Thursday 17 December 2015

பிறமத தாவா - காங்கயம் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 04-12-2015 அன்று பொதுமக்களிடம் பொருளாதாரம் வசூல் செய்யும் பொழுது பிறசமயத்தை சார்ந்த சகோதரர்கள் புதிய ஆடைகளை நிவாரண பொருளாக நம் ஜமாஅத் சகோதரர்களிடம் வழங்கினார்கள்,அந்த சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு “மனிதனுக்கேற்ற மார்க்கம் ,முஸ்லீம்கள் தீவிரவாதிகள்.? ” ஆகிய புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ் .....