Tuesday, 9 October 2012

மாவட்ட தாயீக்களுக்கான பயிற்சி முகாம் 07102012


 திருப்பூர் மாவட்ட தலைமை  சார்பாக 07.10.12 அன்று மதியம் 2.30 மணிக்கு மாவட்ட தலைமை மர்கஸில் வைத்து மாவட்ட தாயீக்களுக்கான பயிற்சி முகாம் நடைப்பெற்றது.இதில் மாநில பேச்சாளர்கள் H.M.அஹமது கபீர் , மற்றும் K.S.அப்துர் ரஹ்மான் பிர்தௌஸி ஆகியோர் "பேச்சின் ஒழுங்குகள் மற்றும் நெறிகள்" குறித்து மாவட்ட பேச்சாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.


POSTED BY மாணவரணி SHAHID

இரண்டு பிற மத சகோதரர்களுக்கு தஃவா-V.K.P. கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளையின் சார்பாக 02-10-2012 அன்று இரண்டு மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்து திருக்குர்ஆன் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது  
POSTED BY மாணவரணி SHAHID

பெண்களுக்கான தர்பியா மற்றும் தொழுகைப் பயிற்சி பயான்-V.K.P. கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளையின் சார்பாக 01-10-2012 அன்று மாலை 04:00 மணி முதல் 06:00 மணி வரை பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது இதில் தொழுகைப் பயிற்சி மற்றும் பயான் நடைபெற்றது


POSTED BY மாணவரணி SHAHID

மாணவர் அணியின் பயான் பயிற்சி-மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 03-10-2012 அன்று பயான் பயிற்சி நடைபெற்றது இதில் ஏழு பேர் பயிற்சி பெற்றனர் (அல்ஹம்துலில்லாஹ்)  
POSTED BY மாணவரணி SHAHID

மக்தப் மதரஸாவில் கேள்வி பதில் நிகழ்ச்சி -மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 04-10-2012 அன்று குழந்தைகளுக்கான மக்தப் மதரஸாவில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
POSTED BY மாணவரணி SHAHID

பெண்களுக்கான மக்தப் மதரஸா-மங்கலம் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02-01-2012 அன்று முதல் பெண்களுக்கான மக்தப் மதரஸா துவங்கப்பட்டது. இதில் இருபத்தி மூன்று பெண்கள் சேர்ந்துள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்)

POSTED BY மாணவரணி SHAHID

மாவட்ட மாணவரணியின் மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணியின் சார்பாக மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி மாவட்ட தலைமை மர்கஸில் வைத்து நேற்று 07.10.12 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட மாணவரணி செயளாலர் சகோ.S.ஷாஹிது ஒலி அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயளாலர் சகோ.பஷீர் முன்னிலையில் நடைப்பெற்றது.



இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சகோ.H.M.அஹமது கபீர் அவர்கள் ”இஸ்லாம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை எப்படி அறிமுகப்படுத்துவது”என்ற தலைப்பில் சக நன்பர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்வது குறித்து பயிற்சி வழங்கினார்.அவரை தொடர்ந்து மாநில பேச்சாளர் சகோ.K.S.அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் ”நாம் சந்திக்கும் பிரச்சனைகளும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் சக நன்பர்களுக்கு இஸ்லாத்தை சொல்லும் போது ஏற்படும் பிரச்சனைகளை மற்றும் பிற இயக்கத்தை சார்ந்தவர்கள் எடுத்து வைக்கும் கேள்விகளை எப்படி தர்க்கரீதியாக எதிர்கொள்வது என்பது குறித்து பயிற்சி வழங்கினார்.இத்ல் 70 க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

POSTED BY மாணவரணி SHAHID

Monday, 8 October 2012

தெருமுனை பயான்-மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01-10-2012 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை கிடங்கு தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ தவ்ஃபிக் அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்

POSTED BY மாணவரணி SHAHID

Saturday, 6 October 2012

மூட நம்பிக்கை செயல்களை தெளிவு படுத்தும் தெருமுனை கூட்டம் -பெரியதோட்டம் கிளை
















திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம் கிளை சார்பாக கடந்த 05-10-2012 அன்று இரவு 7 மனியளவில் தெருமுனை கூட்டம்   பெரியதோட்டம் 4 வது வீதியில் நடைபெற்றது 

மூட நம்பிக்கை செயல்களை தெளிவு படுத்தும் வகையில் இந்த தெருமுனை கூட்டம் நடைபெற்றது .
அல்ஹம்துலில்லாஹ்!

இதில் சகோ திருப்பூர் சதாம் ஹுசைன்  அவர்கள்  "சமூக தீமைகள் "என்ற தலைப்பிலும் 
சகோ.அப்தூர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள்  "இஸ்லாத்தின் பெயரால் மூடநம்பிக்கைகள்"என்ற தலைப்பிலும்  
உரையாற்றினார்கள். 
பெண்கள் குழந்தைகள் உட்பட அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கேட்டு பயன் பெற்றனர்.




POSTED BY மாணவரணி SHAHID

Wednesday, 3 October 2012

தெருமுனை பிரச்சாராம் _ கோம்பைத்தோட்டம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை மாணவரணி சார்பாக முஸ்லிம்கள் மத்தியில் கல்வியின் விழிப்புணர்வை உருவாக்க வாரந்தோறும் இஸ்லாத்தின் பார்வையில் கல்வி என்ற் தலைப்பில் தெருமுனை பிரச்சாராம் துவக்கப்பட்டு முதல் கட்டமாக திருப்பூர் கோம்பைத்தோட்டம் பகுதியில் 01.10.2012 அன்று இரவு 08 மணியளவில் நடைப்பெற்றது.இத்ல்  மாவட்ட பேச்சாளர் சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
POSTED BY மாணவரணி SHAHID

மாணவரணி _ஆலோசனைக்கூட்டம்-கோம்பைத்தோட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை மாணவரணி சார்பாக ஆலோசனைக்கூட்டம் 01.10.2012 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பாளர்கள் யாசிர் மற்றும் சதாம் ஹுசைன் முன்னிலையில் நடைப்பெற்றது.
POSTED BY மாணவரணி SHAHID

Tuesday, 2 October 2012

குழந்தைகளுக்கான மக்தப் மதரஸா-V.K.P.கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்..


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளையின் சார்பாக 01-09-2012 முதல் குழந்தைகளுக்கான மக்தப் மதரஸா நடந்து வருகிறது. இதில் நாற்பது குழந்தைகள் பயின்று வருகிறார்கள் (அல்ஹம்துலில்லாஹ்)

POSTED BY மாணவரணி SHAHID

Monday, 1 October 2012

மாணவர் அணியின் பேச்சாளர் பயிற்சி வகுப்பு-மங்கலம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 30-09-2012 அன்று பேச்சாளர் பயிற்சியின்  5 வது வகுப்பு நடைபெற்றது. இதில் 7 பேர் பயிற்சி பெற்றனர்(அல்ஹம்துலில்லாஹ்)  


POSTED BY மாணவரணி SHAHID

இணை வைப்பு கூடமான தர்கா அருகில் தெருமுனை கூட்டம்-உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக கடந்த 30-09-2012 அன்று 
தெருமுனை கூட்டம்   இணை வைப்பு கூடமான தர்கா அருகில்  நடைபெற்றது 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த பகுதியில் உள்ள தர்காவில் திருவிழா(உருஸ்) மற்றும் 
 ஜமாலி யின் வழிகேடான உரை நிகழ்ச்சி நடைபெற்றது 
அந்த  வழிகெட்ட செயல்களை தெளிவு படுத்தும் வகையில் இந்த தெருமுனை கூட்டம் நடந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!

இதில் சகோ திருப்பூர் சதாம் ஹுசைன்  அவர்கள்  "சமூக தீமைகள் "என்ற தலைப்பிலும் 
சகோ.கோவை ஜாகிர்   அவர்கள்  "இஸ்லாத்தின் பெயரால் வழிகேடுகள்"என்ற தலைப்பிலும்  
உரையாற்றினார்கள். 
பெண்கள் குழந்தைகள் உட்பட அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கேட்டு பயன் பெற்றனர்.


POSTED BY மாணவரணி SHAHID

நபிகள் நாயகம் (௦ஸல்) அவர்களை அறிந்து கொள்ள பேனர் தஃவா- மங்கலம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-09-2012 அன்று நபிகள் நாயகம் (௦ஸல்) அவர்களை அறிந்து கொள்ள என்ற தலைப்பில் பேனர் தஃவா செய்யப்பட்டது இதில் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகத்தை இலவசமாக பெற மாற்று மத சகோதரர்கள் தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது இது வரை 5 சகோதரர்கள் புத்தகம் பெற்றுள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்)


POSTED BY மாணவரணி SHAHID

Sunday, 30 September 2012

பள்ளிவாசல் இடத்திற்கு 8120 ரூபாய் நிதியுதவி-மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 21-09-2012 அன்று கோவை மாவட்டம் மதுக்கரை கிளை பள்ளிவாசல் இடத்திற்கு 8120 ரூபாய்  நிதியுதவி செய்யப்பட்டது 

POSTED BY மாணவரணி SHAHID

Wednesday, 26 September 2012

மங்கலம் மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க மழை தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-09-2012 அன்று காலை 08:00 மணியளவில் நபிகள் நாயகம் (ஸல்) *காட்டிய வழிமுறைப்படி மங்கலம் மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க வல்ல இறைவன் மழை வழங்கி அருள் செய்ய மழைத்தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்     

POSTED BY மாணவரணி SHAHID

உடுமலை மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க மழை தொழுகை



திருப்பூர்  மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக
 23.09.2012 ஞாயிறு காலை 8 மணிக்கு 
உடுமலை குட்டை திடலில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறைப்படி  
மழை தொழுகை நடைபெற்றது..


உடுமலை  மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க 
வல்ல இறைவன் மழை  வழங்கி அருள் செய்ய 
பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தொழுகை 
மற்றும் துவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்

இந்த நிகழ்ச்சி பற்றிய பத்திரிக்கை செய்தி.....

1.தினத்தந்தி
 2.தினகரன்
 3.தினமலர்

POSTED BY மாணவரணி SHAHID

Sunday, 23 September 2012

பள்ளிவாசல் இடம் வாங்குவதற்காக உதவி-உடுமலை கிளை


14.09.2012  அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
உடுமலை கிளை மஸ்ஜிதுத்  தக்வா பள்ளிவாசலில்,  
ஜூம்மாஹ்வசூல்
 செய்யப்பட தொகை  ரூ. 3350/= 
திருப்பூர்  மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர்  கிளை   
பள்ளிவாசல் இடம் வாங்குவதற்காக  
வழங்கப்பட்டது.


POSTED BY மாணவரணி SHAHID

நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்- திருப்பூர் வீடியோ பதிவு



திருப்பூர் மாவட்டம் சார்பாக 18.09.2012 அன்று மாலை 04.00 மணியளவில் மாநகராட்சி முன்பு
முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்தும், 
அவனை ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும் 
அமெரிக்க அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ஏராளமான ஆண் களும்,பெண்களும்,குழந்தைகளும் கலந்து கொண்டனர் . 
அல்ஹம்துலில்லாஹ். 
சகோ.H.M.அஹமது கபீர் அவர்கள் கண்டன உரை நிகழ்தினார்



POSTED BY மாணவரணி SHAHID

Thursday, 20 September 2012

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் அமேரிக்க அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 18-09-2012.அன்று மாலை 4.மணியளவில் திருப்பூர் மாநகராட்சி வளாகம் முன்பு நடை பெற்றது மாவட்ட தலைவர் :ஷேக்ஃபரீத் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடை பெற்றது.
சகோ:H.M.அஹமது கபீர் அவர்கள் கண்டன உரையாற்றினார். இக்கூட்டத்தில் ஆண்கள் பெண்கள் மூன்றாயிரத்திற்க்கும்அதிகமானோர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.



ஒபாமாவிற்க்கு மரியாதை
















POSTED BY மாணவரணி SHAHID