Tuesday 17 April 2018

"அல் மதரஸத்துத் தவ்ஹீத்" மதரஸா ஆண்டு விழா - பெரியகடைவீதி கிளை












TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 15-04-2018 ஞாயிறு  மாலை ஐந்து மணிக்கு "அல் மதரஸத்துத் தவ்ஹீத்" மதரஸா ஆண்டு விழா நடைபெற்றது இதில் கிளை தலைவர் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் முன்னுரை நிகழ்த்தி துவக்கி வைத்தார், மதரஸா ஆசிரியை சகோதரி ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் அவர்களின் முன்னிலையில் மாணவ மாணவியரின் 
கிராத் ஓதுதல், 
கேள்வி பதில்,  
மூட நம்பிக்கை சம்பந்தமான மாணவியரின் நாடகம், மவ்லீது சம்பந்தமான
மாணவர்கள் நாடகம் மற்றும் மாணவ மாணவியரின் பேச்சுப்போட்டி நடைபெற்றது. 
அடுத்து மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது சகோதரி ரஹ்மத் (பல்லடம்) அவர்கள் ஒழுக்கம் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்கள்.
அதைதொடர்ந்து "கல்வியின் அவசியம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இறுதியாக மதரஸாவில்  நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது  மதரஸாவில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.