Wednesday 20 May 2015

" தலை நசுக்கப்படும் நபர் " -Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள்" தலை நசுக்கப்படும் நபர் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

கடமையான தொழுகையை விட்டும் தூங்குதல் மற்றும் குர்ஆனை புறக்கணித்தல்
நபி (ஸல்) அவர்கள் தாம் கனவில் கண்ட கல்லால் தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிடுகையில், "அவர் குர்ஆனைக் கற்று அ(தன்படி செயல்படுவ)தை விட்டுவிட்டவர்; கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி) நூல் : புகாரி 1143