Saturday, 23 November 2019

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 22/11/2019 அன்று மாலை 6:00 மணி முதல் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தாவா நிகழ்ச்சிகள், சமுதாய சேவைப்பணிகள், கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் மற்றும் இன்ஷாஅல்லாஹ்  நடக்கவுள்ள மாவட்ட ஆண்டுப் பொதுக்குழு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 18 November 2019

பெண் பேச்சாளர்களுக்கான தர்பியா


           



  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 17/11/2019 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட பெண் பேச்சாளர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

            சகோதரி. ரஹ்மத் (பல்லடம்) அவர்களும், சகோதரி.சுமையா (மங்களம்) அவர்களும் பெண் பேச்சாளர்களுக்கு
அவசியமான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்கள்.

           
  பேச்சாளர்கள் தமது தாவா பணிகளை சிறப்பசெய்ய உதவும் வகையில் மார்க்க விளக்க புத்தகங்கள்  மாவட்ட நிர்வாகம் சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.


மாணவரணி, மருத்துவ அணி, மற்றும் தொண்டரணி ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி


              தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  17/11/2019 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட அனைத்து கிளை மாணவரணி, மருத்துவ அணி, மற்றும் தொண்டரணி   ஒருங்கிணைப்பு    நிகழ்ச்சி நடைபெற்றது.



      மாநில செயலாளர் சகோதரர்.T.A.அப்பாஸ் மற்றும் மாணவரணி செயலாளர் பயாஸ் அவர்களும் கலந்து கொண்டு அணிகள் மூலம் எவ்வாறெல்லாம் சமூக சேவைப்பணிகள் செய்யலாம் என்பதை விளக்கி ஆர்வமூட்டினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 9 November 2019

மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் புதிய பேச்சாளர் களுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 08/11/2019 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் புதிய பேச்சாளர் களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.




*சகோதரர். அப்துல்கரீம்,* (மாநில துணைப் பொதுச்செயலாளர்) அவர்கள்






பேச்சாளர்களுக்கான அவசியமான பல்வேறு ஆலோசனைகள் 




மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.



Tuesday, 5 November 2019

மடத்துக்குளம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்


மடத்துக்குளம் கிளை சந்திப்பு 4/11/2019 அன்று மாலை 7:30 மணி முதல்
மாவட்டத் தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.

தாவாப்பணிகள், நிர்வாகப்பணிகள் மற்றும் சமுதாய சேவைப் பணிகளை வீரியமாக செய்யவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


இந்த சந்திப்பு நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் ரஷீத், ரபீக், ஷேக்பரீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

தாராபுரம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தாராபுரம் கிளை சந்திப்பு 4/11/2019 அன்று   மாவட்டத் தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.



கிளை சார்பில் நடைபெற்ற வரும் மர்கஸ் புதிய கட்டுமாணப் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


தாவாப்பணிகள் மற்றும் சமுதாய சேவைப் பணிகளை வீரியமாக செய்யவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த சந்திப்பு நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைச்செயலாளர்கள் அப்துல் ரஷீத், ரபீக், ஷேக்பரீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 19 October 2019

வெங்கடேஸ்வரா நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 18/10/2019 அன்று வெங்கடேஸ்வரா நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.

  
கிளை சார்பாக இன்ஷாஅல்லாஹ் 20/10/2019 அன்று நடத்தவுள்ள கல்வி உதவி முகாம் பற்றி கருத்துக்கள் கேட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 18/10/2019 அன்று மாலை 6:00 மணி முதல் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் இந்த வாரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தாவா நிகழ்ச்சிகள், சமுதாய சேவைப்பணிகள், கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் மற்றும் நடக்கவுள்ள நிகழ்ச்சிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Friday, 18 October 2019

திருப்பூர் மாவட்ட புதியகிளை சாதிக்நகர்



   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 17/10/2019 அன்று மாலை உடுமலை கிளை சந்திப்பு நடைபெற்றது.

மாவட்ட தலைவர் நூர்தீன், மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்ரஷீது, மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் கிளையின் பணிகளில்   நிறை குறைகள் ஆலோசிக்கப்பட்டு, வருங்கால  தாவா மற்றும் சமுதாய பணிகளை வீரியமாக செய்வதற்கு

 உடுமலை பகுதியில்
*சாதிக் நகர்* எனும் புதிய கிளை (திருப்பூர் மாவட்டத்தின் 33 வது கிளை) துவங்கப்பட்டது.

சாதிக் நகர் கிளை பொறுப்பாளர்கள்:

1 முஹம்மது அலி ஜின்னா
9080067801
2 தாஹிர் பாஷா
9840277716
3 J.முஹம்மது தன்வீர் 
9080191544

உடுமலை மற்றும் சாதிக்நகர் கிளை நிர்வாகத்திற்கு ஏகத்துவ தாவா பணிகள், நிர்வாக பணிகளை திறம்பட நிறைவேற்றவும் மற்றும்
சமூக சேவைகளை அதிகமதிகம் செய்யவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 14 October 2019

*சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை பெற இலவச ஆன்லைன் பதிவு முகாம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பாக 13.10.19 ஞாயிறு அன்று மாவட்ட மர்கஸ் மஸ்ஜிதுர் ரஹ்மான் வளாகத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை பெற இலவச ஆன்லைன் பதிவு முகாம்

 நடைபெற்றது.
          இதில் ஏராளமான மாணவ மாணவியர்கள்  கலந்து கொண்டு தமக்கான அரசு உதவிக்காக பதிவு செய்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..

Sunday, 6 October 2019

*சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை பெற இலவச ஆன்லைன் பதிவு முகாம்*



கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியிருக்கும் சிறுபான்மையின மக்களுக்காக அரசாங்கத்தாலும், சில தொண்டு நிறுவனங்களாலும் வருடந்தோறும் மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த உதவித் தொகை பெரும்பாலும் தகுதியுடைய மாணவ, மாணவியர்களுக்கு சரியாகச் சென்றடைவதில்லை. இதற்கு காரணம் இது குறித்த போதிய விழிப்புணர்வு அம்மக்களிடம் காணப்படுவதில்லை.
இதனால் வருடந்தோறும் இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை, இதை எப்படிப் பெறுவது என்ற வழிமுறைகள் தெரியாத காரணத்தால் பயன்படாமல் மீண்டும் அரசாங்கத்திடமே சென்றுவிடுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணிப் பிரிவு தமிழகம் முழுவதும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை பெற ஆன்லைனில் பதிவு செய்யும் முகாம் ஆண்டுதோறும் பல பகுதிகளில் நடத்திக்கொண்டு வருகிறது.
அந்த வரிசையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பாக மாவட்ட தலைமையகமான மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் வளாகத்தில் 06.10.19 ஞாயிறு அன்று காலை 9.00 மணியளவில் இந்நிகழ்ச்சி ஆரம்பமானது.
இதில் மாணவ மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களுடன் காலை 8.00 மணிக்கே வந்து ஆர்வத்துடன் அமர்ந்திருந்து தமது உரிமையை பெற பதிவு செய்தனர்.
நிகழ்ச்சி ஆரம்பமானதும் மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, ஆன்லைன் பதிவுகள் வேகமாக நடைபெற்றன. இதில் அதிவேக இன்டர்நெட் இணைப்புடன் ஐந்து கணிணிகள் மூலம் இதில் அனுபவமுள்ள மாணவரணியைச் சேர்ந்த நிர்வாகிகள் பதிவு செய்து கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சி இந்நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் நூர்தீன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாவட்ட மாணவரணிச் செயலாளர் இம்ரான் அவர்கள் தலைமையிலும், மாவட்ட துணைச் செயலாளர் ஹனிபா,இந்தியன் நகர் ரஜாக் , கோம்பைத்தோட்டம் அப்துல்லாஹ் MISc., MSநகர் சிராஜ், பெரியதோட்டம் பசீர் அலி, மற்றும் மாணவரணி சகோதரர்கள் பதிவு செய்யும் பணிகளை செய்து வருகின்றனர்.
தொண்டரணிச் செயலாளர் சித்திக் அவர்கள் தலைமையில் தொண்டரணி சகோதரர்கள் வந்திருந்த பொதுமக்களுக்கும் பணியாற்றும் சகோதரர்களுக்கும் தேவையான உதவிகளை செய்தனர்.
மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அராபத், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் ரஷீத், ரபீக், ஷேக் பரீத், மருத்துவரணிச் செயலாளர் ஜாகிர், மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
பல மாணவ மாணவியர்களுக்கு வங்கிக்கணக்கு மற்றும், பள்ளியில் கடந்த வருட மதிப்பெண் சான்று பெறாமல் இருந்தனர்.
அவர்களுக்கு ஆவணங்களை முறையாக பெறும் வழிமுறைகளை விளக்கப்பட்டது.
ஆவணங்களை முறையாக பெற்று வருபவர்களுக்காகவும், இன்று பதிவு செய்ய இயலாதவர்களுக்கும்
இன்ஷாஅல்லாஹ் அடுத்த வாரமும் இதே இடத்தில் முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
என்றும் சமுதாய மற்றும் சமூக சேவை பணிகளில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம்.

Friday, 4 October 2019

மாவட்ட மாணவரணி ஆலோசனைக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 03/10/2010 அன்று இரவு கோம்பைத் தோட்டம் மாவட்ட மர்கஸ் வளாகத்தில்,



மாவட்ட மாணவரணி மூலமாக இன்ஷாஅல்லாஹ் 06/10/2019 அன்று நடைபெறவுள்ள  சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை பெற ஆன்லைனில் இலவசமாக பதிவு செய்யும் முகாம் பற்றி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கோம்பைத்தோட்டம், வெங்கடேஸ்வரா நகர், பெரியதோட்டம் ஆகிய கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு  நிகழ்ச்சியை எவ்வாறெல்லாம் சிறப்பாக நடத்துவது என கருத்துக்கள் கேட்டறியப்பட்டு முடிவுகள் எடுத்து சிறப்பாக இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்..


Monday, 16 September 2019

யாசின் பாபு நகர் கிளை சந்திப்பு

               தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  யாசின் பாபு நகர் கிளை சந்திப்பு 15/09/2019 அன்று யாசின் பாபு நகர் கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.


                  கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த சந்திப்பு நிகழ்ச்சியில், நிர்வாக ஒழுங்குகள் பற்றியும் மஸ்வரா மற்றும் தாவா செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்றும், நிர்வகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டிய அவசியம் விளக்கம் வழங்கி 
                வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 15 September 2019

பேச்சுப்பயிற்சி முகாம் 15092019 -திருப்பூர் மாவட்டம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக S.Vகாலனி கிளை மர்கஸில்  தொடர் 10 வார பேச்சுப்பயிற்சி முகாம் நடைபெறுகிறது.



அதில்   15/09/2019 அன்று 9ஆவது வார பேச்சுப் பயிற்சி முகாம்  நடைபெற்றது.


மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். 
அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்..

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 13/09/2019 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.



வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றி பல்வேறு ஆலோசனைகள் செய்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 12 September 2019

ஆஷுரா நோன்பாளி களுக்கு இப்தார் _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 11.09.2019 அன்று ஆஷுரா நோன்பின் இரண்டாம் நாள் நோன்பு நோற்ற நோன்பாளி களுக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 24 August 2019

படையப்பா நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 23/08/2019 அன்று படையப்பா நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு மாவட்ட மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

கிளையின் தாவா பணிகள் பற்றியும், நிறை குறைகள் பற்றியும் கருத்துக்கள் கேட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

கோம்பைத் தோட்டம் கிளை நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 23/08/2019 அன்று கோம்பைத் தோட்டம் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.

கிளையின் தாவா பணிகள் பற்றியும், நிறை குறைகள் பற்றியும் கருத்துக்கள் கேட்டு வருங்காலத்தில் தாவா பணிகளை வீரியப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

ms நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 23/08/2019 அன்று ms நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.
ஜமாஅத் பற்றிய கிளையின் நிறை குறைகள் பற்றி கருத்துக்கள் கேட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 19 August 2019

மாபெரும் இரத்ததான முகாம் - மங்கலம் கிளை










தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக...

18.8.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.

இதில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகவும் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மங்கலம் பகுதியில் நடைப்பெற்றது.

இம்முகாமை மாவட்ட மருத்துவணி செயலாளர் ஜாஹிர் துவக்கிவைத்தார். 

மங்கலம் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் 100 க்கும் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உயிர் காக்கும் இரத்ததானம் செய்து வருகின்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை மங்கலம் கிளை நிர்வாகிகள் சிராஜ், நஜீர், அப்பாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் என்பதை ஓங்கி ஒலிக்கும் வகையில் இந்த இரத்ததான முகாம் அமைந்தது.

அல்ஹம்துலில்லாஹ்..