Sunday 11 May 2014

கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா _S.V.காலனி கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  S.V.காலனி  கிளை  சார்பில் கடந்த 01.05.2014 அன்று முதல் 10.05.2014 வரை  ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் தனித்தனியாக நடைபெற்றது.இதில் சகோ.சல்மான் அவர்கள் கலந்து கொண்ட 15 மாணவர்களுக்கும், சகோதரி.ஜொஹைரா அவர்கள்   கலந்து கொண்ட 15 மாணவிகளுக்கும் பயிற்சியளித்தனர்.

10.05.2014 அன்று தேர்வுகள் நடத்தப்பட்டது.11.05.2014 அன்று பரிசளிப்பு விழா  திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் மாணவ,மாணவியர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது. 


நிகழ்ச்சியில்  அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர், முதல் மூன்று மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும், கலந்துகொண்ட இதர மாணவ மாணவிள் அனைவர்களுக்கும் பரிசளிப்பு வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.





கலந்துகொண்ட  மாணவ ,மாணவிள் அனைவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
  அல்ஹம்துலில்லாஹ்....