Thursday 7 December 2017

மகதப் மதரஸா பெற்றோர்களின் சந்திப்பு நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையின் அல் மதரஸத்துத் தவ்ஹீத் மதரஸாவில் 26-11-2017 அன்று மாலை நான்கு மணிக்கு பெற்றோர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு முதலில் குழந்தைகள் கிராத் ஓதி நிகழ்ச்சி ஆரம்பமானது  கிளை தலைவர் அஜ்மீர் அப்துல்லாஹ் முன்னுரையாற்றினார் கிளை செயலாளர் ஹசேன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் வட்டி சம்பந்தமான விழிப்புணர்வு நாடகம், இனைவைப்பு சபந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி, மூட நம்பிக்கை பற்றிய நாடகம், பேச்சுப்போட்டி நடைபெற்றது மற்றும் பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகளின் மார்க்க கல்வியின் தரம் பற்றி அவர்களுக்கு விளக்கப்பட்டது மதரஸாவின் நிறை குறைகளை பற்றி கேட்கப்பட்டது. 14-11-2017 அன்று மதரஸாவின் காலாண்டு தேர்வு நடைபெற்றது அதில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது இறுதியாக மாவட்ட துனை செயலாலர் சகோ பஷீர் அலி அவர்கள் " குழந்தை வழர்ப்பு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.




அல்ஹம்துலில்லாஹ்.