Sunday, 17 November 2013
"ஆசூரா நோன்பின் சிறப்பு" _ S.V.காலனி கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 15.10.2013 அன்று


பிறை 10 ம் நாள் ஆசூரா நோன்பின் இஃப்தார் விருந்துக்கு பிறகு

Saturday, 16 November 2013
அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு
திருக்குர்ஆன் 105வது அத்தியாயம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னர் மக்காவில் நடந்த ஓர் அதிசய நிகழ்வைக் கூறுகிறது. இறைவனை வணங்குவதற்காக

இந்த நிகழ்ச்சி நடந்த ஆண்டில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த ஆண்டில் இது நடந்ததால் சிறு வயதிலேயே இந்த நிகழ்ச்சி பற்றி நபியவர்கள் கேட்டு அறிந்திருந்தார்கள். மக்காவைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் இது தெரிந்த நிகழ்ச்சியாகவே இருந்தது. இந்த நிகழ்ச்சி நடந்த பின் இதிலிருந்து மக்கள் ஆண்டுக் கணக்கைத் துவக்கினார்கள். அரபுகள் அனைவருக்கும், நபிகள் நாயகத்துக்கும் இது நன்றாகத் தெரிந்திருக்கும் போது, அவர்களுக்கே இதைச் சொல்லிக் காட்டுவது தேவையில்லை. அரபுகள் அறிந்து வைத்திருந்ததை விட மிகக் குறைவான விபரத்தைத்தான் இந்த அத்தியாயம் கூறுகின்றது. எனவே இந்தச் சம்பவத்தை அவர்களுக்குச் சொல்வது இதன் நோக்கமில்லை. மனிதர்கள் அறிந்து கொள்ள வேண்டிய, மனிதர்கள் சிந்திக்க வேண்டிய இரண்டு செய்திகள் இதில் உள்ளன; அவற்றைச் சிந்திக்கச் சொல்வது தான் இதன் நோக்கமாக இருக்க முடியும்.
கடந்த காலத்தில் நான் எனது அருளைச் சொரிந்து உங்களை அதிசயமான முறையில் பாதுகாத்தேன், அதை எண்ணிப் பார்த்து நன்றி செலுத்துங்கள் என்பது முதலாவது செய்தி. இன்னொரு செய்தி ஆழமாகச் சிந்திக்கும் போது விளங்கும் செய்தி. சிந்தனையைச் செலுத்த வேண்டிய ஒரு செய்தி இதனுள் அடங்கியிருக்கிறது என்பதற்காகவே நீர் கவனிக்கவில்லையா என்று இந்த அத்தியாயம் துவங்குகிறது.


உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் அணுக்களால் ஆனவை. அந்த அணுக்களையும் உடைத்தால் அதில் இருந்து மாபெரும் சக்தி வெளிப்படும் என்று மனிதன் இப்போது கண்டுபிடித்து விட்டான். சிறிய அளவு அணுகுண்டு ஒரு ஊரையே அழிக்கப் போதுமானது என்றும் நிரூபித்துக் காட்டிவிட்டான். அந்தக் குண்டுகளை உயரமான இடத்திலிருந்து போட்டால் குண்டு வீசியவர்களைப் பாதிக்காது. தரையில் இருந்து போட்டால், குண்டு போட்டவர்களும் அழிந்து போய் விடுவார்கள். இந்த உண்மைகள் அனைத்தையும் உள்ளடக்கும் விதமாகத்தான் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
மனிதர்களே! நீங்கள் முயற்சித்தால் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் சக்தியை சிறிய பொருளுக்குள் அடக்க முடியும். அப்பொருளை வெடிக்க வைத்து எதனையும் அழிக்க இயலும். உங்களுக்கு அழிவு ஏற்படாத வகையில் இதைச் செய்ய முடியும். இவற்றைப் பற்றிக் கொஞ்சம் சிந்தியுங்கள் என்று சொல்வது போல
இந்த (105வது) அத்தியாயம் அமைந்துள்ளது.
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakam/355_anukundu_patriya_munnarivippu/
Copyright © www.onlinepj.com
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakam/355_anukundu_patriya_munnarivippu/
Copyright © www.onlinepj.com
தமிழகஅரசே! நடவடிக்கை எடு!! _உடுமலை கிளை போஸ்டர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளை சார்பில் 15.11.2013 அன்று தமிழகஅரசே! நடவடிக்கை எடு!!
அதிமுக இணையதளத்தை முடக்கி அதன் பழியை முஸ்லிம்களின் மீது சுமத்தி தமிழகத்தில் கலவரத்தை தூண்ட துடிக்கும் பி.ஜே.பி,ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் மீது
தமிழகஅரசே! நடவடிக்கை எடு!!
எனும் போஸ்டர் நகரின் முக்கிய இடங்களில்ஒட்டப்பட்டது.
அதிமுக இணையதளத்தை முடக்கி அதன் பழியை முஸ்லிம்களின் மீது சுமத்தி தமிழகத்தில் கலவரத்தை தூண்ட துடிக்கும் பி.ஜே.பி,ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் மீது
தமிழகஅரசே! நடவடிக்கை எடு!!
எனும் போஸ்டர் நகரின் முக்கிய இடங்களில்ஒட்டப்பட்டது.
தமிழகஅரசே! நடவடிக்கை எடு!!போஸ்டர் _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழகஅரசே! நடவடிக்கை எடு!!
அதிமுக இணையதளத்தை முடக்கி அதன் பழியை முஸ்லிம்களின் மீது சுமத்தி தமிழகத்தில் கலவரத்தை தூண்ட துடிக்கும் பி.ஜே.பி,ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் மீது
தமிழகஅரசே! நடவடிக்கை எடு!!
எனும் போஸ்டர் நகரின் முக்கிய இடங்களில்ஒட்டப்பட்டது.
குர்ஆன் வகுப்பு _வடுகன்காளிபாளையம் கிளை

பள்ளிக்கு வந்த சகோதரர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒலிபெருக்கி மூலம் திருகுர்ஆன் தமிழாக்கம் 19:21வசனம் முதல் 19:40 வசனம்வரை படிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)