Sunday 19 April 2015

இனப்பெருக்கத்தில்பெண்களின்பங்கு -மடத்துக்குளம் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 18/04/2015 அன்று  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. அஜ்மல் கான் அவர்கள் 207.  இனப்பெருக்கத்தில் பெண்களின் பங்கு எனும் தலைப்பில் விளக்கம்  வாசிக்கப்பட்டது 

207. இனப் பெருக்கத்தில் பெண்களின் பங்கு

மனிதன் படைக்கப்பட்டதைக் கூறும் போது விந்துத் துளியிலிருந்து படைத்ததாகப் பல வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
"துளி' என நாம் மொழி பெயர்த்திருந்தாலும், விந்துத் துளியில் உள்ள ஒரு உயிரணுவிலிருந்து மனிதனைப் படைத்ததாகவும், அது கலப்பு விந்துத் துளி எனவும் இந்த வசனத்தில் (76:2) இறைவன் கூறுகிறான்.
ஆணிடமிருந்து வெளிப்படும் உயிரணு, பெண்ணிடமிருந்து வெளிப்படுகின்ற சினை முட்டையுடன் இரண்டறக் கலந்து, பிறகு தான் அது பெண்ணின் கருவறைக்குச் சென்று மனிதனாக உருவாகிறது.
மனித உற்பத்தியில் ஆணுடைய உயிரணுவும், பெண்ணுடைய சினை முட்டையும் கலந்தாக வேண்டும் என்ற அறிவியல் உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கலப்பு விந்துத்துளி எனக்கூறி இது இறைவனின் வார்த்தை தான் என்பதை திருக்குர்ஆன் நிரூபிக்கிறது.