Monday 6 April 2015

பிரமிக்கவைத்ததிருக்குர்ஆன் -மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக  06/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ.செய்யது அலி அவர்கள் 142. பிரமிக்கவைத்ததிருக்குர்ஆன்
எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள் 
 142. பிரமிக்க வைத்த திருக்குர்ஆன்
இவ்வசனத்தில் (16:103) ஒரு பண்டிதரிடம் கேட்டு கேட்டு முஹம்மது நபி
அல்லாஹ்வின் வேதம் என்று சொல்கிறார் என்று எதிரிகள் செய்த விமர்சனத்துக்கு மறுப்பளிக்கப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை இறைவனிடமிருந்து தமக்கு வரும் செய்தி என்று அறிமுகப்படுத்திய போது அதன் உயர்ந்த தரத்தையும், நபிகள் நாயகத்தின் படிப்பறிவற்ற தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்த அவர்களது எதிரிகள், "இது முஹம்மதுவின் கூற்றாக இருக்கவே முடியாது. இவ்வளவு உயர்ந்த தரத்தில் இவரால் இதனை உருவாக்கியிருக்க முடியாது'' என்று உறுதியான முடிவுக்கு வந்தனர்.
எனவே குர்ஆனைக் குறைகூறவோ, அதன் தரத்தை விமர்சிக்கவோ வழியில்லாத நிலையில் "முஹம்மதுக்கு ஒரு மனிதர் இக்குர்ஆனை இரகசியமாகக் கற்றுத் தருகிறார்'' என்று தான் குர்ஆனைப் பற்றி அவர்களால் விமர்சிக்க முடிந்தது.
அவர்களின் இந்த விமர்சனமே திருக்குர்ஆன் எவ்வளவு உயர்ந்த தரத்தில் அமைந்திருக்கிறது என்பதற்கு வலுவான சான்று.
இந்த விமர்சனத்திற்குத்தான் இவ்வசனம் மறுப்புக் கூறுகிறது.
எந்த மனிதர் நபிகள் நாயகத்துக்கு இரகசியமாகக் குர்ஆனைக் கற்றுக் கொடுக்கிறார் என்று கூறினார்களோ அந்த மனிதரின் தாய் மொழி அரபியல்ல. அவர் வேற்று மொழியைச் சேர்ந்தவராவார். வேற்று மொழியைச் சேர்ந்த ஒருவர் அரபு மொழியில் மிக உயர்ந்த தரத்தில் எவ்வாறு இதைத் தயாரித்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி அவர்களின் அறியாமையைத் திருக்குர்ஆன் அம்பலப்படுத்தியது.
16:103 வசனத்தில் மட்டுமின்றி 25:5 வசனத்திலும் இது போன்ற விமர்சனத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.