Tuesday 24 July 2018

மகளிர் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்- மங்கலம் கிளை










தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் அன்ஸாரிய்யா மகளிர் இஸ்லாமிய கல்வியகத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் மங்கலம் கிளை சார்பில் 22-7-2018 அன்று ஞாயிறு மாலை 6-00 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.
முதல் நிகழ்வாக கல்லூரி மாணவிகளின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் 1, ஏகத்துவம் 2, இணைவைப்பு 3, மார்க்க கல்வியின் அவசியம் 4, வரதட்சனை 5, இறை அச்சம்
6, திருக்குரான் மாநாடு ஏன்? ஆகிய தலைப்புகளில் 6 மாணவிகள் உரை நிகழ்த்தியது பொதுமக்கள் ஆர்வமுடன் கேட்கும் வண்ணம் அமைந்தது.
அடுத்து TNTJ மாநில செயலாளர் சகோ. முஹம்மத் கனி அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், TNTJ மாநில செயலாளர் சகோ. கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் சத்தியத்தில் சங்கமிப்போம் என்ற தலைப்பிலும், சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
சிறப்பான முறையில் இந்த பெண்கள் கல்வியகத்தை நடத்தும் ஆசிரியர்களுக்கு பரிசுகளும், ஒரு வருட கல்வியை நிறைவு செய்த மாணவியர்களுக்கு சான்றிதழ் பட்டமும், பரிசுகளும் வழங்கப்பட்டது.
நகரின் மையப்பகுதியில் பொதுக்கூட்டம் நடந்ததால் பிறமத மக்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கவனிக்கும் வகையிலும், 1000 த்திற்கும் அதிகமான கொள்கை சகோதர சகோதரிகள் கலந்து கொண்டும் சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்