Tuesday 12 December 2017

மாவட்ட செயற்குழு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 2019 ஜனவரி 27 ல் நடத்தவுள்ள  திருக்குர்ஆன் மாநில மாநாடு  செயல்திட்டங்களை வகுக்கவும்,  

     தாவா பணிகளை வீரியப்படுத்தவும், கிளை மாவட்ட நிர்வாக ஒழுங்குகளை சீராக்கவும் மாநில தலைமையின் வழிகாட்டுதலுடன் 
        டிசம்பர் 10   (10.12.2017) அன்று திருப்பூர் மாவட்ட செயற்குழு  உடுமலை கிளை மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

     இந்த செயற்குழுவில் மாவட்டத்தின் அணைத்து கிளை நிர்வாகிகள், அணிச்செயலாளர்கள், மாவட்ட பேச்சாளர்கள் ஆகியோர்   கலந்து கொண்டனர் 

       இந்த செயற்குழுவில் மாவட்ட நிர்வாகிகள், ஜமாஅத் தின் நிலைப்பாடுகள் பற்றியும், மாநில செயலாளர். பா.அப்துர்ரஹ்மான் அவர்கள் " திருக்குர்ஆன் மாநில மாநாடு ஏன்? எதற்கு? எனும் தலைப்பிலும்,  மாநில செயலாளர் ஈ.முஹம்மது அவர்கள் நிர்வாக ஒழுங்குகள்" எனும் தலைப்பிலும்  உரை நிகழ்த்தி விளக்கம் வழங்கினார்கள்.



  அல்ஹம்துலில்லாஹ்..