Saturday, 15 June 2013

S.V.காலனி கிளை பள்ளிகட்டுமான பணிகளுக்காக ரூ.8411/= நிதியுதவி _திருப்பூர் மாவட்டம் 14062013





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 14.06.2013 அன்று திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை  பள்ளிகட்டுமான பணிகளுக்காக ரூ.8411/= நிதியுதவி செய்யப்பட்டது

"கொள்கை உறுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்" _நல்லூர் கிளை தெருமுனைப்பிரச்சாரம் _13062013


TNTJ திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 13.06.2013அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் பசீர் அவர்கள் "கொள்கை உறுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

உடுமலை கிளையில் இஸ்லாத்தைஏற்ற பிரேம் குமார் ..பாஸில் ஆக _14062013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 14.06.2013 அன்று சகோதரர்.பிரேம் குமார் அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை  பாஸில் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் மற்றும் இஸ்லாமிய கொள்கை விளக்க புத்தகங்கள் உடுமலை  கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

வட்டி இல்லா கடன் உதவி 82 உடுமலைகிளை 13062013


TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 13.06.2013 அன்று வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில் தாராபுரம் சகோதரர். ஷாஜஹான் அவர்களுக்கு ரூ.15,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

Thursday, 13 June 2013

வட்டியை உண்போர் நிரந்தர நரகவாசிகள் _ மங்கலம் கிளை பயான் 13062013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 13.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "வட்டியை உண்போர் நிரந்தர நரகவாசிகள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

ஆதரவு இல்லத்திற்கு ரூ. 26,900/= நிதியுதவி _திருப்பூர் மாவட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பில் 09.06.2013 அன்று  ஒரு சகோதரர் வழங்கிய ஜகாத் தொகை ரூ. 26,900/=ஐ  TNTJ  சார்பாக நடத்தப்பட்டு வரும் சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம்
மற்றும் முதியோர் இல்ல 
செலவினங்களுக்காக

சகோ.கோவை சஹாபுதீன் வசம் திருப்பூர் மாவட்டநிர்வாகிகள் நிதியுதவி வழங்கினர்.

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் _தாயத்து அகற்றப்பட்டது _மங்களம் கிளை_12062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்களம் கிளையின் சார்பாக 12.06.2013அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சிறுமிக்கு தாயத்தின் தீமைகளை விளக்கி தஃவா தாயத்து அகற்றப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

அல்லாஹ் விரும்பும் அமல் _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான் _12062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12.06.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "அல்லாஹ் விரும்பும் அமல்என்ற தலைப்பில் மார்க்க விளக்க  பயான் நடைபெற்றது.

"கல்வியின் அவசியம்" பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம் _12062013


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 12/06/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் அப்துல்லாmisc அவர்கள் "கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்லசெலவினங்களுக்காகநிதியுதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பில் 09.06.2013 அன்று  TNTJ  சார்பாக நடத்தப்பட்டு வரும்
சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம்
மற்றும் முதியோர் இல்ல 
செலவினங்களுக்காக

 திருப்பூர் பகுதியில் உண்டியல் மூலம் வசூல் செய்த தொகை ரூ6170/= ஐ
சகோ.கோவை சஹாபுதீன் வசம் திருப்பூர் மாவட்டநிர்வாகிகள் நிதியுதவி வழங்கினர்.

" தீமை மட்டுமே செய்வோர் நிரந்தர நரகவாசிகள் -மங்கலம் கிளை பயான் -12062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் " தீமை மட்டுமே செய்வோர் நிரந்தர நரகவாசிகள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

"குழந்தை வளர்ப்பு " வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம் _12062013


TNTJ திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 12.06.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் ஜபருல்லாஹ் அவர்கள் "குழந்தை வளர்ப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்

வரதட்சனை _மங்கலம் கிளை தெருமுனை பயான் _11062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11-06-2013 அன்று  தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் மங்கலம் பள்ளி இமாம் சகோ. தவ்ஃபிக் அவர்கள் வரதட்சனை என்ற தலைப்பில் உரையாற்றினார்

"அல்குர்ஆன் " M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு _09062013


TNTJ திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளை சார்பாக 09.06.2013 அன்று M.S.நகர்  மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில்  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.ஆஜம்  அவர்கள் "அல்குர்ஆன் " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு பாடம் நடத்தினார்கள்.

"ஈமானை ஒழுங்கு படுத்தினால் முன் பாவங்கள் மன்னிக்கப்படும்" மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான் _11062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11.06.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "ஈமானை ஒழுங்கு படுத்தினால் முன் பாவங்கள் மன்னிக்கப்படும்" என்ற தலைப்பில் மார்க்க விளக்க  பயான் நடைபெற்றது

"தெளிவுபடுத்தப்பட்டது " காலேஜ்ரோடு கிளை குர்ஆன் வகுப்பு _12062013




TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 12.06.2013 அன்று காலேஜ்ரோடு மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.சஜ்ஜாத்  அவர்கள் "தெளிவுபடுத்தப்பட்டது " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு பாடம் நடத்தினார்கள்.

Tuesday, 11 June 2013

மாப்பிள்ளை தேடவே பூப்பெய்தல் விழா ! சரியா?



கேள்வி:
பெண்கள் பருவமடையும் போது அதை விளம்பரம் செய்தால் தான் பெண் கேட்டு வருவார்கள். இந்த வீட்டில் திருமணத்துக்கு தகுதியான ஒரு பெண் இருக்கிறாள் என்பது அப்போது தான் தெரியும் என்று இதற்கு காரணம் கூறுகிறார்கள். இது சரியா?

பதில்:

முஸ்லிம்களைப் பொருத்த வரை தங்களின் அனைத்து காரியங்களையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் தான் நடத்த வேண்டும். சில காரணங்களை நாமாகக் கற்பணை செய்து கொண்டு சடங்குகளை உருவாக்கக் கூடாது.

பெண்கள் புகுந்த வீட்டில் சிரமப்படுக்ககூடாது என்பதற்காகவே வரத்ட்சணை கொடுக்கிறோம் என்று கூறுவது போலவும், 

கள்ளச் சாராயம் குடித்து சாகக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடை திறந்துள்ளோம் என்பது போலவும் 

எல்லா தவறான காரியங்களுக்கும் காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தக் காரணத்தில் சிறிதும் உண்மை இல்லை.

உலகில் இந்தியா தவிர வேறு நாடுகளில் எல்லாம் பருவ வயது அடைவதற்கு விழாக்கள் இல்லை. அங்கெல்லாம் பெண்களுக்கு வரண் கிடைக்கவில்லையா?

ஆணுக்கு திருமணம் செய்ய எண்ணும் பெற்றோர் எந்த வீட்டில் பெண் இருக்கிறார் என்று விசாரித்துப் பார்த்து பெண் கேட்டு வருவார்கள். அது போல் பெண் வீட்டாரும் விசாரித்துப் பார்த்து மாப்பிள்ளை பேசுவார்கள். பூபெய்தல் விழாவுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.

பெண்ணுக்கு மாப்பிள்ளை அவசியம் என்பது போல் ஆணுக்கும் பெண் அவசியம் தானே? அப்படியானால் எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த ஆண் இருக்கிறான் என்பதற்காக ஏன் விழா நடத்தவில்லை?

கொடுத்த அன்பளிப்பை மொய் எனும் பெயரில் திரும்பப் பெறுவதற்காகவே இது போன்ற விழாக்களை மற்ற மதத்தவர்கள் உருவாக்கினார்கள். 

கொடுத்த அன்பளிப்பை திரும்பக் கேட்கக் கூடாது என்ற கொள்கையுடைய இஸ்லாத்தில் இந்த விழா தேவையற்றது.

" சஹாபிய பெண்களின் தியாகம் " வெங்கடேஸ்வராநகர்கிளை பெண்கள்பயான் _09062013

திருப்பூர் மாவட்டம்வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில்
 09.06.2013அன்று வெங்கடேஸ்வராநகர் மதரசுதுத்தக்வாவில் பெண்கள்பயான் நடைபெற்றது. அதில் " சஹாபிய பெண்களின் தியாகம் "எனும் தலைப்பில் சகோ.சலீம் அவர்கள் உரை நிகழ்த்தினார். பெருவாரியான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இறைவனை நம்பாதவர்களுக்கு நிரந்தர நரகம் _மங்கலம் கிளை பயான் _11062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "இறைவனை நம்பாதவர்களுக்கு நிரந்தர நரகம் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது

மார்க்க சந்தேக கேள்வி - குர்ஆன் ஹதீஸ் ஆதார பதில் நிகழ்ச்சி _மங்கலம் கிளை _10062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10.06.2013 அன்று கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றது 
பள்ளியில் கேள்வி கேட்பதற்கான பெட்டி வைக்கப் பட்டுள்ளது. இதில் மார்க்க சந்தேகங்களை கேட்டு பொது மக்கள் கேள்வி எழுதி போடுவார்கள், அதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் வாரம் தோறும் திங்கள் கிழமை பதில் அளிக்கப்பட்டது.

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் _மங்களம் கிளை_10062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்களம் கிளையின் சார்பாக 10.06.2013அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சிறுவனுக்கு தாயத்தின் தீமைகளை விளக்கி தஃவா தாயத்து அகற்றப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

நரகவாசிகளின் உணவு _மங்கலம் கிளை பயான்_10062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 10.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "நரகவாசிகளின் உணவு " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது

Monday, 10 June 2013

ஏழை பெண்மணிக்கு ரூ. 400 வாழ்வாதார உதவி _நல்லூர் கிளை _09062013



   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  நல்லூர்கிளை சார்பாக 09.06.2013 அன்று நல்லூர் பகுதி ஏழை பெண்மணியின் வாழ்வாதார செலவினக்களுக்கு  ரூ.400 வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது.

சமூக சேவை _நல்லூர் கிளை _09062013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 09.06.2013 அன்று  நல்லூர் V.S.A. நகர் பகுதி ஆற்றில் பொதுமக்களுக்கு இடையூறாகவும் ,சுகாதார கேடாகவும் இருந்த செடி மற்றும் மரங்கள் கிளை சகோதரர்களால் அகற்றியும், கொசுத்தொல்லை ஏற்பட காரணமான சாக்கடை அடைப்புகளை அகற்றியும் கிளை சகோதரர்களால் சமூகசேவை செய்யப்பட்டது.








பேச்சாளர் பயிற்சி வகுப்பு _உடுமலைகிளை _09062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை யின் சார்பாக 09.06.2013 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
மாவட்ட துணைசெயலாளர் சகோதரர்.சேக்பரீத் அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சி வழங்கினார்.