Saturday, 13 December 2014

காலேஜ் ரோடு கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 13.12.14

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 13.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் நபிவழிப்படி தொழுவோம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரருக்கு தாஃவா - காலேஜ் ரோடு கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 13.12.14 அன்று காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த தாஸ் எனும் பிறமத சகோதரருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் எனும் புத்தகம் அன்பளிபாக கொட்டுத்து பிறமத தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

மக்கள் பார்வைக்காக கட்டுரை - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-12-2014 அன்று  “ வந்தே மாதரத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் ஆன்லைன்பிஜே இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையை மக்கள் பார்வைக்காக கிளை மர்கசில் தொங்க விடப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

நோட்டிஸ் போர்டில் முக்கிய தகவல்கள் அறிவிப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 13-12-2014 அன்று  உணர்வில் வந்த சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பித்து விட்டீர்களா? மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லாமலேயே கல்வித் தகுதியை பதிவது எப்படி? ஹலால் டெஸ்ட் (சோதனைக் கருவி ) ஆகிய செய்திகளை மக்கள் பார்வைக்காக நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

 

தாடி குறித்து 100 மினி போஸ்டர்கள் - ஜின்னா மைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜின்னா மைதானம் கிளையின் சார்பாக 12.12.14 அன்று உணர்வு வார இதழில் தாடி பற்றி வெளியான நவீன ஆய்வு கட்டுரை A3  அளவில் 100 மினிபோஸ்டர்களாக DTP எடுத்து தாராபுரம் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத சகோதரருக்கு தாஃவா - காலேஜ் ரோடு கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 12.12.14 அன்று பாலு எனும் பிறமத சகோதரருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் எனும் புத்தகம் அன்பளிப்பாக கொடுத்து பிறமத தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

காலேஜ் ரோடு கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 12.12.14

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 12.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் தொழாதவருக்கு கிடைக்கும் தண்டனைகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்....

11.12.14 அன்று குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 11.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் தொழுகை மூலம் கிடைக்கும் நன்மைகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்....

காலேஜ் ரோடு கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 10.12.14

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 10.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் ஈமானை பிரதிபலிக்கும் தொழுகை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்....

ஜின்னா மைதானம் கிளை சார்பாக இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம் ஜின்னா மைதானம் கிளையின் சார்பாக, 12/12/14 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் B+ இரத்தம் தானாமாக அமுதா என்கின்ற பெண்மணிக்கு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தாராபுரம் கிளை சார்பாக கயிறு அகற்றம்....

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஜின்னா மைதானம் கிளை 28/11/14 கிளை நிர்வாகி ஒருவரின் அத்தை அவர்கள் தமது மகளின் திருமணத்திற்கு அழைப்புக்க கொடுக்க வந்தார்கள். அப்போது அவர் தமது அத்தை அவர்களிடம் தாஃவா செய்து அவர்களின் கையில் கட்டியிருந்த இணைவைப்புக் கயிறை அகற்றினார். அல்ஹம்துலில்லாஹ்..
.

வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 07-12-2014 அன்று  மர்கஸில் பயான்  நடைபெற்றது. இதில் சகோ. சலீம் MISC அவர்கள் பித்அத்தை விட்டொழிப்போம்“ என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரருக்கு தாஃவா - கோல்டன் டவர் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-12-2014 அன்று வீரமூர்த்தி என்ற மாற்றுமத சகோதரருக்கு டீ கடையில் வைத்து இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-12-2014 அன்று கோல்டன் டவர்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் சலீம்  அவர்கள் குர்ஆனின் அற்புதம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

தாராபுரம் கிளை சார்பாக இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 11/12/14 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஷர்மிளா பானு என்கின்ற பெண்மணிக்கு இரத்தம் தானமாக கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Friday, 12 December 2014

ஜி.கே.கார்டன் கிளை சார்பாக பெண்கள் பயான் - 10.12.14

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 10.12.2014 அன்று  காலை  11 மணி முதல் 12 மணி வரை மஸ்ஜிதுல் ஹக் பள்ளியில் பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில், சகோதரி சபாமா அவர்கள் நபிவழித் தொழுகை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அஅல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, 10 December 2014

கோல்டன் டவர் கிளை சார்பாக பெண்கள் பயான் ...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09/12/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் அர்ஷின் நிழல் யாருக்கு என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்..

ஜோசியராக இருக்கும் பிறமத சகோதரருக்கு தாஃவா - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-12-2014 அன்று சிவா என்ற சகோதரர் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ள புத்தகங்கள் தேவை என்று தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டார். அவருக்கு தஃவா செய்வதற்கு சென்ற போது அவர் ஜோசியம் பார்ப்பவர் என்பது தெரிய வந்தது. ஜோசியம் ஒரு மூடநம்பிக்கை என்பது குறித்து  அவரிடம் தஃவா செய்யப்பட்டது. மேலும் அவரிடம் இஸ்லாம் பற்றி தஃவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும் அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் என்ற மூன்று புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பெரிய கடை வீதி கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 03.12.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. பிலால் அவர்கள் பாதைகளுக்குரிய கடமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

அவினாசி கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக கடந்த 06.12.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

உடுமலை கிளை சார்பாக பெண்கள் பயான்...

 திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 08.12.2014 அன்று பெண்கள்பயான்  நடைபெற்றது. இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "நரகில் சேர்க்கும் பொய் " என்ற தலைப்பிலும், சகோதரி. நிஷாரா அவர்கள்  "பிரார்த்தனை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகை குறித்து 100 நோட்டிஸ்கள் விநியோகம் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 07.12.14 அன்று தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் 100 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

பல்லடம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 07.12.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ராஜா அவர்கள் சொர்க்கம் நரகம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

கரும்பலகை தாஃவா - கோல்டன் டவர் கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09-12-2014 அன்று பெரிய பள்ளிவாசல் பகுதியில் கரும்பலகை மூலம் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...