Monday 18 December 2017

மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி - காங்கயம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் கிளை சார்பாக இன்று (17.12.2017) காலை 10.15 மணி  சென்னிமலை ரோடு ஸ்ரீமஹாலில்  மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட தலைவர் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரை நிகழ்த்த , அவரைத் தொடர்ந்து  மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ.சிராஜ் அவர்கள் மாணவரணி ஏன்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.பிறகு கிளை துணைச் செயலாளர்கள் சகோ.முஹம்மது ஹுசைன் அவர்கள் இஸ்லாம் கூறும் சமூக பணிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.மேலும் 
அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?
என்ற தலைப்பில் சகோ‌.ஷாஹிது ஒலி அவர்களும்

அதிக மதிப்பெண் பெற? எப்படி? படிக்கலாம்?

என்ற தலைப்பில் சகோ.அஷரஃப் அலி அவர்களும் 

மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்

மாணவர்களின் கல்வி குறித்த  கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது.

(மாணவர்களுக்கு முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகமும், மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது)

மதிய உணவுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.

இதில் ஏகனின் மகத்தான கிருபையால் மாணவ, மாணவியர்கள் 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்