Monday, 5 December 2011

மதுவை அளவாக குடிப்பது இதயத்திற்கு நல்லதா!?


மதுவை அளவாக குடிப்பது இதயத்திற்கு நல்லதா!? 
மது என்பது மனிதனின் அறிவை இழக்க செய்து மிருகமாக மாற்றக் கூடியது. மதுவுக்கு அடிமையாகி விட்டவர்களும் மதுவை விட முடியாதவர்களும் 'நான் மருந்துக்காக பயன்படுத்துகிறேன்' என்று சப்பைக்கட்டு கட்டுவதுண்டு. சில மருத்துவர்கள் மதுவை அளவாக குடிக்கச் சொல்லி பரிந்துரைக்கிறார்கள் என்றும் கூறுவதுண்டு. ஆனால் மதுவை அளவாக அருந்தினாலும் அதிகமாக அருந்தினாலும் ஆபத்து தானே தவிர மது ஒரு மருந்து என்பது தவறான கருத்தாகும். இதை அண்மையில் நியூசிலாந்து விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

மதுவை அளவாக குடிப்பது ஆபத்தில்லை என்றும் அவ்வாறு அளவாக குடிப்பது இதய நோய்க்கு மருந்தாகும் என்றும் 1980 களில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது மது உற்பத்தியாளர்களின் ஆதரவின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும் என இந்த விஞ்ஞானிகள் குற்றம் சாட்டுகின்றனர். மதுவை அளவாக குடிப்பது என்பது இதயத்துக்கு பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்படாத கருத்தாகும். ஆனால் அது இதயத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடியது என்பது ஆய்வுகளில் அறியப்பட்ட உண்மை. எனவே மது உற்பத்தியாளர்கள் பரப்பிய பொய் செய்திகளை மக்கள் நம்பி விடக் கூடாதென்றும் ஆல்கஹாலில் இருக்கும் ஒரு சில பயன்பாடுகளை மட்டும் ஆய்வு செய்து அது முற்றிலும் நன்மையானது எனும் முடிவுக்கு வந்துவிடக் கூடாதென்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மது உற்பத்தியாளர்களின் இந்த தவறான தகவலை நம்பி ஆல்கஹால் என்பது டானிக் போன்ற சத்துள்ள உணவு என எவரும் கருதி விடக்கூடாது, அது அதிகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதென்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவ ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்ட இந்த உண்மைகளை நியூசிலாந்து பத்திரிகைகளின் மூலம் விஞ்ஞானிகள் அம்பலப்படுத்தியதால் மது உற்பத்தியாளர்களுக்கு அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது அருந்துபவருடைய குடும்பம் குட்டிச்சுவராகும் என்பதால் தான் மது பாட்டிலில் கூட குடி குடியை கெடுக்கும் என்ற ஸ்டிக்கரையும் அரசு ஒட்டி விற்பனை செய்கிறது. அதை கண்டுகொள்ளாத குடிமகன்கள், விஞ்ஞானிகளின் ஆய்வின் படி 'மது மருந்தல்ல விஷம்' என்பதை இனியாவது உணர்ந்து மதுவிலிருந்து மீள வேண்டும்.

மது மற்றும் சூதாட்டத்தில் பெரும் கேடும், மக்களுக்கு சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும் மறுமையிலும் மிகப் பெரியது.
(திருக்குர்ஆன் 2:219)

மதுவில் சிறு பயன்கள் இருந்தாலும் அதிகமான கேடுகள் இருக்கின்றன என்று இன்று விஞ்ஞானிகள் சொல்வதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் குர்ஆன் மூலமாக அறிவித்துவிட்டதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

நன்றி : உணர்வு

posted by SM.YOUSUF

Thursday, 24 November 2011

அல்லாஹ்வின் உதவியுடன் தனித்து களமிறங்கிய TNTJ



இறைவனின் திருபெயரால்

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர,சகோதரிகளே!
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதன்மையானது திருப்பூர் மாவட்டம் ஆகும். விபரம்  இந்த பாதிப்பு ஏற்பட்டவுடன் திருப்பூர் பகுதியில் இருந்த அனைத்து அமைப்புகளும் களத்தில் இறங்கி வேலைகள் செய்தது எந்த ஒரு அமைப்பும் குறை சொல்ல இயலாத அளவு தங்களால் இயன்ற அளவு வேலைகளை செய்தனர்  எனபது குறிப்பிடத்தக்கது இந்த பெரும் வெள்ள விபத்து நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு  அனைத்து ஜமாத்தும் இணைந்து அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியது . 
இதில் குர்ஆன்,ஹதீஸ் சரியாக சொல்வதால் நம்மை அவர்கள் அழைக்கவில்லை. என்றாலும் நமது கொள்கைக்கும் உறுதிக்கும் அல்லாஹ் வழங்கிய மாபெரும் அருளால் பாதிக்கப்பட்ட மக்களை உடனுக்குடன் சென்று சந்தித்து அவர்களுக்கு உடன் 
தேவைப்பட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் அண்ணாநகர் எனும் பகுதியில் சென்று அந்தப்பகுதியில் சேரும் சகதியுமாக இருந்த வீடுகள் முதற்கொண்டு சென்று சுத்தம் செய்யப்பட்டது. அவர்களுக்கு உணவு,தேனீர்,பிஸ்கட் போன்றவை புதன் இரவு வரை வழங்கப்பட்டது மேலும்

Tuesday, 15 November 2011

திருப்பூரில் வெள்ளம் – நிவாரணப்பணியில் திருப்பூர் TNTJ

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதன்மையானது திருப்பூர் மாவட்டம் ஆகும். நள்ளிரவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கிட்டத்தட்ட 14 பேர் உயிரிழந்தார்கள். ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து வாழ்வாதார அடிப்படை வசதிகூட இல்லாமல் அரசின் எவ்வித உதவியும் கிடைக்காமலும் கடும் பாதிப்புக்குள்ளார்கள்கள். சத்யா நகர், சுகுமார் நகர் ,பெரியதோட்டம் ,அண்ணா நகர் ஆகிய பகுதிகள் மழை வெள்ளத்தால் சேறும் சகதியுமாக தேங்கி நின்றன.
மக்களின் கடும் பாதிப்பைக் கண்ட திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2 நாட்களும் எவ்வித அடிப்படை வசதியும் உணவும் இல்லாமல் தவித்த அந்த மக்களுக்கு உணவு, குடிநீர்,தேனீர் போன்றவைகளை வழங்கி சேவையில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து  அவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி உள்ளிட்ட ஒரு வாரத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வழங்கப்பட்டது . அதுமட்டுமின்றி பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட பொருட்களை வழங்கப்பட்டது .
மேலும் வெள்ளித்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய்கள் ஏதும் வராமல் இருக்க அதற்குரிய தடுப்பூசிகள் போடப்பட்டது.

Saturday, 29 October 2011

”முஸ்லிம்களாக வாழ்வோம் முஸ்லிம்களாக” மங்கலம் கோல்டன் டவர் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 24-10-2011 அன்று மாலை 06:30மணி முதல் 8:00 மணி வரை இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் குழந்தைகள் மதரசாவில் பயிலும் மாணவி முஸ்லிம்களாக வாழ்வோம் முஸ்லிம்களாக மரணிப்போம் என்ற தலைப்பிலும குழந்தைகள் மதரசாவின் ஆசிரியை தொழுகையின் சிறப்பு என்ற தலைப்பிலும் மங்கலம் பள்ளியின் இமாம் குர்ஆனின் சிறப்பு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

posted by SM.YOUSUF

“ஈமான்” மங்கலம் கோல்டன் டவர் சிறுவர்களுக்கான சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 24-10-2011 அன்று காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை புதிதாக துவங்கப்பட்ட மதரசாவில் “ஈமான்” என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான சொற்பொழிவு நடைபெற்றது. இதில் யாசர் அவர்கள் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF

இருதய சிகிச்சைக்காக ரூ 7231 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கொடுவாயூர் பாலக்காட்டைச் சேர்ந்த அப்துல்காதர் என்பவருக்கு கடந்த 14.10.2011 அன்று இருதய சிகிச்சைக்காக (HEART ATTACK) மருத்துவ உதவியாக ரூ 7231 வழங்கப்பட்டது.
posted by SM.YOUSUF

தினந்ததோறும் சொற்பொழிவு நிகழ்ச்சி – மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-10-2011 அன்று முதல் தினமும் இஷா தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் மாலிகுள் முல்க் பள்ளியில் சொற்பொழிவு நடைபெறுகின்றது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது
posted by SM.YOUSUF

”இஸ்லாமிய அடிப்படைக் கல்வி“ மங்கலம் கோல்டன் டவர் மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 16-10-2011 அன்று காலை 9:00 மணிமுதல் 10:00 மணிவரை புதிதாக துவங்கப்பட்ட மதரசாவில் “இஸ்லாமிய அடிப்படைக் கல்வி ” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யாசர் அவர்கள் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF

பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்ப – மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 11-10-2011 அன்று முதல் மஸ்ஜிதுல் மாலிகுல் முல்க் பள்ளியில் பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
posted by SM.YOUSUF

”இஸ்லாத்தை அறிந்துகொள்வோம்” மங்கலம் தெருமுனைப் பிரச்சாரம்

இறைவனின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 16-10-2011 அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை சின்னவர் தோட்டத்தில் “இஸ்லாத்தை அறிந்துகொள்வோம்” என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF

“இஸ்லாத்தின் அடிப்படை” மங்கலம் கோல்டன் டவர் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 17-10-2011 அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை இந்தியன் நகரில் “இஸ்லாத்தின் அடிப்படை ” என்ற தலைப்பில் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவ்பிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF

இறுதய அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 2250 மருத்துவ உதவி

பல்லடத்தில் வசிக்கும் செல்வராஜ் என்ற சகோதரருக்கு இறுதய அறுவை சிகிச்சை செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக கடந்த 14-10-2011 அன்று ரூபாய் 2250 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
posted by SM.YOUSUF

மணி என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் மங்கலம் கிளையில் மணி என்ற சகோதரர் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டி வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 14-10-2011 அன்று அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது
posted by SM.YOUSUF

”வரதட்சனை ஓர் வன்கொடுமை” கோம்பை தோட்டம் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக கடந்த 9-10-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மவ்லவி தாஹா அவர்கள் விரயம் என்ற தலைப்பிலும் ரசுல் மைதீன் அவர்கள் வரதட்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். கலந்து கொண்டவர்களும் கூடி இருந்தவர்களும் கேட்டு பயன் பெற்றனர்.
posted by SM.YOUSUF

Wednesday, 19 October 2011

மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


உள்ளே செல்லும் முன்:


(இணையத்தில் உலாவரும் மக்கள் பெரும்பாலும் தங்களுக்கு தேவையானவற்றையும், விருப்பமானவற்றையும் மட்டும் படித்துவிட்டு சென்றுவிடுவார்கள். (பதிவர்களாகவோ த‌னக்கென ஒரு தளத்தை உடையவர்களாகவோ இல்லாத பட்சத்தில்) அவர்கள் அத்தனை பேருக்கும்'வலைப்பதிவு', 'பதிவர்கள்', 'சமூக தளங்கள்', 'திரட்டி', 'ஓட்டுப்பட்டை'போன்ற விஷயங்கள்பற்றி தெரிந்திருக்குமா என்றால், சிலரைத் தவிர அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நானும் இந்த தளத்தை ஆரம்பிக்கும் முன் எனக்கும் இவை எதுவுமே அறிமுகம் இல்லாமல்தான் இருந்தது. அந்த அடிப்படையில்தான் (இதைப் பற்றி அறியாத, சாதாரணமாக படித்துச் செல்லும் வாசகர்கள் இருந்தால் அவர்களுக்கு ஒரு குழப்பமாக இந்த இடுகை அமைந்துவிடக் கூடாது என்பதால்) கீழ்க்காணும் இந்த சிறு விளக்கம் தேவைப்படுகிறது.

பல்வகை இணைய தளங்களில் ஒன்றான 'ப்ளாக்கர்'(Blogger/Blogspot/Blog)என்பது கூகுள் த‌ரும் ஒரு இலவச தளமாகும். இதனை தமிழில் 'வலைதளம்', 'வலைப்பதிவு', 'வலைப்பூ' என்கிறோம். ஏராளமான இலவச வலைப்பூ சேவைகள் இருந்தாலும் இந்த ப்ளாக்கர் சேவையின் மூலமே பெரும்பாலானவர்கள் வலைப் பதிவுகள் உருவாக்கி, அவரவர் கருத்துக்களையும் பலவித செய்திகளையும், கலைகளையும் மற்றவர்களுடன் இணையத்தில் பகிர்ந்துக் கொள்கிறோம். இப்படிப்பட்ட வலைப் பதிவுகளை எல்லாம் ஒரே இடத்தில் பார்ப்பதற்காக ஒன்று திரட்டித் தரும் இணையத் தளத்திற்குதான்'வலைத் திரட்டி' (சுருக்கமாக 'திரட்டி') என்பார்கள். தமிழ் மொழி வலைப்பதிவுகளுக்கும் பல திரட்டிகள் உள்ளன. குறிப்பாக 'இண்ட்லி', 'உலவு', 'தமிழிஷ்', 'திரட்டி', 'தமிழ் 10', 'தமிழ்ப் பூங்கா', 'தமிழ்வெளி'போன்றவற்றை சொல்லலாம். அவற்றில் ஒன்றுதான் 'தமிழ் மணம்' என்ற திரட்டியுமாகும். சரி, விஷயத்திற்கு வருவோம்.)

சில நாட்களுக்கு முன் இந்த தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவர் பதிவுலகின் சக சகோதரர்களை நாகரிகமற்ற வார்த்தைகளில் உரையாடி இழிவுபடுத்தியமைக்கு முதலில் என் கண்டனங்களை பதிவுச்செய்துக் கொள்கிறேன். 



அதைத் தொடர்ந்து அவர் இட்ட‌ ஒரு பின்னூட்டத்தில், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போதும் எழுத்துப் பரிமாற்றங்களின்போதும் கூறிக்கொள்ளும் 'முகமன்' வார்த்தைகளையும் இழிவுபடுத்திக் கூறியுள்ளதற்காக தமிழ்மணத்திடம் முஸ்லிம்கள் சார்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழ்மண நிர்வாகிகள் சரியான முறையில்விளக்கம் அளிக்காத வரை தமிழ்மணத்தின் மீதான எதிர்ப்பு தொடரும்என்பதை இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறோம்.

இதோ தமிழ்மணத்தின் அந்த நிர்வாகி கக்கிய விஷம்:

//சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்//

தமிழ்மண நிர்வாகிகளே! எங்கள் மார்க்கம் கற்றுத்தந்த, எக்காலத்துக்கும்/ நேரத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு முகமன் வார்த்தையை உங்களில் ஒருவர் கொச்சைப்படுத்துகிறார் என்றால், "இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது"என்பதுபோல் நீங்கள் கண்டும் காணாமலே இருந்துவிடப் போகிறீர்களா? அல்லது ஒரு நிர்வாகத்தின் பொறுப்பான நிர்வாகிகளாக அவர் சார்பில் இஸ்லாமியர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கப் போகிறீர்களா?


தமிழ்மணத்துக்கு ஆதரவு தரும் பதிவர்களுக்கு "ஜாதி/மத வெறியர்கள் பரப்பும் அவதூறுகளைப் புறந்தள்ளி இப்பதிவர் தமிழ்மணம் நிர்வாகத்துக்கு முழு ஆதரவு அளிக்கிறார்" என 'கிரீன் பேஜ்' (green badge) கொடுக்கிறீர்களே... அடுத்தவர்களுக்கு இடையூறு இன்றி அவரவர் மதங்களைப் பின்பற்றிச் செல்பவர்கள் உங்கள் பாஷையில் 'வெறியர்கள்' என்றால், அநாவசியமாக வலிய வந்து ஒரு மார்க்கத்தின் முகமனை கொச்சைப்படுத்துபவர்கள் 'மகா மட்டமான வெறியர்கள்' அல்லவா? அப்படிப்பட்டவர்களைப் புறந்தள்ளி 'ரெட் பேஜ்' கொடுத்து உங்கள் நிர்வாகத்தைவிட்டும் வெளியேற்றத் தயாரா? (எரிகிறதைப் பிடுங்கினால்தானே கொதிக்கிறது அடங்கும்..?)

தமிழ்மண நிர்வாகிகளே! இஸ்லாமிய முகமனை கேலி செய்துவிட்டதால் அதில் மாசு ஏற்படுத்தி விட்டதாக எண்ணிவிடவேண்டாம். ஒருபோதும் அதன் தூய்மை மாறாது. ஆனால் காற்றுக்கு எதிரே துப்பினால் அது முகத்தில்தான் விழும் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்வது தமிழுக்காக செய்யும் சேவை என்று நீங்கள் சொல்வதால், உங்கள் மூலம்தான் எங்கள் பதிவுகள் தூக்கி நிறுத்தப்படும் என்று நாங்கள் நம்பவில்லை. உங்களைப்போல் எத்தனையோ திரட்டிகள் உள்ளன என்பது உங்களுக்கும் தெரியும். பதிவர்களின் ஆதரவும் உங்கள் வளர்ச்சியின் ஒரு பங்கு என்பதும் உங்களுக்கு தெரியும்.ஆகவே....

இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்கும், எங்கள் சகோதர பதிவர்கள் பலரை கேவலப்படுத்தி இருப்பதற்கும் தமிழ்மணமாகிய நீங்களும், சம்பந்தப்பட்ட அந்த நிர்வாகியும் பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே உங்கள் 'ஓட்டுப்பட்டை' தொடர்ந்து எங்கள் பதிவில் நீடிக்கும்; எங்கள் பதிவுகள் உங்கள் திரட்டியில் இணைக்கப்படும். அத்துடன் புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி சொல்லவும் தயங்கமாட்டோம்..!
posted by SM.YOUSUF

Wednesday, 12 October 2011

”வரதட்சனை ஓர் வன்கொடுமை” தலைப்பில் பெரியதொட்டம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதொட்டம் கிளை சார்பாக கடந்த 5.10.2011 புதன் இரவு 9.15 மணிக்கு தெருமுனை பிரசாரம் நடைபெற்றது இதில் வரதட்சணை ஓர் வன்கொடுமை எனும் தலைப்பில் சகோ சதாம் ஹுசைன் (MISC) உரையாற்றினார்.
posted by SM.YOUSUF

வாவிபாளையம் கிளையில் பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளை சார்பாக கடநத் அக்டோபர் 9 / 2011 ஞாயிற்றுகிழமை முதல் பெரியவர்களுக்கான குரான் ஓதும் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. இதில் குரான் ஓதுதல் மற்றும் உச்சரிப்பு ஆகியவை கற்றுத்தரப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
posted by SM.YOUSUF

Tuesday, 11 October 2011

பள்ளி கட்டிட நிதி _நாகை மாவட்ட மஷ்ஜிதூர் நூர் பள்ளி

IMG_0004.jpg
TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 1.10.2011 அன்று  நாகை மாவட்ட மஷ்ஜிதூர்  நூர் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு உதவியாக ரூ 21062 வழங்கப்பட்டது.  அல்கம்துளில்லாஹ்...
posted by SM.YOUSUF

TNTJ வின் உள்ளாட்சி தேர்தல் நிலைபாடு, பத்திரிக்கை செய்தி


















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் சார்பாக TNTJ வின் உள்ளாட்சி தேர்தல் நிலைபாடு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இது கடநத் 24-9-2011 அன்று தினரகன் பத்திரிக்கையில் வெளியானது. மேலும் தினத்தந்தியில் கடந்த 3-10-2011 அன்று வெளியானது.

posted by SM.YOUSUF

மங்கலம் கோல்டன் டவர் கிளையில் மக்தப் மதரஸா



மங்கலம் கோல்டன் டவர் கிளையில் மக்தப் மதரஸா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையில் கடந்த 25-9-2011 அன்று சிறுவர்களுக்கான மக்தப் மதரஸா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு பயின்று வருகின்றனர்.
posted by SM.YOUSUF

தாவா.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆயக்குடி கிராமத்தில் கடந்த 18-9-2011 அன்று தஃவா நிகழ்ச்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்களிடையே ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது. பஷீர் அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.
posted by SM.YOUSUF

Wednesday, 5 October 2011

திருப்பூரில் ரூபாய் 7045 மருத்துவ உதவி



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 10-9-2011 அன்று ஏழை சகோதரியின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 7045 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
posted by SM.YOUSUF

திருப்பூர் மாவட்ட தாயிக்கள் ஆலோசனைக் கூட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட தாயிக்கள் ஆலோசனைக் கூட்டம் கடநத் 18.09.2011 அன்று நடைபெற்றது. இதில் தாயி பொறுப்பாளர் சகோ முஹம்மத் சலீம் அவர்கள் பேச்சாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் எனும் தலைப்பில் உரையாற்றினார். மேலும் தஃவா பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
posted by SM.YOUSUF

மங்கலம்கோல்டன் டவர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கோல்டன் டவர் கிளை சார்பாக கடந்த 17-9-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தவ்ஃபீக் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF

இரத்த தான சேவையை பாராட்டி விருது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட இரத்த தான சேவையை பாராட்டி கடந்த 15-9-2011 அன்று திருப்புர் மாவட்டம் கலக்டர் மதிவாணன் விருது வழங்கினார்கள். இதை மாவட்ட நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.posted by SM.YOUSUF