூர் மாவட்டம் சார்பில் 52 மாணவரணி  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 9 February 2013

மருத்துவ உதவி _தாராபுரம் _08022013

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பாக 08.02.2013 அன்று
தாராபுரம் பகுதியை சேர்ந்த   சகோ.அப்துல் பாரி அவர்களின் (கிட்னிபாதிப்பு) மருத்துவ செலவினகளுக்காக  
தாராபுரம் பள்ளியில் ரூ.2300 /=
ஜும்மாஹ் வசூல் செய்து மருத்துவ உதவி வழங்கப்பட்டது

சரவணகுமார் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம்" _உடுமலை _08022013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 08.02.2013 அன்று
உடுமலை பிற மத சகோதரர்.சரவணகுமார்  அவர்களுக்கு
"திருகுர்ஆன் தமிழாக்கம்" வழங்கி தாவா செய்யப்பட்டது

Friday, 8 February 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _பெரிய கடைவீதி _08022013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ,பெரிய கடைவீதி கிளை சார்பில்  08.02.2013 வெள்ளி அன்று திருப்பூர்,M.K.M.ரைஸ் மில் காம்பவுண்ட் ,அல்மதரஸதுத்தவ்ஹீத் வளாகத்தில்



இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. 




இஸ்லாமிய மார்க்கம் குறித்த முஸ்லிம்களின் சந்தேகங்களுக்கு  சகோ.ரஹ்மத்துல்லாஹ்.M.I.Sc அவர்கள் பதில் வழங்கினார்.