Wednesday 2 May 2018

மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 27/04/2018 வெள்ளி மாலை 5:30 மணி முதல் திருப்பூர் டவுன் ஹால் மைதானத்தில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சகோ. பா. அப்துர்ரஹ்மான் அவர்கள் “TNTJவின் அரும் பணிகள்” எனும் தலைப்பிலும், சகோ. R.அப்துல் கரீம் அவர்கள் “ வஹியை மட்டும் பின்பற்றுவோம்” எனும் தலைப்பிலும், சகோ. P.ஜைனுலாபுதீன் அவர்கள் “திருக்குர்ஆன் கூறும் சமநீதி” எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இந்த பொதுகூட்டத்தில் பெரும் திரளான சகோதர சகோதரிகள்  கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

 இந்த பொது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 

சிறுமி ஆசிஃபாவை  கடத்தி சென்று கோவிலில் அடைத்து வைத்து, தொடர்ச்சியாக பலநாட்கள் கொடூரமாக கற்பழித்து கொலை செய்த காவி
மனித மிருகங்களை உடனடியாக மத்திய அரசு தூக்கிலிட வேண்டும் என்று இந்த பொதுக்கூட்டம் வாயிலாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வலியுறுத்துகிறது.


தமிழக மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் காவேரி நீர் தமிழகத்திற்கு கிடைப்பதில்லை.இதை உச்ச நீதிமன்றமும் குறிப்பிட்ட அளவு நீரை முறையாக விடவேண்டும் என கூறியும்,கர்நாடக அரசு தர மறுக்கிறது.

எனவே தமிழக மக்களின் நீர் ஆதாரத்தை கவனத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.


இன்ஸா அல்லாஹ் ஜனவரி 27,2019 அன்று,தமிழ்நாடு தவ் ஹீத் ஜமாஅத் நடத்த இருக்க கூடிய திருக்குர்ஆன் மாநில மாநாட்டில்,தமிழகமெங்கும் 15லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.இம் மாநாட்டில்,இறைவேதமாகிய திருக்குர்ஆனின் சிறப்புகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் விதமாக  இருப்பதால்,இம்மாநாட்டிற்கு நமது பகுதியிலிருந்து இன்ஷா அல்லாஹ் பல்லாயிரகனக்கான மக்களோடு செல்ல இருப்பதால் இம்மாநாட்டிற்காக நாம் அனைவரும் உழைப்போம் என  பொதுக்கூட்டம் வாயிலாக கேட்டு கொள்கிறோம்.

கடந்த தேர்தலில் ஆளுங்கட்சியின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முஸ்லிம்களுக்கான 3.5% இட ஒதுக்கிட்டினை  உயர்த்தி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள்,அந்த வாக்குறுதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நிறைவேற்றி தர வேண்டுமென பொதுக்கூட்டம் வாயிலாக கேட்டுகொள்கிறோம்.

GST உட்பட பல்வேறு மறைமுக வரிவிதிப்பால்  திருப்பூரில் தொழில்கள் நசிந்து பல்வேறு நிறுவனங்கள் மூடும்நிலை, தொழிலாளர்கள் வேலை இழக்கும் இழி நிலை, மற்றும் அனைத்து மக்களின் பாதிப்பை போக்க இந்த வரிவிதிப்புகளை சீரமைக்க மத்திய அரசை இ
 




ந்த பொதுக்கூட்டம் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்