Tuesday 18 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு -2017

அல்லாஹ்வின் பேரருளால் சிறப்பாக நடைபெற்ற முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு அல்ஹம்துலில்லாஹ் ,

திருப்பூர் மாவட்டம்,மங்கலத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு நடைபெற்றது,இதில் ,மாவட்ட தலைவர் சகோ அப்துர்ரஹ்மான் தலைமையிலும் மாநில நிர்வாகிகள் முன்னிலையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது,

திருப்பூர் மாவட்ட கிளை மதரஸா மாணவ.மாணவிகளின் உரையுடன் மாநாடு ஆரம்பமானது ,
மாநில செயலாளர் M.S.சுலைமான் அவர்கள் எதிர்ப்பை வென்ற ஏகத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,பிறகு மஃரிப் தொழுகைக்காக நேரம் ஒதுக்கப்பட்டது,

மஃரிப் தொழுகைக்குப் பிறகு மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ.அப்துல் கரீம் அவர்கள் வஹீ மட்டுமே மார்க்கம் என்ற தலைப்பில் அசத்தியவாதிகளின்  வஹீ செய்திகளுக்கு எதிரான கருத்துகளை வீடியோ கிளிபிங்குகளுடன் தோலுரித்திக்காட்டினார்கள்,

மாநாட்டின் இறுதி நிகழ்வாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மூத்த மார்க்க அறிஞர் பி ஜெ அவர்கள் மத்ஹபு மார்க்கமாகுமா என்ற தலைப்பில் மத்ஹபில் உள்ள மார்க்கத்திற்கான மாற்றமான கருத்துகளை மக்களுக்கு விளங்கும் வகையில் எளிமையான முறையில் விளக்கிக்கூறினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் , மாவட்ட துணைச்செயலாலர் முஹம்மது ஹுசைன் அவர்கள் மாநாட்டு தீர்மானங்களை வாசித்தார்கள்,இறுதியாக மாவட்ட துணைத்தலைவர் அப்துர் ரஹ்மான அவர்கள் நன்றியுரை கூறினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்




























இம்மாநாட்டு நிகழ்வில் அதிகமான ஆண்களும்,பெண்களும் பெரும் திரளாக கலந்துகொண்டனர்,
 சிறப்பம்சம் : இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கைக்கு மாற்றமான கொள்கையில் உள்ளவர்கள் கூட தங்கள் நிலைபாட்டை மறந்து இம்மாநாட்டில் கலந்துகொண்டது அல்லாஹ்வின் அருளால் நாம் எடுத்துச்சொல்லக்கூடிய கொள்கை எவ்வளவு உண்மையானது என்று உணரவைத்து நாம் ஏகத்துவ பணிகளில் வீரியம் காட்டுவதற்கு ஒரு தூண்டுதலாக இருந்தது, எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே,