Wednesday, 8 June 2011

புகை நமக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு.


மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் வழி முறைகளை இஸ்லாம் ஒரு சந்தர்ப்பத்திலும் அனுமதித்தது கிடையாது. இன்று நமக்கு மத்தியில் வாழும் மனிதர்களில் பலர் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் விதமாக புகைப் பிடிக்கும் தீய காரியத்தில் ஈடுபடுவதை நாம் காண் முன்னே கண்டு வருகிறோம்.

புகை பிடிக்கவில்லை என்றால் ஏதோ தங்கள் கவுரவம் பாதிக்கப்பட்டதாக இவர்கள் நினைக்கிறார்கள். புகைப் பிடிப்பவன் தான் மேலானவன் என்பதைப் போலும் புகை பிடிக்கத் தெரியவில்லை அல்லது பிடிப்பதில்லை என்ற வட்டத்தில் யாராவது இருந்தால் அவர்கள் நாகரீகம் தெரியாதவர்கள் என்பதைப் போலும் தான் இந்த சமுதாயம் அவர்களை நோக்குகிறது.

ஆனால் இஸ்லாம் இப்படிப்பட்ட தீய நாகரீகங்களை ஒரு போதும் அனுமதிப்பதில்லை.

இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் இப்படிக் குறிப்பிடுகிறான்.

உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! (அல்குர்ஆன் 4:29)

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!  (அல்குர்ஆன் 2:195)

புகைத்தல் என்பது மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் மாபாதகச் செயல்பாடாகும்.

இந்தப் புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் ஒவ்வொருவனும் தனது உடல் நலத்தையும் கெடுத்து தன்னைச் சுற்றியிருப்பவர்களின் சுக வாழ்வையும் நாசப்படுத்துவதைப் பார்க்களாம்.

புகையிலையிலிருந்து 300க்கும் அதிகமான நச்சுப் பொருட்கள் (பர்ஷ்ண்ய்ள்) வெளியாகின்றன. அவற்றில் அதிகம் கேடு விளைவிப்பவை,        

1. நிகோடின்
2. கார்பன் டை ஆக்ஸைடு
3. கார்பன் மோனாக்ஸைடு
4. கார்பன் டெட்ரா குளோரைடு ஆகியவையாகும்.

இவை அனைத்தும் கரியமில வாயுடன் தொடர்புடையவை.

புகை பிடிப்பதால் உதடுகள், நாக்கு, வாயின் உட்பகுதி, கன்னம், மூக்கின் இரு பகுதியில் உள்ள சைனஸ், தொண்டை, பேரிங்ஸ், லாரிங்ஸ், உணவுக்குழாய், காற்றுக் குழாய், நுரையீரலுக்குள் செல்லும் சிறு காற்றுக் குழாய்கள், நுரையீரல், நுரையீரலைச் சுற்றியுள்ள உறை, இரைப்பை, கல்லீரல், சிறு குடல், பெருங்குடல், கணையம், சிறுநீரகம், ஆண் பெண் உறுப்புக்கள், இதயம், மூளை, கண்கள் ஆகிய உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன. அதாவது கிட்டத்தட்ட எல்லா உறுப்புக்களும் பாதிக்கப்படுகின்றன.

பெரிய, சிறிய, நடுத்தர இரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள சிறிய தசைகளை  நிக்கோடினும், பிற நச்சுப் பொருட்களும் சுருங்கச் செய்து இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, இரத்த ஓட்டத்தைக் குறைக்கின்றன. இதனால் உடல் உறுப்புக்கள் படிப்படியாகச் செயலிழக்கின்றன.

மூளைக்கு இரத்தம் கொண்டு செல்லும் கரோடிட் இரத்தக் குழாய்களும், அதன் கிளைகளும் சுருங்கி மூளையின் செல்களுக்குக் குறைவான இரத்தம் செலுத்தப் படுவதால் பக்க வாதம் ஏற்படுகின்றது.

கண்களுக்கு இரத்தம் அளிக்கும் முக்கியக் குழாய்களில் சுருக்கம் ஏற்பட்டு விழித்திரை பழுதடைந்து, திடீர் பார்வையிழப்பு ஏற்படுகின்றது.

காதுக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் சுருக்கம் ஏற்படுவதால் ஆக்ஸிஜன் சப்ளையின்றி கேட்கும் திறன் பாதிக்கப்படுகின்றது.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரங்களின்படி இவ்வருடம் 5 மில்லியன் மக்கள் புகைத்தலின் காரணமாக இறந்திருப்பதுடன் அதில் 600,000 மக்கள் இப்புகையிலை புகைகை நுகர்வதனால் உயிர்நீத்துள்ளனர் என்பது கவலைக்குரியது.

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் எனும் கூற்று பொய்த்து இன்றைய இளைஞர்கள் நாளைய புகைஞர்கள்  எனும் வகையில் 13-18 வயதிற்குட்பட்ட புகையிலை பாவனையாளர்களின் எண்ணிக்கை 7 இல் 1 ஆக அதிகரித்துள்ளமை நெஞ்சை சுடும் விஷயமாக உள்ளது.

சர்வதேசரீதியில் ஒவ்வொரு 8 செக்கனிற்கும் ஒருவர் புகையிலையால் இறப்பதுடன் இலங்கையில் ஒவ்வொரு 6.5 செக்கனிற்கும் ஒருவர் இறக்கின்றனர். அதுமட்டுமன்றி இலங்கையில் வருடாந்தம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் இந்தப் பழக்கத்தால் இறப்பதுடன் நாளொன்றுக்கு 4,101 மில்லியன் புகையிலை உற்பத்திகள் விற்பனையாகின்றன என்பது அதிசயிக்கத்தக்கதன்று.
புகையிலையினால் ஏற்படும் பாதிப்புக்களை இலகுவான விஞ்ஞான ரீதியில் எடுத்து நோக்கினால், புகையிலை புகையில் காணப்படும் நிக்கொட்டின் எனும் பதார்த்தம் இதயத்துடிப்பு வீதத்தை தற்காலிகமாக அதிகரிப்பதுடன் குருதியமுக்கத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது. மற்றும் சிகரட் புகைத்தல் சுவாசப்பை சிறு குழாய்களில் அழற்சியை ஏற்படுத்துவதுடன் இதன் விளைவாக மூச்சு விடுதல் கடினமாகிறது. அதுமட்டுமன்றி நமது சுவாசப்பை தொகுதியில் உள்ள பிசிர் தொழிற்பாடுகள் இழக்கப்படுவதால் வாயுப் பரிமாற்றத்திற்கான வினைத்திறன் வாய்ந்த பரப்பும் குறையும்.

புகையிலையின் புகையில் காணப்படும் காபன் மோனாக்சைட்டு வாயு குருதியினால் உறிஞ்சப்பட்டு ஈமோகுளோபின் உடன் மீளாத்தன்மையாக சேருகின்றது.ஆக்சிஜன் வாயுவிலும் பார்க்க இவ்வாயு வினைத்திறனாக ஈமோகுளோபின் உடன் சேரும். இதனால் குருதியில் ஆக்சிஜன் கடத்தப்படும் அளவு குறையும்.
இவை ஒரு மனிதனின் உடலில் ஏற்படும் பாதிப்புக்கள் எனும் அதேவேளை இறைவனின் கொடையாகிய  சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் பாதிப்புக்கள் ஏராளமானவை. இவ்வனைத்து பாதிப்புக்களுக்கும் தீர்வு காணும் விதமாக உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு வருடமும் புதிய முயற்சிகளைக் மேற்கொண்டு வருவதுடன் உலக நாடுகளும், ஊடகவியலாளர்களும், தனிநபர் மற்றும்,நிறுவனங்களும்,துண்டுபிரசுரங்களினூடாகவும்,பத்திரிகைகளினூடாகவும்,சுவரொட்டிகளினூடாகவும்,ஒளித்தோற்றங்களினூடாகவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
எனினும் 2025 ஆம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 8 மில்லியனாக அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனத்தினால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்குக் காரணம் யார்?  வருமானத்திற்கென புகையிலை உற்பத்திகளை உற்பத்தி செய்பவர்களாளா அல்லது 'புண்பட்ட நெஞ்சங்களை புகைவிட்டு ஆற்றுவதாக சொல்லிக் கொள்ளும் மன நோயாளிகளா?

நம்முடைய சிந்தனைகள் இன்னும் அறியாமையில்தான் இருக்கின்றன,அவற்றை நாம் புகையின்றி ஒளி பெறச்செய்ய வேண்டும்.

நமக்கும் நாட்டுக்கும் வீட்டுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும் இந்த கொடிய செயல்பாட்டில் இருந்து விடுபட்டு தூய்மையான இஸ்லாமிய வழிகாட்டுதலுடன் வாழ்வதற்கு தயாராகுவோம்.
குறிப்பு : இந்தக் கட்டுரையில் சகோதரி பா.ரம்யாவின் ஆக்கத்தின் சில பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
posted by SM.YOUSUF

Monday, 6 June 2011

வட மரைக்காயர் அலுவலகம் யாருக்கு சொந்தம் ? நடந்தது என்ன ? சட்ட மன்ற முற்றுகை போராட்டம் ஏன் ?


1. சென்னை மண்ணடி எண்: 7, வடமரைக்காயர் தெருவிலுள்ள இரண்டு மாடி கட்டிடம் முஸ்லிம் ட்ரஸ்ட் பெயரில் அதன் ஆயுட்கால சேர்மன் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களது பெயரில் பதிவு செய்யப்பட்டதாகும்
2. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அமைப்பாளராக இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் தமுமுக அலுவலகம் இயங்குவதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.
3. உணர்வு வார இதழை நிர்வகித்து வரும் முஸ்லிம் மீடியா ட்ரஸ்டின் சேர்மனாகவும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் உணர்வு வார இதழ் அலுவலகம் இயங்குவதற்கும் அனுமதியளித்திருந்தார்.
4. 2004ஆம் ஆண்டு தமுமுகவிலிருந்து பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களும் அதன் முன்னனி பேச்சாளர்களும் கூண்டோடு விலகியதையடுத்து தமுமுக அலுவலகம் அந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு தடை செய்ய அதிகாரமிருந்தும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அதை செய்யவில்லை
5. எவ்வித சட்டப்பூர்வ உரிமையும் இல்லாமல் முஸ்லிம் ட்ரஸ்ட் கட்டடத்தின் முதல்மாடியில் இயங்கிவந்த தமுமுகவினர், 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலக ஊழியர்களைத் தாக்கி பொருட்களைச் சேதப்படுத்தி ரவுடித்தனம் செய்ததால் காவல்துறை மூலம் கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டு RDO விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
6. RDO விசாரணையில் இறுதித் தீர்ப்பு வரும் வரை முதல் மாடியை தமுமுக வும், இரண்டாம் மாடியை உணர்வு இதழும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; யாரும் யாருக்கும் இடையூறு செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
7. RDO உத்தரவிட்ட 2004ஆம் ஆண்டு முதல் கடந்த 2011 மே 27ஆம் தேதி வரை உணர்வு வார இதழின் நிர்வாகப்பிரிவு அலுவலகம் தொடர்ந்து அந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
8. 2004ஆம் ஆண்டு முதல் கடந்த 2011 மே 27ஆம் தேதி வரை ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால் துறை மூலம் அந்த அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டவை ஆதாரங்களாக நம்மிடம் உள்ளன.
9. கடந்த 2011 மே 27ஆம் தேதி அன்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து மாநில நிர்வாகிகளும், மற்றும் உணர்வு இதழின் பொறுப்பாளர்களும் ஊட்டி சென்றுவிட்டனர்.
10. இதைத் தெரிந்து கொண்ட மமகவை சேர்ந்த ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்டவர்கள் அத்துமீறி உணர்வு வார இதழ் அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூபாய் 5லட்சம் பெருமானமுள்ள பொருட்களைத் திருடிச்சென்றதுடன் மறுபூட்டுப் போட்டு உணர்வு வார இதழ் அலுவலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
11. செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்து 31.05.2011 செவ்வாய்க்கிழமை அன்று சென்னை திரும்பிய உணர்வு வார இதழின் பொறுப்பாளர்கள் தமது நிர்வாக அலுவலகம் சென்ற போது ரவுடிக்கும்பலோடு காத்திருந்த மமகவினர் உள்ளே செல்லவிடாமல் தடுத்து விரட்டியடித்து விட்டனர்.
12. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகவும், சட்ட விரோத ஆக்கிரமிப்பிற்கு இந்த அரசின் ஆதரவு இருக்காது என்ற நம்பிக்கையிலும் சென்னை மாநகர ஆணையாளர் திரிபாதி அவர்களைச் சந்தித்து ஆதாரங்களை எடுத்துக்காட்டி தவ்ஹீத் ஜமாஅத் முறையிட்டது.
13. தவ்ஹீத் ஜமாஅத் கூறுவதில் உண்மையிருப்பதை விளங்கிக் கொண்ட ஆணையாளர் அவர்கள் தமக்கு அடுத்த பொறுப்பிலுள்ள JC செந்தாமரைகண்ணன் அவர்களுக்கு நமது புகாரை அனுப்பியதுடன் அவரிடம் நேரில் விளக்குமாறும் சட்டப்படி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
14. அதன் பிறகு JC செந்தாமரைகண்ணன் ACஅவர்களுக்கு அதை அனுப்ப அவர் B1 காவல்நிலையத்திற்கு அதை அனுப்ப இழுத்தடிப்பு வேலைகள் ஆரம்பமாயின.
15. 14ஆண்டுகளாக இயங்கிவந்த ஒரு வார இதழின் அலுவலகம் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பாரதூரமான விஷயத்தை -ஏற்கனவே RDO வால் இடப்பட்ட உத்தரவு மீறப்பட்டுள்ள நிலையில் – B1 காவல்நிலையத்தில் ஒரு பெட்டி கேஸுக்கு தரப்படும் முக்கியத்துவம் கூட தராமல் ஏனோ தானோ என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் புகாரை குப்பைக்கூடைக்கு அனுப்பும் வகையில் அவர்களின் நடவடிக்கை அமைந்தது.
16. காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆதரவோடும், காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் ஆசியோடும் தான் இந்தச் சட்ட விரோத ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதியானதால் வரக்கூடிய ஜூன் 9ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக்கின்றது.
17. யாரும் பயப்பட வேண்டாம்; எல்லாம் சட்டப்படி நடக்கும் என்று பதவியேற்ற முதல்நாள் ஜெயலலிதா சொன்னது வழக்கமான அரசியல் பாம்மாத்து அறிவிப்பு தான் என்பது இதன் மூலமாக நிரூபணமாகின்றது.
posted by SM.YOUSUF

Wednesday, 1 June 2011

தர்பியா _காலேஜ் ரோடு _29052011

திருப்பூர் tntj காலேஜ் ரோடு கிளை சார்பாக. 29.05.2011 தர்பியா நடை பெற்றது இதில் மாநில பேச்சாளர் அஹமத் கபீர் அவர்கள் பயிற்சி அளித்தார்.
posted by SM.YOUSUF

தெருமுனைபிரச்சாரம் _வாவிபாளையம் _08052011

08.05.2011 அன்று ஞாயிற்று கிழைமை.
சமத்துவபுரம் சுன்னத் ஜமாஅத் பள்ளியில் நடைபெற்ற,
மவ்லிதை எதிர்த்து பிரசாரம் நடைபெற்றது.
இதில் சகோ:- s m யூசுப் அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் அனாசாரம், எனும் தலைப்பில் பேசினார். அல்ஹம்துலில்லாஹ்...
posted by SM.YOUSUF

தெருமுனைபிரச்சாரம் _வாவிபாளையம் _08052011

08.05.2011 அன்று ஞாயிற்று கிழைமை.
  கணக்கம்பாளையம் சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு
  மாமனிதர் நபிகள் நாயகம் எனும் தலைப்பில்
 சகோ:- அப்துர் ரஹ்மான். அவர்கள்  பேசினார். அல்ஹம்துலில்லாஹ்...
posted by SM.YOUSUF

தெருமுனை பிரச்சாரம் _வாவிபாளையம் _22052011


திருப்பூர் குமரன் காலனியில் 22.05.2011 அன்று எதிர்ப்பை மீறி தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. இதில் சகோ:- s m யூசுப்  இ துதான் இஸ்லாம் எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...


posted by SM.YOUSUF

Wednesday, 11 May 2011

விவாதத்திலிருந்து ஜெர்ரி தாமஸ் தப்பி ஓட்டம்!



ஜெர்ரி தாமஸ் என்பவர் பல இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களை
விவாதத்திற்கு அழைத்ததாகவும், யாரும் தன்னோடு விவாதம் செய்ய முன்வரவில்லை என்றும், குறிப்பாக ஜாகிர் நாயக் அவர்களை தான் விவாதம் செய்ய அழைத்து அவர் தன்னோடு விவாதம் செய்யாமல் ஓட்டமெடுத்து விட்டார் என்றும் அதற்கான ஆதாரங்களோடு தான் ஜாகிர் நாயக்கிற்கு விவாத அழைப்பு விடுத்து அவர் விவாதத்திற்கு வராமல் பின்வாங்கி ஓடிய செய்தியையும் கடித ஆதாரங்களுடன் தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த இடத்தில் ஜெர்ரி தாமஸ் என்ற இவர் விவாதம் செய்கின்றேன் என்ற பெயரில் கூத்தடிக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். அதாவது, ஜெர்ரி தாமஸ் என்பவரது பாஷையில் விவாதம் செய்வதென்பது என்னவென்றால், ஒரு தலைப்பை எடுத்துக் கொள்ள வேண்டுமாம்; அந்த குறிப்பிட்ட தலைப்பில் இவர் ஒரு மணி நேரம் உரையாற்றுவாராம்; நாம் ஒரு மணி நேரம் உரையாற்ற வேண்டுமாம்! இந்த இரண்டு மணி நேரத்தோடு விவாதம் முடிவடைந்து விடுமாம். என்னே அற்புதமான விவாத வழிமுறை(?). இந்த பாணியில் விவாதம் செய்ய இவர் அழைத்த விவாத அழைப்பையும் கூட ஜாகிர் நாயக் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நமக்கு இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
ஏனெனில் குர் ஆன ஹதீஸ் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்பதைக் கொள்கையாகக் கொண்டவர்களால் மட்டுமே இவர்களுடன் விவாதம் செய்ய முடியும். கொள்கை சரி இல்லாமல் எவ்வளவு திறமை உள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் விவாதம் செய்ய மறுத்து ஓட்டம் பிடிக்கத் தான் செய்வார்கள்.

ஜெர்ரி தாமஸ் என்பவர் முஸ்லிம் இமாம்கள் அறிஞர்கள் என்ற பெயர் பெற்றவர்கள் உளறியவைகளை திரட்டி வைத்துக் கொண்டு அது தான் இஸ்லாத்தின் கருத்து என்று சித்தரிப்பது தான் இவரது வழி முறை. ஜாகிர் நாயக்கோ இன்னும் பலரோ இமாம்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை சொல்வதால் இமாம்களின் சில உளறல்களை ஜெர்ரி தாமஸ் போன்றவர்கள் எடுத்து வைக்கும் போது அவர்கள் வாயடைக்கும் நிலை ஏற்படும்.

இதற்கு பயந்து தான் விவாதத்தில் இருந்து பின்வாங்குகிறார்கள். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்த வரை இஸ்லாத்தை விமர்சிப்பதாக இருந்தால் குர்ஆனில் இருந்தும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இருந்தும் மட்டும் விமர்சிக்க வேண்டும். வேறு எவருடைய கருத்துக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்ற நிலை பாட்டில் இருப்பதால் நம்மோடு இவர்கள் விவாதிக்கும் போது நிராயுதபாணிகளாகத் தான் நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.
அதே நேரத்தில் விவாத சவடால் புகழ் ஜெர்ரி தாமஸ் என்பவர் விவாதம் செய்யத் தயாரா? என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை விவாதத்திற்கு அழைத்து எழுத்துப்பூர்வ அழைப்பு விடுக்க, தற்போது ஜெர்ரி தாமஸுடைய நிலை மிகவும் பரிதாபம்.
ஆம்! கதவிடுக்கில் சிக்கிய எலியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திடத்தில் வசமாக வந்து மாட்டிக் கொண்டு இப்போது தப்பித்தோம் பிழைத்தோம் என்று எஸ்கேப் ஆகியுள்ளார் ஜெர்ரி தாமஸ்.
நம்மை அணுகிய அவர்களிடத்தில் விவாத வழிமுறைகள் குறித்து நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து நேரடி உரையாடல் அவர்களோடு நடைபெற்றது. மாநிலத் தலைவர் சகோதரர் பீஜே அவர்கள் தலைமையில் நடைபெற்ற அந்த சந்திப்பு முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
ஒரு மணி நேர உரை நிகழ்த்திவிட்டு விவாதம் நிறைவடைந்து விட்டது என்று செல்லும் இந்த விளையாட்டுக்கள் எல்லாம் எங்களிடம் செல்லாது; ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டால் அதை முழுவதுமாக பேசி எது உண்மை என்பதை மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் விவாதம் அமைய வேண்டும். குறைந்தது இரண்டு நாட்கள் அதிகபட்சம் ஒருவாரம் கூட ஒரு தலைப்பில் விவாதிக்க வேண்டும். அதில் நீங்கள் ஒரு 15 நிமிடம் விவாதிக்க அந்த விஷயத்தை நாங்கள் மறுக்க, அதை நீங்கள் மறுக்க இப்படி போவது தான் விவாதமே ஒழிய நீங்கள் சொல்வது விவாதமாகாது என்று டிஎன்டிஜே அவர்களுக்கு கிடுக்கிப்பிடி போட தங்களை விட்டால் போதும், தப்பித்தால் போதும் என்று தற்போது தலைதெரிக்க ஓடியுள்ளது விவாத சவடால் விட்ட கூட்டம்.
அதற்கான வீடியோ ஆதாரங்கள், மற்றும் விவாத பின்னனிகள் மறும் விவாதம் குறித்த நமக்கும் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்துக்கள் அனைத்தும் நமது www.onlinepj.com இணையதளத்தில் முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளது.
விடியோ மற்றும் விவாத பின்னனிகளை காண  இங்கே கிளிக் செய்யவும்
புகழனைத்தும் இறைவனுக்கே!
இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது?
அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.  அல்குர்-ஆன் 74 : 50, 51
posted by SM.YOUSUF

Thursday, 5 May 2011

கோடைகால பயிற்சி முகாம் _01052011


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 1-5-11 அன்று மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் துவங்கியது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயின்று வருகின்றனர்.posted by SM.YOUSUF

Monday, 2 May 2011

மருத்துவ உதவி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக .22 .04.2011.அன்று ஜும்மா வசூல் .6616.ரூ மருத்துவ உதவி கிட்னி மாற்று  அறுவை சிகிச்சைக்காக   ரொக்கமாக வழங்கப்பட்டது .41.வார்டு கிளை செயலாளர் வழங்கினர் 

22042011860.jpgposted by SM.YOUSUF

Wednesday, 27 April 2011

விமானம் பறப்பது எப்படி?

airoplanஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்
பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்
சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது
ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு
A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)
B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust
C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight
D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag
ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்
Weight=Lift
Drag=Thrust
த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்
டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்
விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்
விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்
சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,
அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.
(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)
விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்
பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது
எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்
உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக
விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது
விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்
இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது
காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)
விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்
அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?
அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது)
இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது
விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?
அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது
ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது
மனிதனால் பறக்க முடிவும் என்பது பற்றி இறைவன் திருமறையில்…
மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.டாது)
அல்குர்அன் 55-33

ஜும்மா _SV காலனி _27042011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் SV காலனி கிளை திருப்பூர்.
SV காலனி கிளை சார்பாக ஜும்மா நடைபெற்றது இதில் 20 கும்.
மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் SM யூசுப் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்....

Tuesday, 26 April 2011

தெருமுனை பிரச்சாரம் _வாவிபாளையம் _24042011


திருப்பூர் வாவிபாளையம் கிளையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்.
பேரழிவுகள் சொல்வதென்ன?(24.04.11 SUNDAY) எனும் தலைப்பில் சஹோ:-SM யூசுப் அவர்கள்
சமத்துவபுரம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் முன்பு  உரையாற்றினார்.
இதில் கிளை தலைவர் B ஹமீது. பொருளாளர் S சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.....



Monday, 25 April 2011

குஜராத் படுகொலை : முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டுவதற்காக வெண்டுமென்றே அனுமதித்தார் மோடி! – மோடியின் ரகசிய கூட்டத்தில் கலந்து கொண்ட IAS போலீஸ் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம்!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட மதக் கலவரத்தை குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திரமோடி வேண்டுமென்றே நடக்க அனுமதித்திருந்தார் என்று மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கலவரத்தின்போது உதவி கோரி மக்கள் விடுக்கும் அழைப்புகளை புறந்தள்ளுங்கள் என்று போலிஸ் அதிகாரிகளுக்கு நரேந்திரமோடி உத்தரவிட்டிருந்த கூட்டத்தில் தானும் கலந்துகொண்டிருந்ததாக சஞ்சீவ் பட் என்ற அந்த உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.


மேலும் “கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால் இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பு காணப்படுகிறது. இத்தகைய சம்பவம் இனி நிகழாதவாறு இஸ்லாமியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.” என்று மோடி கூறியதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் வன்முறையாளர்களை தடுக்கக்கூடாது என மோடி உத்தரவிட்டார். அத்துடன் மக்கள் உணர்வுகளுக்கு அணை போட்டு தடுக்கக் கூடாது என்றார். எனவே நாங்கள் வன்முறையை கட்டுப்படுத்தவில்லை என ஐ ஏ எஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது, அவர் மாநில ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தின் முதல்வராக உள்ளார்.

பெண்கள் பயான் _ MS நகர் _24042011

திருப்பூர் TNTJ  MS நகர் கிளை சார்பாக நடைபெற்ற நிகழ்சிகள் பின்வருமாறு.

24.04.2011 அன்று  கலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு பேச்சுப்பயிற்சி நடைபெற்றது.

24.04.2011 அன்று மாலை 7.00 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது...

Thursday, 21 April 2011

பயங்கரவாதம் – வன்முறை மற்றும் பைபிள்!

பைபிள் என்றவுடனே பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வருவது “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்பது மட்டும் தான். சுருங்கக் கூறினால், இந்த ஒரு சொல்லை மட்டும் பரவலாக எடுத்து வைத்து, மனிதர்களால் கலப்படம் செய்யப்பட்ட பைபிளின் உண்மையான பக்கங்களுக்குள் பாமர மக்களைச் செல்ல விடாமல், காசுக்கு மாரடிக்கும் மிஷனரிகள் கட்டி வைத்துள்ளன.
கிறிஸ்தவர்களில் சிலர், முகம்மது (ஸல்) அவர்கள் வன்முறையைப் போதித்ததாகவும் இயேசு அகிம்சையையும் அன்பையும் போதித்ததாகவும் ஒப்பீட்டுப் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரை இதற்கு மாறாக இயேசுதான் வன்முறையைப் போதித்தார் என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்; சொல்லவும் முடியாது. ஏனென்றால் அது அவர்களின் நம்பிக்கைக்கு எதிரானதாகும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை இயேசுவும் முஹம்மதுவும் (அவர்கள் மீது இறையருள் உண்டாகட்டும்) தார்மீக வழிகாட்டுதல்களுடன் அனுப்பப்பட்ட இறைவனின் அடியார்களும் தூதர்களும் ஆவார்கள். அவர்கள் இருவரிடையே வேற்றுமை பாராட்டுவது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரான செயல்பாடாகும்.
இஸ்லாம் பயங்கரவாதத்தைப் போதிக்கும் பொய் மார்க்கம் என்றும் கிறிஸ்தவம் தான் படைத்தவனின் உண்மையான வழிகாட்டுதல் – மார்க்கம் என்றும் நிறுவதற்காகவே இத்தகைய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன எனில், அவற்றிற்குச் சரியான பதிலளிப்பதும் உண்மை என்ன என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதும் முஸ்லிம்களின் மீது கடமையாகிறது!
இஸ்லாம் வன்முறை – பயங்கரவாத மதம் என சாதாரண மக்களை ஏமாற்ற முயலும் இத்தகையவர்கள், தாங்கள் வேதமாக நம்பியிருக்கும் “மனித கரங்களால் கையாடல் செய்யப்பட்டுள்ள பைபிள்” உண்மையில் அகிம்சையையும் அன்பையும் தான் போதிக்கிறதா? என்பதை முழுமையாக விளக்க முற்படுவதில்லை.
மாறாக இயேசுவின் உபதேசங்களாகக் குறிப்பிடப்பட்ட சிலக் கருத்துக்களை மட்டும் பொறுக்கி எடுத்து முஹம்மது (ஸல்) அதற்கு எதிரானவர் என்று ஒப்பீட்டுப் பிரச்சாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் தம் உயிரைவிட மேலாக மதிக்கக் கூடிய, ஒரு சமுதாயத்தின் நம்பிக்கைக்கு உட்பட்ட ஆன்மீகத் தலைவரை ஒற்றை வார்த்தையில் பொய்யான குற்றச்சாட்டுகளுடன் கேவல விமர்சனம் செய்வதன் மூலம் தம்மை விட மதவெறி பிடித்தவர்கள் வேறுயாரும் இல்லை என்பதையும் வெளிக்காட்டியுள்ளனர்.
பைபிள் என்றவுடனே பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வருவது “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்பது மட்டும் தான். சுருங்கக் கூறினால், இந்த ஒரு சொல்லை மட்டும் பரவலாக எடுத்து வைத்து, மனிதர்களால் கலப்படம் செய்யப்பட்ட பைபிளின் உண்மையான பக்கங்களுக்குள் பாமர மக்களைச் செல்ல விடாமல், காசுக்கு மாரடிக்கும் மிஷனரிகள் கட்டி வைத்துள்ளன.
தாங்கள் செய்த/செய்யும் அக்கிரமச் செயல்களை நியாயப்படுத்த, அன்றைய காலத்தில் தாங்கள் செய்த ஆபாச, அக்கிரமங்கள் அனைத்தும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டன என்று சாயம் பூசியது புரோகித வர்க்கம். இதற்காக இவர்கள் இறைவனால் தூதர்களாக தேர்வு செய்யப்பட்ட தீர்க்கதரிசிகளின் பெயரிலும் கையாடல்கள் செய்வதற்கும்த் தயங்கவில்லை. இதனால் தான் வேதம் என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படும் பைபிள், ஆபாசம் மற்றும் வன்முறைச் சம்பவங்களால் அசிங்கப்பட்டுக் கிடக்கிறது. ஒருபுறம் தங்களை அமைதிப் புறாக்களாகக் காட்டும் கிறிஸ்தவர்கள், திரைமறைவில் செய்து வரும் வேலைகளைக் குறித்து பலரும் அலட்சியமாகவே இருக்கின்றனர். மிஷினரிகளுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது என்பதை அவர்களின் செயல்களை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் அறிந்து கொள்வர்
ஆபாசம், வன்முறை, முன்னுக்குப் பின் முரணான தகவல்கள், பொய்கள் என அசிங்கக் குப்பைகள் நிறைந்துக் கிடக்கும் பைபிளில், புரோகிதர்களின் கைகளிலிருந்துத் தப்பி இன்னமும் கையாடல் செய்யப்படாமல் ஆங்காங்கே வெளிப்படும் இறைவனின் கட்டளைகளைக் கூட அதனை வேதமாகக் கருதும் கிறிஸ்தவர்களே பின்பற்றுவதில்லை என்பது முரண்பாட்டின் உச்சகட்டம்!
"பன்றி மாமிசம் உண்ணக் கூடாது" என்று பைபிள் தடை விதித்தாலும் இறைவன் மனிதனுக்காகத் தான் எல்லாவற்றையும் படைத்தான் என்றும் பூமியில் படைக்கப் பட்டவையெல்லாம் அனுபவிக்கலாம் என்ற புரோகிதர்களின் சித்தாந்தத்தாலும் குழப்பம் ஏற்பட்டு இதுகுறித்து சரியான வழிகாட்டுதலைக் கொடுக்க பைபிள் தவறிய காரணத்தால் தீமை விளைவிக்கக்கூடியது என்பது தெரிந்த போதிலும் இன்று பன்றியை உண்பதில் கிறிஸ்தவர்களே முன்னணியில் நிற்கின்றனர்!
"மதுபானம் அருந்தாதீர்கள்" என்று பைபிள் உபதேசம் செய்தாலும் அந்தத் தீமையை தீர்க்கதரிசிகளே செய்து வந்தார்கள் என்றும் இயேசு கிறிஸ்து கூட கல்யாண விருந்தில் அதை பரிமாறியிருக்கிறார் என்று புரோகிதர்கள் எழுதி வைத்துள்ளதால் இது குறித்தும் தார்மீக வழிகாட்டுதல் இல்லாமல் பாஸ்டர் கூட மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதும் கிறிஸ்தவத்திலேயே நடக்கின்றன.
"நீ திருமணம் முடிக்காதவனாக இருந்தால் (திருமணம் முடிக்க) பெண்ணைத் தேடாதே! திருமணம் முடித்திருந்தால் உன் மனைவியை விட்டுவிடாதே" என்று திருமணம் முடித்தல் பாவமா? நன்மையா? என்ற தெளிவான வழிகாட்டுதலை வழங்க பைபிள் தவறியதால் திருமணம் செய்யாமல் உணர்வுகளையும் அடக்க இயலாமல் சன்னியாசம் சென்று பாதி வழியில் வழிதவறி வருபவர்களும் கிறிஸ்தவர்களே!
தலைகுனிந்து ஆசீர்வதித்து அமைதிப்புறாவாக மக்களிடம் காட்சியளித்த அன்றைய போப்பும் கிறிஸ்தவ புரோகிதர்களும்தான் சிலுவை யுத்தம் இறையாட்சியை பூமியில் உருவாக்கும் புனிதப் போர் என்று சிலுவை யுத்தங்களுக்கு அழைப்பு விடுத்து இலட்சகணக்கில் மனிதர்களைக் கொன்றொழித்த மாபாதச்செயலைச் செய்தன.
பைபிளின் மீது கைவைத்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஜார்ஜ் புஷ் என்ற கிறிஸ்தவர் தான், ஈராக்குக்கு எதிராக யுத்தம் செய்யுமாறு கடவுள் தன்னிடம் கூறியதாக அறிக்கை விட்டார். ஈராக்கில் நசுக்கப்பட்ட இலட்சகணக்கான பிஞ்சுக் குழுந்தைகளும் பலவீனமான பெண்களும் முதியவர்களும் புஷ்ஷின் பார்வையில் இறைவனுக்காக பலியிடப்பட்டவர்கள்!
பைபிள் உண்மையில் அகிம்சையையும் அன்பையும் தான் போதிக்கிறதா என்று ஆராய்ந்தால் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் நிறைந்த தகவல்கள் கிடைக்கின்றன. எதை கிறிஸ்தவர்கள் பயங்கரவாதம் என்று சொல்கிறார்களோ அதை விட பயங்கரமான செயல்களையெல்லாம் செய்யவேண்டியது இறைகட்டளையாகவே பைபிளில் உள்ளன என்று கூறினால் பலருக்கும் ஆச்சர்யம் ஏற்படுவது இயல்புதான். எனினும் அதுவே உண்மை.
பயங்கரவாதத்தின் ஆணிவேர்கள் தோண்டப்படும்!

பைபிளும் குரானும் பேசுவது ஒன்றுதானா?

2002 ஆம் ஆண்டு கல்கி ஏட்டில் பீஜைனுல் ஆபிதீன் அளித்த பேட்டி. பின்னர் இது ஒற்றுமை இதழிலும் வெளியிடப்பட்டது. நேயர்களுக்குப் பயன்படும் என்பதால் இதை வெளியிடுகிறோம்.
பைபிளும் குரானும் பேசுவது ஒன்றுதானா?
சமீபத்தில் The Bible and Quran எனும் தலைப்பிட்டு நியூஸ் வீக் வார இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டது. இக்கட்டுரையைக் குறித்து இஸ்லாமிய அறிஞர் மவ்லவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களிடமும், பிரபல எழுத்தாளர் வலம்புரி ஜானிடமும் பேட்டி எடுத்து கட்டுரை எழுதியுள்ளது கல்கி வார இதழ். கல்கி நிருபர் சித்தார்த், மற்றும் ஸ்ரீநிவாசன் எழுதியுள்ள அக்கட்டுரை வாசகர்களுக்குப் பயனளிக்கும் என்பதால் இங்கே அளிக்கிறோம். ஒற்றுமை 16.03.2002                                                                                                                                                           
www.jesusinvites.comபைபிளும் - குரானும் ஒரே செய்தியைத் தான் சொல்கின்றன.
இரண்டுமே கடவுளின் தூதர்களைப் பற்றியும் மீட்சியைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் தான் பேசுகின்றன. இப்படி இருக்கையில் மதத்தின் பெயரால் போராட்டம் ஏன்? என்று ஆரம்பித்து, நியூஸ் வீக் இதழில் குரானையும் - பைபிளையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது
அந்தக் கட்டுரையிலிருந்து
பைபிளைப் போலவே, குரானிலும் தெய்வீக அதிகாரம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் தெய்வீக அருள் பெற்ற மனிதர்கள் தான் பைபிளை எழுதினார்கள் என்று யூதர்களும், கிறித்தவர்களும், கருதுகிற போது, அல்லாஹ்வின் நிரந்தரமான வார்த்தைகளாகவே குரானை முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். குரான் என்றால் ஒப்பித்தல் என்று அர்த்தம். ஆக, கடவுளின் சொற்களை வெளிப்படுத்த முஹம்மத் ஒரு கருவியாக இருந்திருக்கறார்; அவராக அவற்றை உருவாக்கவில்லை. மேலும், முஹம்மதுவிடம் கடவுள் பேசிய மொழி அரபி, ஆதலால், குரானின் மொழிபெயர்ப்புகள், கடவுளின் அசல் உரைகளுக்கு விளக்க உரைகளாகவே கருதப்படுகின்றன.
பைபிளைப் படிக்கிறவர்கள், ஆபிரகாம், மோஸஸ், டேவிட், ஜான் த பாப்டிஸ்ட், ஜீஸஸ் - ஏன், கன்னிமேரி ஆகிய பெயர்களைக் குரானிலும் பார்க்கலாம். ஆனால், இவர்களைப் பற்றிய செய்திகள் பைபிளில் இருப்பதற்கு முற்றிலும் மாறுபட்டவை. குரானில், தேவ தூதர்கள் எல்லோருமே முஸ்லிம்கள், உதாரணமாக, ஆபிரகாம் (இப்ராஹீம்), முதல் முஸ்லிம் ஆகக் கருதப்படுகிறார். ஏனெனில், அவர் தமது தகப்பனாரின் மதத்தை ஏற்காமல் அல்லாஹ்வைச் சரண் அடைந்தார்; அவருடைய பெயரும் பைபிளில் குறிப்படப்படவில்லை. இஸ்லாமிய புனிதத் தலமான மெக்காவில் அவர் காபா கட்டிய குறிப்பும் இல்லை. குரானில் பேசப்படும் மூஸா பைபிளில் வரும் மோஸஸ் போல இருக்கிறார். பெற்றோருக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்பது திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. குரானில் வரும் ஈஸா, பைபிளில் வரும் ஜீஸஸ் போன்றே சித்தரிக்கப்பட்டிருக்கிறார். மெக்காவில் முஹம்மதுவை முதலில் மக்கள் நிராகரித்து அலட்சியம் பண்ணியது போலவே அவரையும் வெறுத்திருக்கிறார்கள். ஆனால், ஏசு கடவுளின் குழந்தை என்ற கிறிஸ்தவர்களின் கூற்றை குரான் ஏற்கவில்லை. சிலுவையில் ஏசு அறையப்பட்டதைக் கூட மேலோட்டமாகத் தான் சொல்லுகிறது. ஆனால், குரானின்படி ஏசுபிரான் மர்மமான முறையில் இறக்கவில்லை; அல்லாஹ் அவரை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறார்!
அரசியல் ரீதியாக, மேற்கத்திய நாடுகளில் தற்போதைய நிலை குரானுக்கு எப்படித் தவறாகச் சிலர் அர்த்தம் கற்பிக்கிறார்கள் என்பது தான். குரான் ஒரு ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றிச் சொல்லுகிறது. ஆனால், சரித்திரத்தைப் பார்த்தால், மதரீதியான அதிகாரத்துக்கும், இஸ்லாமிய அரசுகளுக்கும், தொடர்ந்து போராட்டம் இருந்து வருவது தெரியும். ஒரு காலத்தில் குரானில் அடிப்படையில் நடுவர்கள் தீர்ப்பளித்து வந்தார்கள். இன்றைய இஸ்லாமிய நாடுகளைப் பொறுத்த வரை அதிகாரப்பூர்வமான மதத் தலைமையின் கருத்துக்களுக்கு முழுதுமான மதிப்பும், அங்கீகாரமும் கிடைப்பதில்லை.
எல்லா நாடுகளிலும் உள்ள மதவாதிகளைப் போலவே, முஸ்லிம்களும் தமது விதண்டாவதங்களுக்கு எல்லாம் குரானை ஆதாரம் காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். தங்களுக்குச் சாதகமாக இவற்றைக் கூற ஆரம்பித்து விடுகிறார்கள். உஸாமா பின் லாடன் அவர்களில் ஒருவர் எனக் கூறலாம்.
மேற்கண்ட கட்டுரை பற்றி மார்க்க அறிஞர் மவ்லவி ஜைனுல் ஆபிதீனிடமும் - வலம்புரி ஜானிடமும் கேட்டோம்.
மத ரீதியான போராட்டம் அல்ல!
ஜைனுல் ஆபிதீன்:
பைபிளிலும், திருக்குரானிலும் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களில் அடிப்படையாகவே பல வேறுபாடுகள் உண்டு
1- கடவுளுக்கு மனைவி, மக்கள் இல்லை. இது இஸ்லாத்தின் அடிப்படை. ஆனால் கிறிஸ்தவம் ஏசுவை கடவுளின் குமாரர் என்கிறது
2- கிறித்துவம் பிதா - சுதன் - பரிசுத்த ஆவி என்ற திரித்துவத்தைச் சொல்கிறது.
3- மனிதன் பாவியாகவே பிறக்கிறான் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் ஒரு பாவமும் அற்றவனாகப் பிறக்கிறான் என்று இஸ்லாம் சொல்கிறது.
4- எல்லோருடைய பாவங்களையும் சுமந்து கொள்வதற்காக ஏசு தன்னைத்தானே சிலுவையில் பலியாக்கிக் கொண்டார் என்று கிறித்துவம் சொல்கிறது. ஒருவரது பாவத்தை மற்றவர் சுமக்கவே முடியாது என்று இஸ்லாம் சொல்கிறது.
5- பாவம் செய்து விட்டால் மதகுருமார்களிடம் Confession செய்வதன் மூலம் பாபநிவர்த்தி அடையலாம் என்று கிறித்துவம் சொல்கிறது. ஆனால் இஸ்லாமோ கடவுளிடம் நேரடியாகப் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்று சொல்கிறது.
6-சொர்க்கம், நரகம் பற்றி இரண்டு வேதங்களில் பேசப்பட்டாலும், அதை அடைவதற்கான வழிகளில் இரண்டும் வித்தியாசப்படுகின்றன. ஒருவன் செய்யும் நன்மை, தீமைக்கேற்ப, சொர்க்கமா, நரகமா என்பதைக் கடவுள் தீர்மானிப்பார் என்று மிகத் தெளிவாகவே குரானில் சொல்லப்பட்டிருக்கிறது.
7-பைபிளிலும், குரானிலும் கிட்டத்தட்ட ஒத்த பெயருடைய பலரைப் பற்றிச் செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், அவர்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் வித்தியாசப்படுகின்றன. உதாரணமாக, தாவீது (குரானில் தாவூத்) லோத்து (குரானில் லூத்) ஆகியோரைப் பற்றி பைபிளில் தவறான முறையில் சொல்லப்பட்டிருக்கின்றன. குரான் இதை மறுக்கிறது.
இரு மதங்களுக்கிடையே போராட்டம் என்பது முற்றிலும் தவறாகும். அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதும், கிறித்துவ மார்க்கத்தைப் பரப்புவதற்காகவோ நிலை நிறுத்துவதற்காகவோ அல்ல. உண்மையில் யூதர்கள் தான் கிறித்தவர்களுக்கு முதல் எதிரி. (கிறித்தவ நம்பிக்கைப்படி) ஏசுவைக் கொன்றவர்கள் மட்டுமல்ல அவர் வாழ்ந்த காலத்தில் இழிசொற்களால் ஏசியவர்களும் யூதர்களே!
எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டவே இஸ்ரேலை ஊக்கப்படுத்தி, முஸ்லிம் நாடுகளை மிரட்டி வருகிறது அமெரிக்கா. உஸாமா பின் லாடனைப் பிடிப்பதற்காக ஆப்கான் மீது படையெடுத்து அப்பாவிகளைக் கொன்றது கிறித்துவ மார்க்கத்தின் நோக்கமாக இருக்கவே முடியாது. ஆப்கான் மீது தன் ஆதிக்கத்தை நிலை நாட்டவே இந்தப் படையெடுப்பு.
திருக்குரானில் இரண்டு விதமான கட்டளைகள் உள்ளன. தனி மனிதர்கள் பின்பற்ற வேண்டியவை; அரசுகள் பின்பற்ற வேண்டியவை என்று இரு வகைகள். துரதிஷ்டவசமாக குரானில் உள்ள போர் குறித்த கட்டளைகளை, முஸ்லிம் அல்லாதவர்கள் - அதிலும் இஸ்லாத்தை வெறுப்பவர்கள், இஸ்லாத்துக்குத் தவறான வடிவம் தர பயன்படுத்திக் கொள்கிறார்கள். குரானில் வெட்டுங்கள்; கொல்லுங்கள் என்ற வசனங்கள் உண்டு. ஆனால், இவற்றைத் தனியாகப் பார்க்கக் கூடாது. இந்த வசனங்களுக்கு முன் உள்ள வசனங்களைப் பார்த்தால் யுத்த களத்தில், செயல்படுத்த வேண்டிய கட்டளைகள் என்பது புரியும் (உதாரணம், இரண்டாவது அத்தியாயம்: 190,191).
முஸ்லிம்களிலும் அரைகுறையாகப் புரிந்து கொள்ளும் சிலர் மக்களைத் தூண்டி ஆள் சேர்ப்பதற்காக இத்தகைய வசனங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இரண்டுமே தவறாகும்.www.jesusinvites.com
 நன்றி: கல்கி (03.03.2002)

குழந்தைக் கொலையை நியாயப் படுத்தும் பைபிள்!

குழந்தைக் கொலையை நியாயப் படுத்தும் பைபிள்!

இனவெறியின் உச்ச கட்டத்திற்குச் சென்ற புரோகித வர்க்கம் தம் ஈனச் செயல்களை நியாயப் படுத்த அவற்றை வேத உபதேசங்களாக்கி மக்கள் மன்றத்தில் வைத்தன. இவர்களின் வெறிச் செயலை படம் பிடித்துக் காட்டும் இன்னொரு சம்பவம் தான் அன்றைய பாபிலோன் மக்கள் மீது கொண்ட வெறுப்பில் அவர்களின் குழந்தைகளைக் கூட கல்லாலடித்துக் கொலை செய்ய வேண்டும் என்ற உபதேசம். சங்கீத புஸ்தகம் கூறும் உபதேசம் பாருங்கள்.
உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான் (சங்கீதம் 137:9)
அக்கிரமத்துக்குப் பழி தீர்க்க வேண்டுமெனில் அக்கிரமம் இழைத்தவர்களைத் தண்டித்தால் நியாயம். அவர்களின் குழந்தைகளையும் பிடித்து பாறை மேல் மோதி அடித்து கொடுமையாக கொலை செய்யும் வன்செயலை பைபிள் போதிக்கிறதே? இது பயங்கரவாதம் இல்லையா?
பச்சிளம் குழந்தையைக் கூட விட்டு வைக்காமல் நரவேட்டையாடக் கட்டளையிடும் பயங்கரவாதத்தின் மொத்த உருவம் பைபிள், இவ்வுலகைப் படைத்துப் பரிபாலித்து வரும் படைத்தவனின் வேதம் ஆகுமா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுவோம்!
பயங்கரவாதத்தின் ஆணிவேர்கள் இன்னும் தோண்டப்படும்...

Tuesday, 19 April 2011

www.onlinepj.com

www.onlinepj.com என்னும் இவ்விணையதளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் தலைவர் மூத்த பேச்சாளரும் இஸ்லாமிய அறிஞருமான சகோ.P.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் இஸ்லாமிய கருத்துக்களையும் இஸ்லாம் பற்றி கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய இணையதளமாகும்


இவ்விணையதளத்தினை பார்வையிட...

திருப்பூர் அலங்கியத்தில் நடைபெற்ற முகாம்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம் அலங்கியம் கிளை சார்பாக இலவச எலும்பு,மூட்டு,நரம்பு பாதிப்பு சிஹிச்சை முகாம் கடந்த 17 .04 .2011 ஞாயிற்றுகிழமை நடைபெற்றது இதில் 310 பேர் கலந்து கொண்டனர்.  இதில் 13பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இலவச அறுவைசிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவச மருந்துகள் வழங்கப்பட்டது. அல்ல்ஹம்துளில்லாஹ்.

Saturday, 16 April 2011

கோவை பொதுக்கூட்டத்தில் அதிமுக குண்டர்கள் வெறியாட்டம் – விளக்கு பிடித்து ஆள்காட்டிய மமக SDPI தொண்டர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திமுக கூட்டணியை ஆதரித்து கோவை மாவட்டத்தின் சார்பாக கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நேற்று (08-04-2011) இரவு மாநில பொதுச்செயலாளர் ரஹம்த்துல்லா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா திமுக கூட்டணியை TNTJ ஆதரிப்பது ஏன் என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார். சுமார் 9.45 மணியளவில் திடீரென அந்தக் கூட்டத்திற்குள் உருட்டுக்கட்டைகள் மற்றும் கற்களுடன் புகுந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த பெரிய ஸ்பீக்கரை கூட்டத்தினர் மீது பிடித்து தள்ள கூட்டத்தினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.
என்னவென்று சுதாரிப்பதற்குள் SDPI வேட்பாளர் உமர் தலைமையில் அங்கு வந்த மமகவின் பொருப்பாளர்கள் அங்கிருந்த விளக்குகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள்.
இந்த நேரத்தில் அதிமுக குண்டர்கள் அங்கே ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரின் வயரைப் பிடிங்கி விட அந்த இடமே இருளில் மூழ்கியது. மேடைக்கு முன்னாள் திரண்டிருந்த பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் பொருட்டு இந்த கலவர சூழ்நிலையிலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர்கள் பெண்களைச் சுற்றி அரணாக நிற்க அவர்கள் மீது பிளாஸ்டிக் சேர்களை தூக்கி அடித்து விட்டு பெண்கள் கூட்டத்திற்குள் நுழைந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த இஸ்லாமிய பெண்களை வெளியே சொல்ல முடியாத கொச்சை வார்த்தைகளால் திட்டி அவர்கள் மீதும் சேர்களைத் தூக்கி அடிக்க பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தனர்.
ஆனால் மாற்றானின் இந்த வேலைகளையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாத மமக மற்றும் எஸ்டிபிஐ ரவுடிகள் அவனை அடி, இவனை அடி ஒவ்வொருவர் மீதும் செல்போனின் விளக்கைப் பிடித்து காட்ட அவர்கள் காட்டிய ஒவ்வொருவர் மீதும் அதிமுக குண்டர்கள் வெறித்தனமான தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தனர்.
”மேடையில் உள்ளவன்களையும் அடியுங்கள்” என மமகவினருக்கு அதிமுக குண்டர்கள் உத்தரவிட அங்கே திரண்டிருந்த மமக SDPI ரவுடிகள் மேடையை நோக்கி சராமாரியாக கற்களை வீச ஆரம்பிக்க, மேடையின் மீது இருந்த பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா உள்ளிட்ட பல நிர்வாகிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஆனால் என்ன நிகழ்ந்தாலும் மேடையை விட்டு இறங்க மாட்டோம் என உறுதியாக நின்ற நிர்வாகிகள் இரத்தம் சொட்ட சொட்ட மேடையிலேயே நின்றனர்.
பெண்கள் அங்குமிங்கும் ஓடியதில் சில பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
ஆனால் பெண்களையும் குழந்தைகளையும் கூட பார்க்காமல் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய அதிமுக குண்டகளின் செயலை, ஏவிவிட்ட நாய்களைப் போல அமைதிகாத்து தங்களின் எஜமான விசுவாசத்தைக் காட்டியது மமக.
தவ்ஹீத் ஜமாஅத்தின் திமுக ஆதரவு நிலையால் பெரும்பாண்மை முஸ்லீம்களின் வாக்கு திமுகவுக்கு மாறி திமுக கூட்டணி மக்கள் மத்தியில்  செல்வாக்கு பெற்று வருவதால் வெறுப்படைந்த அதிமுகவினர் இவர்களின் பிரச்சாரத்தை கெடுத்த பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா மீது கொலை வெறித்தாக்குதல் நடத்த வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டுள்ளனர்.
ஆனால் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினால் அது மதப்பிரச்சனையாக மாறி விடும் என பயந்த அதிமுகவினர் அவர்களின் இன்றைய அடிமைகளான மம கட்சியை ஆலோசனைக் கூட்டத்திற்கு வரவழைத்து, முஸ்லிம்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற அதிமுகவின் திட்டத்தை சொல்லியது.
எஜமானனின் திட்டத்தில் இஸ்லாமியனின் உயிர் போனாலும் பரவாயில்லை என்ற பாணியில் இதை ஏற்றுக்கொண்டு தங்களின் எஜமானிய விசுவாசத்தைக் காட்ட எத்தனித்த மம கட்சியினர் ஏற்கனவே தவ்ஹீத் ஜமாஅத் மீது வெறியில் இருந்த SDPI காரர்க்ளையும் இணைத்துக்கொள்ளலாம் என அவர்களின் யோசனையைச் சொல்ல இதை முழுமையாக ஒப்புக்கொண்ட அதிமுகவினர், அடுத்த கட்ட திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தார்கள்.
அதாவது பொதுக்கூட்டம் நடந்த சாரமேடு மெயின் ரோடு பகுதியில் இருந்த 6க்கும் மேற்பட்ட சந்துகளில் அதிமுகவின் குண்டர்கள் குவிக்கப்பட்டனர்.
அவர்கள் ஏற்கனவே கடும் போதையில் இருந்ததால் அவர்களுக்கு கொலைவெறி இன்னும் அதிகமாகவே இருந்தது.
அதிமுகவினர் சந்துகளில் குவிக்கப்பட அதன் அடுத்த சாலையில் SDPI யும் மமகவினரும் தங்கள் வாகனங்களில் தயாராய் இருந்தார்கள்.
கூட்டம் முடியும் நேரத்தில் உள்ளே புகுந்து அதிமுக குண்டர்கள் முதல் தாக்குதல் நடத்த துவங்க, பின்னர் செல்போன் லைட்டின் உதவியால் ஒவ்வொரு கிளை நிர்வாகியாக அடையாளம் காட்டப்பட்டு அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
அத்தோடு மேடையை நோக்கி குண்டர்கள் வீசிய கற்கள் மேடைக்கு முன்னாள் கூடியிருந்த பெண்களின் பகுதியில் வந்து விழுந்தன. ஆனால் நல்லவேளையாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எவ்வித காயமும் ஏற்படாமல் வல்ல இறைவன் காத்துவிட்டான். முஸ்லிம்கள் மீது நடந்த தாக்குதல்களை விளக்கு பிடித்து முன்னின்று நடத்திய மமகவோ, SDPI யோ அங்கே நடந்த பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை.
இவர்கள் கூட்டங்களுக்கு இனி பெண்கள் வரக்கூடாது என்பதற்காகவே மாற்றார்கள் நடத்திய வெறியாட்டத்தை கொஞ்சமும் தடுக்காமல் தன் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தியது மமக.
காவல்துறைக்கு புகார் அளித்தும் உடனடியாக யாருமே வராததாலும், நம் ஜமாஅத்தின் உறுப்பினர்கள், பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற என்னத்தில் அமைதி காத்ததாலும் அதிமுக,மமக, SDPI யின் வன்முறை வெறியாட்டம் இரவு 11 மணி வரை நீடித்தது.
இரவு 11 மணிக்கு மேல் தன் படையினருடன் வந்த கமிஷ்னர் சைலேந்திர பாபுவிடம் 25 பேர் மீது புகார் கொடுக்கப்பட்டது.
அதிலே 11 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து நம் மக்கள் கலைந்து சென்றனர்.
கோவையில் அதிமுக தனியாக போட்டியிடுகிறது. அவர்களுக்கு மமக ஆதரவு அளிக்கிறது. அவர்களை எதிர்த்து எஸ்டிபிஐ போட்டியிடுகிறது. ஆனால் இவர்களின் எதிர்ப்பையெல்லாம் மறந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தாக்க வேண்டும் என்ற விசயத்தில் மட்டும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.
அதிமுக பாஜகவின் ஊதுகுழல் என்று சொல்லி வந்த மமக இன்றைக்கு ஏகத்துவததை அழிக்க அதிமுகவோடும், எஸ்டிபியுடனும் கூட்டணி சேர்ந்திருக்கின்றனர்.
நம் சமுதாய ஆண்களின் மீதும் பெண்களின் மீதும் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்திற்கு விளக்கு பிடித்து வழிகாட்டிய இந்த மமகவினரா நம் சமுதாய நலனை காக்கப் போகிறார்கள். சிந்தியுங்கள் இஸ்லாமிய சமுகமே! இவர்களை முழுமையாக புறக்கணித்து இவர்களின் வெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.












































































































































































































































About the Author

மாமா கட்சி வேட்பாளர் விஜய்யுடன் சந்தி(சிரி)ப்பு



அரசியலுக்கு போய் விட்டால் எப்படி வேண்டுமானாலும் வளையலாம் வெளியலாம் குலையலாம் பதவி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஈமான் எப்படி போனாலும் பரவாயில்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக நம் சமுதாய மான்ம் காக்க புறப்பட்டு சந்தி சிரித்துப் போன மானங்கெட்ட மாமா கட்சியினரின் அடுத்த அவதாரம் தான் வேட்பாளர் தமிமுன் அன்சாரி நடிகை விஜய்யை சந்தித்து பொன்னாடை போர்த்திய நிகழ்ச்சி. ஏற்கனவே ஓட்டுக்காக வாணியம்பாடி வாத்தியார் திருவாடுதுறை ஆதினத்திடம் ஆசி பெற்றதும், ஹைதர் அலி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான மனித சங்கிலியில் மழையில் நனைந்து கொண்டே பங்கேற்றதும் தொடர்கதையான நிலையில் நேற்றைக்கு மாமா கட்சியின் வேட்பாளர் தமிமுன் அன்சாரி நடிகர் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி பேந்த பேந்த முழித்த காட்சி இன்றைக்கு செய்தித் தாள்களில் சந்தி சிரிக்கிறது. சமுதாயமே! இவர்களையா நீங்கள் ஆதரிக்கப் போகிறீர்கள். சிந்திப்பீர். இதை அனைவருக்கும் பரப்புவீர்

அரசியல் போதையில் அல்லாஹ் வை மறந்த ஜவாஹிருல்லாஹ்! – கூட்டனி கட்சி தலைவர்கள் முன்பு இன்ஷா அல்லாஹ் வார்தையை மென்டுமுழுங்கி பாதியாக்கிய அவலம்!

கூட்டணி கட்சி தலைவர் முன்பு  ஜவாஹிருல்லாஹ் மேடையில் பேசும் போது இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தையை சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு “இன்ஷா..” என்பதோடு மட்டும் நிறுத்திக் கொண்டு அல்லாஹ் வை விட்டு விட்டு, அய்யய்யோ தெரியாமல் சொல்லி விட்டோமே என்று தட்டுதடுமாறும் காட்சி கோவையில் நடந்தேரியுள்ளது.









ஜால்றா ஜவாஹிருல்லாஹ் ஏன் இப்படி ஆனார் குழப்பத்தில் த.மு.மு.க வில் உள்ள தொண்டர்கள்



Download

அரசியல் போதையில் இவர்கள் படைத்த இறைவனையே மறந்து, இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தையைச் மேடையில் உச்சரிக்வே வேட்கப்படும் நிலைக்கு சென்று  விட்டனர்.
மேலும் இவர்கள் மற்ற அரசியல் வாதிகள் போன்று சந்தர்ப்ப வாதிகள் என்பதை மீ்ண்டும் இறைவன் நிரூபித்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்!
முஸ்லிம் என்று கூறி தங்களுக்கு ஓட்டுகேட்க இவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை!.

Wednesday, 6 April 2011

தவ்ஹீத் சகோதரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ABCD (SDPI PFI etc..) ரவுடி கும்பல்



ஜிஹாத் எனும் பெயரால் இளைஞர்களை வழிகெடுத்து வரும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியாவின் போக்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் குமரி மாவட்ட நிர்வாகிகள் நோட்டீஸ் விநியோகம் செய்து வந்தனர்.


அந்த நோட்டீஸில் உள்ள உண்மைச் செய்திகள் மக்களுக்கு சென்று விட்டால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா, எஸ்.டி.பி.ஐ என பலர் பெயர்களில் உலா வரும் இவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடுமென்பதால் வெலவெலத்துப் போன அவர்கள் டி.என்.டி.ஜே நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்டு நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
நோட்டீஸ் விநியோகிக்க சென்றவர்கள் இரண்டே இரண்டு பேர் தான். இரண்டு பேர் மட்டும் தான் நோட்டீஸ் கொடுப்பதை அறிந்து கொண்ட இந்த ரவுடிகள் கூட்டமாக சேர்ந்து இருவரை கோழைத்தனமாக தாக்கி உள்ளனர்.
விமர்சனத்தை விமர்சனத்தால் எதிர்கொள்ள தயங்கும் இந்த கோழைகள், அந்த இரண்டு நிர்வாகிக்ளையும் அடித்து உதைத்த பின்னர் இறந்து விட்டதாக நினைத்தார்களோ அல்லது இறந்துவிட்டால் பிரச்சனையாகிவிடும் என நினைத்தார்களோ அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டனர்.
கொலைவெறி தாக்குதலுக்குள்ளான இரண்டு முஸ்லிம் சகோதரர்களும் நாகர்கோவில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிட்சை பெற்று வருகின்றனர்.இறைவனின் கருணையால் ஜாஃபர், நாசர் என்ற அவர்கள் இருவரின் உயிருக்கு ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை. அல்ஹம்துலில்லாஹ்!
ஆனால் கொலைமுயற்சியில் ஈடுபட்ட ரவுடிகளான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியாவின் கொள்கைவாதிகள் இப்போது தலைமறைவாகி விட்டனர்.
டி.என்.டி.ஜே நிர்வாகிகள் வெளியிட்ட அந்த நோட்டீஸில் ‘இவர்கள் முஸ்லிம் சகோதரன் என்று கூட பார்க்காமல் அடிப்பார்கள், தாக்குவார்கள். ஆனால் பாதிப்படைந்தவர் புகார் கொடுத்தால் அதை எதிர்கொள்ள திராணியின்றி தலைமறைவாகி விடுவர்’ என்று போடப்பட்டிருந்தது. அதை இவர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.
இவர்களின் இந்த கீழ்த்தரமான செயலினால் குமரி மாவட்ட முஸ்லிம்கள் ‘சொந்த சகோதரனை கொல்ல துடிக்கும் இவர்கள் ரவுடிகக் கும்பல் தான் என்று உணர ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் பிற மாவட்டங்களில் முஸ்லிம்களை கொல்வதும் அடித்து உதைப்பதும் அராஜக செயல்கள் செய்வதும் குமரி மாவட்ட முஸ்லிம்களுக்கு இதுநாள் வரை தெரியாமல் இருந்தது.
இந்த சம்பவத்தின் மூலம் இவர்கள் முஸ்லிம்களுக்கு பகிரங்க எதிரிகள், இவர்கள் தீவிரவாதிகள் தான் என்பதை ஊருக்கு காண்பித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!
குறிப்பு : கொலைவெறி தாக்குதலுக்குள்ளாகி மூன்று நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நிலை சற்று தேறிவரும் அந்த இரண்டு சகோதரர்களுக்காக துஆ செய்யவும்.