Saturday 5 December 2015

மாணவர்களுக்கான இலவச ட்யூஷன் - பெற்றோருடனான சந்திப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளையின் சார்பாக    நடைபெற்று வரும் மாணவர்களுக்கான இலவச ட்யூஷன் வகுப்பில் பயிலும் மாணவர்களின் பெற்றோருடனான சந்திப்பு நிகழ்ச்சி 29-11-15 ஞாயிறு அன்று காலை 11மணிக்கு கிளை மர்கஸில் நடைபெற்றது, இதில் சகோதரர் முஹம்மது சலீம் அவர்கள் தவ்ஹீது ஜமாத்தின் பணிகள் பற்றி உரை நிகழ்த்தினார்,அதைதொடர்ந்து,, மாணவர்களின் கல்வியில் பெற்றோரின் பங்கு என்ன என்பது பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது,,,  ட்யூஷன் பயிலும் மாணவர்களுக்கு மக்தப் மதரஸாவும் நடத்துமாறு பெற்றோர்கள் கோரினர்,,, அப்போது முஸ்லிம் அல்லாத மாண்வர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கும் இஸ்லாம் குறித்து பாடம் நடத்துமாறு கேட்டுக்கொண்டனர்,,, இறுதியில் வந்திருந்த பிற சமய மாணவர்களின் பெற்றோருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள்?"என்ற புத்தகம் அன்பளிப்பு செய்யப்பட்டது,,, அல்ஹம்துலில்லாஹ்.....