Thursday 17 December 2015

வெள்ள நிவாரன உதவி - திருப்பூர் மாவட்டம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் சார்பாக 06-12-2015 அன்று முப்பது லட்சம்  மதிப்பிலான  குழந்தைகள் மற்றும்  பெரியவர்களுக்கான  பனியன் ஆடைகள், பிஸ்கட்,பால் பவுடர்,பிரட் , மளிகை சாமான்கள், பருப்பு வகைகள் , ஆயில், நாப்கின்கள்,  வாட்டர் பாட்டில்கள் , தண்ணீர் பாக்கெட் மூட்டைகள்,  காலனிகள் , கோதுமை மாவு ,வாழைப்பழம், டூத்பேஸ்ட், பாய் தலையணை, போர்வைகள், ஆகிய 
வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் மீட்பு குழு  32 பேர், மற்றும் மாவட்டத்தின் சார்பாக கிளைகளில் ஜும்ஆ  வசூல் மற்றும் கிளை  வாரியாக பொதுமக்களிடம் வசூல் செய்த தொகை ரொக்கம் ஆறு லட்சத்தி பதிமூன்றாயிரத்தி இருநூற்றி முப்பத்தி ஒன்பது ரூபாய் (6,13,239)  பணம்  ஆகியவை  இரண்டு கண்டெய்னர்  வாகனங்களில்  முதல்கட்டமாக  மாவட்ட தலைமையகம் மூலம்    மாநில தலைமைக்கு வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் .....