Thursday 23 October 2014

காவல் ஆய்வாளுக்கு திருக்குர்ஆன் - மடத்துக்குளம் கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம்  மடத்துக்குளம்  கிளை சார்பில்  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் 19.10.2014 அன்று நடைபெற்றது.  மடத்துக்குளம் காவல்  நிலையம்  சென்று  காவல் அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் "மனிதநேய மார்க்கம் இஸ்லாம்" நோட்டீஸ்,  வழங்கப்பட்டது. 
காவல் ஆய்வாளர். சகோதரர். பார்த்திபன் அவர்களிடம் திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் "மனிதநேய மார்க்கம் இஸ்லாம்" நோட்டீஸ்,  வழங்கி தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ள தகவல்கள் பேசப்பட்டது. இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என கண்டிப்பாக பிரச்சாரம் செய்யுங்கள் என ஆர்வமூட்டினார். அல்ஹம்துலில்லாஹ்....