Friday 2 June 2017

மாட்டிறைச்சி விற்பனை தடையை கண்டித்து ஆர்பாட்டம் - திருப்பூர் மாவட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்லாஹ்வின் மகத்தான அருளால் மத்திய மோடி அரசின் மாட்டிறைச்சி விற்பனை தடையை கண்டித்தும்,மேலும் திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பா நகரில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையான தொழுகையை நிறைவேற்ற விடாமல் தடுப்பதையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் 31-05-2017 புதன் அன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது,இதில் மாநில துனைத்தலைவர் M.I.சுலைமான் அவர்கள் தலைமை வகித்தார்கள்,மாநில பேச்சாளர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி மற்றும் மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான் ,செயலாளர் ஜாஹிர் அப்பாஸ்,பொருளாளர் ஷேக் ஜீலானி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் ,மாநில செயலாளர் மயிலை அப்துர் ரஹீம் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள் ,இறுதியாக மாவட்ட பொருளாளர் ஷேக் ஜீலானி அவர்கள் நன்றியுரை கூறினார்கள். இந்த ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சகோதர,சகோதரிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர் .அல்ஹம்துலில்லாஹ்