Monday 3 March 2014

"பேச்சாளர் பயிற்சி முகாம்" _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 02.03.2014 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் "பேச்சாளர் பயிற்சி முகாம்" நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் "அழைப்புப்பணியின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தியது பயிற்சிக்கு வந்த சகோதரர்களுக்கு தாம் சிறந்த பணி செய்யப்போகிறோம் என்ற உத்வேகம் வழங்குவதாக இருந்தது...

மாவட்ட பேச்சாளர் சகோ.யாசிர்(மலேசியா) அவர்கள் பேச்சாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் மற்றும் பேச்சுக்கலையின் அடிப்படை அம்சங்களை தெளிவாக விளக்கி பயிற்சி வகுப்பை  துவக்கினார்.....

இன்ஷா அல்லாஹ் இந்த பயிற்சி தொடர்ந்து பிரதி ஞாயிறு அன்று (10வாரம்) நடைபெறும்...