Monday 25 September 2017

பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி +பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 17-09-2017 அன்று மதியம் மூன்று மணிமுதல் 4:30 வரை பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி நடைபெற்றது, சகோதரி ரஹ்மத் அவர்கள் செய்முறை விளக்கம் அளித்தார்கள் பிறகு பெண்களின் கேள்வி  பதில் நடைபெற்றது.4:30 முத ல் 4:45 வரை அஸர் தொழுகை இடைவேளை 4:45 முதல் 5:25 வரை பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி ரஹ்மத் அவர்கள் "கல்வியின் அவசியம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள், பிறகு மாவட்ட தலைவர் சகோ அப்துர்ஹ்மான் அவர்கள் 5:30 மணி முதல் 6:30 வரை " மரண சிந்தனையும் மறுமை நாளும் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் இறுதியாக கிளை தலைவர் அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள். இந்த நிகழ்ச்சி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.அல்ஹம்துலில்லாஹ்.