Tuesday 17 September 2013

ஜனவரி 28சிறை செல்லும்போராட்ட பிரச்சாரப் பேரணி -பத்திரிக்கைகளுக்கு செய்தி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை சார்பாக 15.09.2013  அன்று காலை 5.45 முதல் இரவு 8.30 வரை திருப்பூர் ரோஜா மஹால் மண்டபத்தில் திருப்பூர் மாவட்டநிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மற்றும் பேச்சாளர்களுக்கான தர்பியா நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாம் கலந்துகொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் பல்வேறு அவசியமான முக்கிய தகவல்களை அறிந்து செயல்பட ஏதுவாக அமைந்தது.

இந்த பயிற்சி முகாம் பற்றியும்,எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட தீர்மானங்கள் பற்றி பத்திரிக்கைகளுக்கு செய்தி கொடுக்கப்பட்டது.  


1. 2000  இருசக்கர வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி

வருகிற ஜனவரி 28அன்று கோவையில் நடைபெறவுள்ள சிறை செல்லும் போராட்டம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் 2000  இருசக்கர வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி திருப்பூர் மாவட்டம் சார்பில் நடத்தவேண்டும் என்றும் ......

2.இஸ்லாத்தினை தழுவுவோருக்கு இடஒதுக்கீடில் பாரபட்சம் நீக்கவேண்டும்

இந்து,கிருத்துவ,மற்றும் பிற மதத்திலிருந்து இஸ்லாத்தினை தழுவுவோருக்கு இடஒதுக்கீடு ரத்து செய்யக்கூடாது என்ற நீதிமன்ற உத்திரவை தமிழக அரசு அமுல்படுத்த வேண்டும்  என்றும்....

3.டெல்லி மாணவி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்கவேண்டும்.

டெல்லி மாணவி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கிய உடனடியாக தண்டனை வழங்கவேண்டும்என்றும்...

4. திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கும் , தமிழகஅரசுக்கும் நன்றி..




கடந்த அன்று நடந்து முடிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டத்தில்  காவல்துறைக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த வருடம் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மிக சரியான வகையில் நடவடிக்கை எடுத்து பொது அமைதியை ஏற்படுத்தி கொடுத்த திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கும் , தமிழகஅரசுக்கும் நன்ற தெரிவிக்கிறது என்றும்....

4.மது போதை மற்றும் புகை பிடித்தல் தீமை குறித்து விழிப்புணர்வு 

பொதுமக்களின் உடல் மற்றும் உள்ளக்கேடுகளை விளைவிக்கும் மது,மற்றும் புகை பற்றிய தீமைகளை குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது என்றும்.. 

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்