Thursday 2 April 2015

அல்லாஹ்வுக்குக்கடனா? _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 02.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 75. அல்லாஹ்வுக்கு க்கடனா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.. 

75. அழகிய கடன் என்றால் என்ன?

இவ்வசனங்களில் (2:245, 5:12, 57:11, 57:18, 64:17, 73:20) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுக்குமாறு கூறப்படுகிறது. இஸ்லாம் அல்லாத மதங்களில் கடவுளுக்குக் கொடுப்பது என்றால் வழிபாட்டுத் தலங்களில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துதல் அல்லது பூசாரிகளின் கையில் கொடுத்தல் என்ற கருத்தில் சொல்லப்படுகிறது.
ஆனால் இஸ்லாத்தில் அல்லாஹ்வுக்குக் கொடுத்தல் என்பது ஏழைகளுக்குக் கொடுத்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பள்ளிவாசல் உண்டியலில் போடுவது என்று பொருளில்லை. பொருளாதாரம் சம்பந்தமாக அல்லாஹ்வுடன் தொடர்புபடுத்திக் கூறும் கட்டளைகள் அனைத்துக்கும் தேவையுடைய மனிதர்களுக்கு வழங்குவது என்பதே பொருளாகும்.
அல்லாஹ்வுக்காக ஆயிரம் ரூபாய் செலவு செய்வதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவர் அதை ஏழைகளுக்குத்தான் அளிக்க வேண்டும். அழகிய கடன் என்பதும் இது தான்.
இச்சொற்பிரயோகத்தின் மூலம் இறைவன் இரண்டு செய்திகளைக் கூறுகிறான். "நீங்கள் ஏழைகளுக்காக உதவினால் அதற்கான பிரதிபலனை நான் உங்களுக்குத் தருவேன்; பல மடங்காகப் பெருக்கித் தருவேன்'' என்பது முதலாவது செய்தி.
சிலர், ஒரு ஏழைகளுக்கு உதவி விட்டு அவர்களிடம் நன்றிக் கடன் எதிர்பார்ப்பர்; செய்த உதவிகளைச் சொல்லிக் காட்டுவர்; உதவி பெற்றவனை மட்டமாகக் கருதுவர். இது தவறாகும்.
நாம் உண்மையில் ஏழைகளுக்குக் கொடுக்கவில்லை; அல்லாஹ்வுக்குத் தான் கொடுத்தோம் என்ற எண்ணம் வேரூன்றும் போது இந்தத் தீய எண்ணங்கள் விலகும் என்பது மற்றொரு நன்மையாகும்.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:245, 5:12, 57:11, 57:18, 64:17, 73:20)  http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/75_azakiya_kadan_enral_enna/