Monday, 20 June 2011
Saturday, 18 June 2011
செக்ஸ் புகாரில் சிக்கிய ஊட்டி பாதிரியார் அமெரிக்கா செல்ல பிஷப் உத்தரவ
செக்ஸ் புகாரில் சிக்கிய ஊட்டி பாதிரியார் அமெரிக்கா செல்ல பிஷப் உத்தரவு சென்னை: அமெரிக்காவில் பாலியல் புகாரில் சிக்கிய, ஊட்டி பாதிரியார் முறைப்படி விசாரணையை எதிர்கொள்ளுமாறும், இதற்காக அமெரிக்காவுக்குச் செல்லுமாறும் பிஷப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள மின்னசோடா மாகாணத்தில் கத்தோலிக்க பாதிரியாராக இருந்தவர் ஜோசப் பழனிவேல் ஜெயபால். வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜெயபால் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதுபற்றிய தகவல் வாட்டிகனை எட்டியதும், பாதிரியார் ஜோசப் பழனிவேலுக்கு சிறிய அளவிலான தண்டனை கொடுக்கப்பட்டது. தற்போது அவர், ஊட்டியில் உள்ள அமல்ராஜ் என்ற பிஷப்பின் கீழ் பணியாற்றி வருவதாகவும், கிறிஸ்தவ பள்ளிகளின் ஆசிரியர் நியமனங்களை அவர் தான் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயபாலால் பாதிக்கப்பட்டோர், மின்னசோடாவில் ஒன்று கூடி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் சர்ச் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர். ஆனால், 'பாதிரியாரை எளிதாக நாங்கள் விரட்டிவிட முடியாது. அவர் பிஷப் இல்லத்திலேயே தங்கி இருக்கிறார். ஆசிரியர்கள் நியமனத்தில் எனக்கு உதவியாக இருக்கிறார். இதுபற்றி அவரிடம் விசாரித்த போது தான் குற்றமற்றவன் எனக் கூறுகிறார். எனக்கு வேறு வழி தெரியவில்லை' என்றார். இந்நிலையில், பாதிரியார் ஜெயபால் அமெரிக்கா சென்று வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை உயர் மறைமாவட்ட ஆர்ச் பிஷப் ஏ.எம்.சின்னப்பா உத்தரவிட்டிருக்கிறார். பாதிரியார் ஜெயபாலை வழக்கு விசாரணைக்காக அமெரிக்கா அனுப்பி வைக்குமாறு ஊட்டி பிஷப்பிடம் பேசியிருப்பதாகவும் பேராயர் சின்னப்பா கூறினார். Source : http://thatstamil.oneindia.in/news/2010/04/07/accused-abuse-catholic-priest-ask.html
posted by SM.YOUSUF
Monday, 13 June 2011
சட்டமன்ற முற்றுகை
இன்ஷா அல்லாஹ் சட்ட மன்றம் கூடும் முதல் நாள் சட்மன்ற முற்றுகைப் போராட்டம் – மாநிலத தலைவர் பேச்சு!posted by SM.YOUSUF
Wednesday, 8 June 2011
புகை நமக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு.
மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் வழி முறைகளை இஸ்லாம் ஒரு சந்தர்ப்பத்திலும் அனுமதித்தது கிடையாது. இன்று நமக்கு மத்தியில் வாழும் மனிதர்களில் பலர் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் விதமாக புகைப் பிடிக்கும் தீய காரியத்தில் ஈடுபடுவதை நாம் காண் முன்னே கண்டு வருகிறோம்.
புகை பிடிக்கவில்லை என்றால் ஏதோ தங்கள் கவுரவம் பாதிக்கப்பட்டதாக இவர்கள் நினைக்கிறார்கள். புகைப் பிடிப்பவன் தான் மேலானவன் என்பதைப் போலும் புகை பிடிக்கத் தெரியவில்லை அல்லது பிடிப்பதில்லை என்ற வட்டத்தில் யாராவது இருந்தால் அவர்கள் நாகரீகம் தெரியாதவர்கள் என்பதைப் போலும் தான் இந்த சமுதாயம் அவர்களை நோக்குகிறது.
ஆனால் இஸ்லாம் இப்படிப்பட்ட தீய நாகரீகங்களை ஒரு போதும் அனுமதிப்பதில்லை.
இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் இப்படிக் குறிப்பிடுகிறான்.
உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! (அல்குர்ஆன் 4:29)
உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! (அல்குர்ஆன் 2:195)
புகைத்தல் என்பது மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் மாபாதகச் செயல்பாடாகும்.
இந்தப் புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் ஒவ்வொருவனும் தனது உடல் நலத்தையும் கெடுத்து தன்னைச் சுற்றியிருப்பவர்களின் சுக வாழ்வையும் நாசப்படுத்துவதைப் பார்க்களாம்.
புகையிலையிலிருந்து 300க்கும் அதிகமான நச்சுப் பொருட்கள் (பர்ஷ்ண்ய்ள்) வெளியாகின்றன. அவற்றில் அதிகம் கேடு விளைவிப்பவை,
1. நிகோடின்,
2. கார்பன் டை ஆக்ஸைடு,
3. கார்பன் மோனாக்ஸைடு,
4. கார்பன் டெட்ரா குளோரைடு ஆகியவையாகும்.
இவை அனைத்தும் கரியமில வாயுடன் தொடர்புடையவை.
புகை பிடிப்பதால் உதடுகள், நாக்கு, வாயின் உட்பகுதி, கன்னம், மூக்கின் இரு பகுதியில் உள்ள சைனஸ், தொண்டை, பேரிங்ஸ், லாரிங்ஸ், உணவுக்குழாய், காற்றுக் குழாய், நுரையீரலுக்குள் செல்லும் சிறு காற்றுக் குழாய்கள், நுரையீரல், நுரையீரலைச் சுற்றியுள்ள உறை, இரைப்பை, கல்லீரல், சிறு குடல், பெருங்குடல், கணையம், சிறுநீரகம், ஆண் பெண் உறுப்புக்கள், இதயம், மூளை, கண்கள் ஆகிய உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன. அதாவது கிட்டத்தட்ட எல்லா உறுப்புக்களும் பாதிக்கப்படுகின்றன.
பெரிய, சிறிய, நடுத்தர இரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள சிறிய தசைகளை நிக்கோடினும், பிற நச்சுப் பொருட்களும் சுருங்கச் செய்து இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, இரத்த ஓட்டத்தைக் குறைக்கின்றன. இதனால் உடல் உறுப்புக்கள் படிப்படியாகச் செயலிழக்கின்றன.
மூளைக்கு இரத்தம் கொண்டு செல்லும் கரோடிட் இரத்தக் குழாய்களும், அதன் கிளைகளும் சுருங்கி மூளையின் செல்களுக்குக் குறைவான இரத்தம் செலுத்தப் படுவதால் பக்க வாதம் ஏற்படுகின்றது.
கண்களுக்கு இரத்தம் அளிக்கும் முக்கியக் குழாய்களில் சுருக்கம் ஏற்பட்டு விழித்திரை பழுதடைந்து, திடீர் பார்வையிழப்பு ஏற்படுகின்றது.
காதுக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் சுருக்கம் ஏற்படுவதால் ஆக்ஸிஜன் சப்ளையின்றி கேட்கும் திறன் பாதிக்கப்படுகின்றது.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரங்களின்படி இவ்வருடம் 5 மில்லியன் மக்கள் புகைத்தலின் காரணமாக இறந்திருப்பதுடன் அதில் 600,000 மக்கள் இப்புகையிலை புகைகை நுகர்வதனால் உயிர்நீத்துள்ளனர் என்பது கவலைக்குரியது.
இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் எனும் கூற்று பொய்த்து இன்றைய இளைஞர்கள் நாளைய புகைஞர்கள் எனும் வகையில் 13-18 வயதிற்குட்பட்ட புகையிலை பாவனையாளர்களின் எண்ணிக்கை 7 இல் 1 ஆக அதிகரித்துள்ளமை நெஞ்சை சுடும் விஷயமாக உள்ளது.
சர்வதேசரீதியில் ஒவ்வொரு 8 செக்கனிற்கும் ஒருவர் புகையிலையால் இறப்பதுடன் இலங்கையில் ஒவ்வொரு 6.5 செக்கனிற்கும் ஒருவர் இறக்கின்றனர். அதுமட்டுமன்றி இலங்கையில் வருடாந்தம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் இந்தப் பழக்கத்தால் இறப்பதுடன் நாளொன்றுக்கு 4,101 மில்லியன் புகையிலை உற்பத்திகள் விற்பனையாகின்றன என்பது அதிசயிக்கத்தக்கதன்று.
புகையிலையினால் ஏற்படும் பாதிப்புக்களை இலகுவான விஞ்ஞான ரீதியில் எடுத்து நோக்கினால், புகையிலை புகையில் காணப்படும் நிக்கொட்டின் எனும் பதார்த்தம் இதயத்துடிப்பு வீதத்தை தற்காலிகமாக அதிகரிப்பதுடன் குருதியமுக்கத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது. மற்றும் சிகரட் புகைத்தல் சுவாசப்பை சிறு குழாய்களில் அழற்சியை ஏற்படுத்துவதுடன் இதன் விளைவாக மூச்சு விடுதல் கடினமாகிறது. அதுமட்டுமன்றி நமது சுவாசப்பை தொகுதியில் உள்ள பிசிர் தொழிற்பாடுகள் இழக்கப்படுவதால் வாயுப் பரிமாற்றத்திற்கான வினைத்திறன் வாய்ந்த பரப்பும் குறையும்.
புகையிலையினால் ஏற்படும் பாதிப்புக்களை இலகுவான விஞ்ஞான ரீதியில் எடுத்து நோக்கினால், புகையிலை புகையில் காணப்படும் நிக்கொட்டின் எனும் பதார்த்தம் இதயத்துடிப்பு வீதத்தை தற்காலிகமாக அதிகரிப்பதுடன் குருதியமுக்கத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது. மற்றும் சிகரட் புகைத்தல் சுவாசப்பை சிறு குழாய்களில் அழற்சியை ஏற்படுத்துவதுடன் இதன் விளைவாக மூச்சு விடுதல் கடினமாகிறது. அதுமட்டுமன்றி நமது சுவாசப்பை தொகுதியில் உள்ள பிசிர் தொழிற்பாடுகள் இழக்கப்படுவதால் வாயுப் பரிமாற்றத்திற்கான வினைத்திறன் வாய்ந்த பரப்பும் குறையும்.
புகையிலையின் புகையில் காணப்படும் காபன் மோனாக்சைட்டு வாயு குருதியினால் உறிஞ்சப்பட்டு ஈமோகுளோபின் உடன் மீளாத்தன்மையாக சேருகின்றது.ஆக்சிஜன் வாயுவிலும் பார்க்க இவ்வாயு வினைத்திறனாக ஈமோகுளோபின் உடன் சேரும். இதனால் குருதியில் ஆக்சிஜன் கடத்தப்படும் அளவு குறையும்.
இவை ஒரு மனிதனின் உடலில் ஏற்படும் பாதிப்புக்கள் எனும் அதேவேளை இறைவனின் கொடையாகிய சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் பாதிப்புக்கள் ஏராளமானவை. இவ்வனைத்து பாதிப்புக்களுக்கும் தீர்வு காணும் விதமாக உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு வருடமும் புதிய முயற்சிகளைக் மேற்கொண்டு வருவதுடன் உலக நாடுகளும், ஊடகவியலாளர்களும், தனிநபர் மற்றும்,நிறுவனங்களும்,துண்டுபிரசுரங்களினூடாகவும்,பத்திரிகைகளினூடாகவும்,சுவரொட்டிகளினூடாகவும்,ஒளித்தோற்றங்களினூடாகவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
எனினும் 2025 ஆம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 8 மில்லியனாக அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனத்தினால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இவை ஒரு மனிதனின் உடலில் ஏற்படும் பாதிப்புக்கள் எனும் அதேவேளை இறைவனின் கொடையாகிய சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் பாதிப்புக்கள் ஏராளமானவை. இவ்வனைத்து பாதிப்புக்களுக்கும் தீர்வு காணும் விதமாக உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு வருடமும் புதிய முயற்சிகளைக் மேற்கொண்டு வருவதுடன் உலக நாடுகளும், ஊடகவியலாளர்களும், தனிநபர் மற்றும்,நிறுவனங்களும்,துண்டுபிரசுரங்களினூடாகவும்,பத்திரிகைகளினூடாகவும்,சுவரொட்டிகளினூடாகவும்,ஒளித்தோற்றங்களினூடாகவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
எனினும் 2025 ஆம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 8 மில்லியனாக அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனத்தினால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்குக் காரணம் யார்? வருமானத்திற்கென புகையிலை உற்பத்திகளை உற்பத்தி செய்பவர்களாளா அல்லது 'புண்பட்ட நெஞ்சங்களை புகைவிட்டு ஆற்றுவதாக சொல்லிக் கொள்ளும் மன நோயாளிகளா?
நம்முடைய சிந்தனைகள் இன்னும் அறியாமையில்தான் இருக்கின்றன,அவற்றை நாம் புகையின்றி ஒளி பெறச்செய்ய வேண்டும்.
நமக்கும் நாட்டுக்கும் வீட்டுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும் இந்த கொடிய செயல்பாட்டில் இருந்து விடுபட்டு தூய்மையான இஸ்லாமிய வழிகாட்டுதலுடன் வாழ்வதற்கு தயாராகுவோம்.
குறிப்பு : இந்தக் கட்டுரையில் சகோதரி பா.ரம்யாவின் ஆக்கத்தின் சில பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
Monday, 6 June 2011
வட மரைக்காயர் அலுவலகம் யாருக்கு சொந்தம் ? நடந்தது என்ன ? சட்ட மன்ற முற்றுகை போராட்டம் ஏன் ?
1. சென்னை மண்ணடி எண்: 7, வடமரைக்காயர் தெருவிலுள்ள இரண்டு மாடி கட்டிடம் முஸ்லிம் ட்ரஸ்ட் பெயரில் அதன் ஆயுட்கால சேர்மன் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களது பெயரில் பதிவு செய்யப்பட்டதாகும்
2. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அமைப்பாளராக இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் தமுமுக அலுவலகம் இயங்குவதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.
3. உணர்வு வார இதழை நிர்வகித்து வரும் முஸ்லிம் மீடியா ட்ரஸ்டின் சேர்மனாகவும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் உணர்வு வார இதழ் அலுவலகம் இயங்குவதற்கும் அனுமதியளித்திருந்தார்.
4. 2004ஆம் ஆண்டு தமுமுகவிலிருந்து பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களும் அதன் முன்னனி பேச்சாளர்களும் கூண்டோடு விலகியதையடுத்து தமுமுக அலுவலகம் அந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு தடை செய்ய அதிகாரமிருந்தும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அதை செய்யவில்லை
5. எவ்வித சட்டப்பூர்வ உரிமையும் இல்லாமல் முஸ்லிம் ட்ரஸ்ட் கட்டடத்தின் முதல்மாடியில் இயங்கிவந்த தமுமுகவினர், 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலக ஊழியர்களைத் தாக்கி பொருட்களைச் சேதப்படுத்தி ரவுடித்தனம் செய்ததால் காவல்துறை மூலம் கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டு RDO விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
6. RDO விசாரணையில் இறுதித் தீர்ப்பு வரும் வரை முதல் மாடியை தமுமுக வும், இரண்டாம் மாடியை உணர்வு இதழும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; யாரும் யாருக்கும் இடையூறு செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
7. RDO உத்தரவிட்ட 2004ஆம் ஆண்டு முதல் கடந்த 2011 மே 27ஆம் தேதி வரை உணர்வு வார இதழின் நிர்வாகப்பிரிவு அலுவலகம் தொடர்ந்து அந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
8. 2004ஆம் ஆண்டு முதல் கடந்த 2011 மே 27ஆம் தேதி வரை ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால் துறை மூலம் அந்த அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டவை ஆதாரங்களாக நம்மிடம் உள்ளன.
9. கடந்த 2011 மே 27ஆம் தேதி அன்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து மாநில நிர்வாகிகளும், மற்றும் உணர்வு இதழின் பொறுப்பாளர்களும் ஊட்டி சென்றுவிட்டனர்.
10. இதைத் தெரிந்து கொண்ட மமகவை சேர்ந்த ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்டவர்கள் அத்துமீறி உணர்வு வார இதழ் அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூபாய் 5லட்சம் பெருமானமுள்ள பொருட்களைத் திருடிச்சென்றதுடன் மறுபூட்டுப் போட்டு உணர்வு வார இதழ் அலுவலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
11. செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்து 31.05.2011 செவ்வாய்க்கிழமை அன்று சென்னை திரும்பிய உணர்வு வார இதழின் பொறுப்பாளர்கள் தமது நிர்வாக அலுவலகம் சென்ற போது ரவுடிக்கும்பலோடு காத்திருந்த மமகவினர் உள்ளே செல்லவிடாமல் தடுத்து விரட்டியடித்து விட்டனர்.
12. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகவும், சட்ட விரோத ஆக்கிரமிப்பிற்கு இந்த அரசின் ஆதரவு இருக்காது என்ற நம்பிக்கையிலும் சென்னை மாநகர ஆணையாளர் திரிபாதி அவர்களைச் சந்தித்து ஆதாரங்களை எடுத்துக்காட்டி தவ்ஹீத் ஜமாஅத் முறையிட்டது.
13. தவ்ஹீத் ஜமாஅத் கூறுவதில் உண்மையிருப்பதை விளங்கிக் கொண்ட ஆணையாளர் அவர்கள் தமக்கு அடுத்த பொறுப்பிலுள்ள JC செந்தாமரைகண்ணன் அவர்களுக்கு நமது புகாரை அனுப்பியதுடன் அவரிடம் நேரில் விளக்குமாறும் சட்டப்படி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
14. அதன் பிறகு JC செந்தாமரைகண்ணன் ACஅவர்களுக்கு அதை அனுப்ப அவர் B1 காவல்நிலையத்திற்கு அதை அனுப்ப இழுத்தடிப்பு வேலைகள் ஆரம்பமாயின.
15. 14ஆண்டுகளாக இயங்கிவந்த ஒரு வார இதழின் அலுவலகம் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பாரதூரமான விஷயத்தை -ஏற்கனவே RDO வால் இடப்பட்ட உத்தரவு மீறப்பட்டுள்ள நிலையில் – B1 காவல்நிலையத்தில் ஒரு பெட்டி கேஸுக்கு தரப்படும் முக்கியத்துவம் கூட தராமல் ஏனோ தானோ என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் புகாரை குப்பைக்கூடைக்கு அனுப்பும் வகையில் அவர்களின் நடவடிக்கை அமைந்தது.
16. காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆதரவோடும், காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் ஆசியோடும் தான் இந்தச் சட்ட விரோத ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதியானதால் வரக்கூடிய ஜூன் 9ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக்கின்றது.
17. யாரும் பயப்பட வேண்டாம்; எல்லாம் சட்டப்படி நடக்கும் என்று பதவியேற்ற முதல்நாள் ஜெயலலிதா சொன்னது வழக்கமான அரசியல் பாம்மாத்து அறிவிப்பு தான் என்பது இதன் மூலமாக நிரூபணமாகின்றது.
posted by SM.YOUSUF2. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அமைப்பாளராக இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் தமுமுக அலுவலகம் இயங்குவதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.
3. உணர்வு வார இதழை நிர்வகித்து வரும் முஸ்லிம் மீடியா ட்ரஸ்டின் சேர்மனாகவும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் உணர்வு வார இதழ் அலுவலகம் இயங்குவதற்கும் அனுமதியளித்திருந்தார்.
4. 2004ஆம் ஆண்டு தமுமுகவிலிருந்து பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களும் அதன் முன்னனி பேச்சாளர்களும் கூண்டோடு விலகியதையடுத்து தமுமுக அலுவலகம் அந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு தடை செய்ய அதிகாரமிருந்தும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அதை செய்யவில்லை
5. எவ்வித சட்டப்பூர்வ உரிமையும் இல்லாமல் முஸ்லிம் ட்ரஸ்ட் கட்டடத்தின் முதல்மாடியில் இயங்கிவந்த தமுமுகவினர், 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலக ஊழியர்களைத் தாக்கி பொருட்களைச் சேதப்படுத்தி ரவுடித்தனம் செய்ததால் காவல்துறை மூலம் கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டு RDO விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
6. RDO விசாரணையில் இறுதித் தீர்ப்பு வரும் வரை முதல் மாடியை தமுமுக வும், இரண்டாம் மாடியை உணர்வு இதழும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; யாரும் யாருக்கும் இடையூறு செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
7. RDO உத்தரவிட்ட 2004ஆம் ஆண்டு முதல் கடந்த 2011 மே 27ஆம் தேதி வரை உணர்வு வார இதழின் நிர்வாகப்பிரிவு அலுவலகம் தொடர்ந்து அந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
8. 2004ஆம் ஆண்டு முதல் கடந்த 2011 மே 27ஆம் தேதி வரை ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால் துறை மூலம் அந்த அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டவை ஆதாரங்களாக நம்மிடம் உள்ளன.
9. கடந்த 2011 மே 27ஆம் தேதி அன்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து மாநில நிர்வாகிகளும், மற்றும் உணர்வு இதழின் பொறுப்பாளர்களும் ஊட்டி சென்றுவிட்டனர்.
10. இதைத் தெரிந்து கொண்ட மமகவை சேர்ந்த ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்டவர்கள் அத்துமீறி உணர்வு வார இதழ் அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூபாய் 5லட்சம் பெருமானமுள்ள பொருட்களைத் திருடிச்சென்றதுடன் மறுபூட்டுப் போட்டு உணர்வு வார இதழ் அலுவலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
11. செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்து 31.05.2011 செவ்வாய்க்கிழமை அன்று சென்னை திரும்பிய உணர்வு வார இதழின் பொறுப்பாளர்கள் தமது நிர்வாக அலுவலகம் சென்ற போது ரவுடிக்கும்பலோடு காத்திருந்த மமகவினர் உள்ளே செல்லவிடாமல் தடுத்து விரட்டியடித்து விட்டனர்.
12. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகவும், சட்ட விரோத ஆக்கிரமிப்பிற்கு இந்த அரசின் ஆதரவு இருக்காது என்ற நம்பிக்கையிலும் சென்னை மாநகர ஆணையாளர் திரிபாதி அவர்களைச் சந்தித்து ஆதாரங்களை எடுத்துக்காட்டி தவ்ஹீத் ஜமாஅத் முறையிட்டது.
13. தவ்ஹீத் ஜமாஅத் கூறுவதில் உண்மையிருப்பதை விளங்கிக் கொண்ட ஆணையாளர் அவர்கள் தமக்கு அடுத்த பொறுப்பிலுள்ள JC செந்தாமரைகண்ணன் அவர்களுக்கு நமது புகாரை அனுப்பியதுடன் அவரிடம் நேரில் விளக்குமாறும் சட்டப்படி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
14. அதன் பிறகு JC செந்தாமரைகண்ணன் ACஅவர்களுக்கு அதை அனுப்ப அவர் B1 காவல்நிலையத்திற்கு அதை அனுப்ப இழுத்தடிப்பு வேலைகள் ஆரம்பமாயின.
15. 14ஆண்டுகளாக இயங்கிவந்த ஒரு வார இதழின் அலுவலகம் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பாரதூரமான விஷயத்தை -ஏற்கனவே RDO வால் இடப்பட்ட உத்தரவு மீறப்பட்டுள்ள நிலையில் – B1 காவல்நிலையத்தில் ஒரு பெட்டி கேஸுக்கு தரப்படும் முக்கியத்துவம் கூட தராமல் ஏனோ தானோ என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் புகாரை குப்பைக்கூடைக்கு அனுப்பும் வகையில் அவர்களின் நடவடிக்கை அமைந்தது.
16. காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆதரவோடும், காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் ஆசியோடும் தான் இந்தச் சட்ட விரோத ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதியானதால் வரக்கூடிய ஜூன் 9ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக்கின்றது.
17. யாரும் பயப்பட வேண்டாம்; எல்லாம் சட்டப்படி நடக்கும் என்று பதவியேற்ற முதல்நாள் ஜெயலலிதா சொன்னது வழக்கமான அரசியல் பாம்மாத்து அறிவிப்பு தான் என்பது இதன் மூலமாக நிரூபணமாகின்றது.
Wednesday, 1 June 2011
Wednesday, 11 May 2011
விவாதத்திலிருந்து ஜெர்ரி தாமஸ் தப்பி ஓட்டம்!
ஜெர்ரி தாமஸ் என்பவர் பல இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களை
விவாதத்திற்கு அழைத்ததாகவும், யாரும் தன்னோடு விவாதம் செய்ய முன்வரவில்லை என்றும், குறிப்பாக ஜாகிர் நாயக் அவர்களை தான் விவாதம் செய்ய அழைத்து அவர் தன்னோடு விவாதம் செய்யாமல் ஓட்டமெடுத்து விட்டார் என்றும் அதற்கான ஆதாரங்களோடு தான் ஜாகிர் நாயக்கிற்கு விவாத அழைப்பு விடுத்து அவர் விவாதத்திற்கு வராமல் பின்வாங்கி ஓடிய செய்தியையும் கடித ஆதாரங்களுடன் தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த இடத்தில் ஜெர்ரி தாமஸ் என்ற இவர் விவாதம் செய்கின்றேன் என்ற பெயரில் கூத்தடிக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். அதாவது, ஜெர்ரி தாமஸ் என்பவரது பாஷையில் விவாதம் செய்வதென்பது என்னவென்றால், ஒரு தலைப்பை எடுத்துக் கொள்ள வேண்டுமாம்; அந்த குறிப்பிட்ட தலைப்பில் இவர் ஒரு மணி நேரம் உரையாற்றுவாராம்; நாம் ஒரு மணி நேரம் உரையாற்ற வேண்டுமாம்! இந்த இரண்டு மணி நேரத்தோடு விவாதம் முடிவடைந்து விடுமாம். என்னே அற்புதமான விவாத வழிமுறை(?). இந்த பாணியில் விவாதம் செய்ய இவர் அழைத்த விவாத அழைப்பையும் கூட ஜாகிர் நாயக் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நமக்கு இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
ஏனெனில் குர் ஆன ஹதீஸ் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்பதைக் கொள்கையாகக் கொண்டவர்களால் மட்டுமே இவர்களுடன் விவாதம் செய்ய முடியும். கொள்கை சரி இல்லாமல் எவ்வளவு திறமை உள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் விவாதம் செய்ய மறுத்து ஓட்டம் பிடிக்கத் தான் செய்வார்கள்.
ஜெர்ரி தாமஸ் என்பவர் முஸ்லிம் இமாம்கள் அறிஞர்கள் என்ற பெயர் பெற்றவர்கள் உளறியவைகளை திரட்டி வைத்துக் கொண்டு அது தான் இஸ்லாத்தின் கருத்து என்று சித்தரிப்பது தான் இவரது வழி முறை. ஜாகிர் நாயக்கோ இன்னும் பலரோ இமாம்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை சொல்வதால் இமாம்களின் சில உளறல்களை ஜெர்ரி தாமஸ் போன்றவர்கள் எடுத்து வைக்கும் போது அவர்கள் வாயடைக்கும் நிலை ஏற்படும்.
அதே நேரத்தில் விவாத சவடால் புகழ் ஜெர்ரி தாமஸ் என்பவர் விவாதம் செய்யத் தயாரா? என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை விவாதத்திற்கு அழைத்து எழுத்துப்பூர்வ அழைப்பு விடுக்க, தற்போது ஜெர்ரி தாமஸுடைய நிலை மிகவும் பரிதாபம்.
ஆம்! கதவிடுக்கில் சிக்கிய எலியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திடத்தில் வசமாக வந்து மாட்டிக் கொண்டு இப்போது தப்பித்தோம் பிழைத்தோம் என்று எஸ்கேப் ஆகியுள்ளார் ஜெர்ரி தாமஸ்.
நம்மை அணுகிய அவர்களிடத்தில் விவாத வழிமுறைகள் குறித்து நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து நேரடி உரையாடல் அவர்களோடு நடைபெற்றது. மாநிலத் தலைவர் சகோதரர் பீஜே அவர்கள் தலைமையில் நடைபெற்ற அந்த சந்திப்பு முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
ஒரு மணி நேர உரை நிகழ்த்திவிட்டு விவாதம் நிறைவடைந்து விட்டது என்று செல்லும் இந்த விளையாட்டுக்கள் எல்லாம் எங்களிடம் செல்லாது; ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டால் அதை முழுவதுமாக பேசி எது உண்மை என்பதை மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் விவாதம் அமைய வேண்டும். குறைந்தது இரண்டு நாட்கள் அதிகபட்சம் ஒருவாரம் கூட ஒரு தலைப்பில் விவாதிக்க வேண்டும். அதில் நீங்கள் ஒரு 15 நிமிடம் விவாதிக்க அந்த விஷயத்தை நாங்கள் மறுக்க, அதை நீங்கள் மறுக்க இப்படி போவது தான் விவாதமே ஒழிய நீங்கள் சொல்வது விவாதமாகாது என்று டிஎன்டிஜே அவர்களுக்கு கிடுக்கிப்பிடி போட தங்களை விட்டால் போதும், தப்பித்தால் போதும் என்று தற்போது தலைதெரிக்க ஓடியுள்ளது விவாத சவடால் விட்ட கூட்டம்.
அதற்கான வீடியோ ஆதாரங்கள், மற்றும் விவாத பின்னனிகள் மறும் விவாதம் குறித்த நமக்கும் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்துக்கள் அனைத்தும் நமது www.onlinepj.com இணையதளத்தில் முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளது.
விடியோ மற்றும் விவாத பின்னனிகளை காண இங்கே கிளிக் செய்யவும்
புகழனைத்தும் இறைவனுக்கே!
posted by SM.YOUSUFஇந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது?அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர். அல்குர்-ஆன் 74 : 50, 51
Thursday, 5 May 2011
Monday, 2 May 2011
Wednesday, 27 April 2011
விமானம் பறப்பது எப்படி?

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்
சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது
ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு
A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)
B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust
C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight
D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag
ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்
Weight=Lift
Drag=Thrust
த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்
டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்
விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்
விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்
சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,
அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.
(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)
விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்
பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது
எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்
உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக
விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது
விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்
இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது
காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)
விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்
அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?
அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது)
இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது
விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?
அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது
ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது
மனிதனால் பறக்க முடிவும் என்பது பற்றி இறைவன் திருமறையில்…
மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.டாது)
அல்குர்அன் 55-33
Tuesday, 26 April 2011
Subscribe to:
Posts (Atom)