Wednesday 25 June 2014

"இவ்வுலகில் இறைவனை காண முடியுமா?" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 25.06.2014 அன்று சகோ.ஜின்னா அவர்கள் "இவ்வுலகில் இறைவனை காண முடியுமா?" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இவ்வுலகில் இறைவனைக் காண முடியுமா?

இவ்வசனங்கள் 2:46, 2:55, 2:223, 2:249, 3:77, 4:153, 6:31, 6:103, 6:154, 7:143, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 25:21, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23, 83:15 இறைவனை இவ்வுலகில் யாரும் காண முடியாது என்பதையும் மறுமையில் அவனைக் காண முடியும் என்பதையும் சொல்லும் வசனங்களாகும்.
அல்லாஹ்வின் தூதர்கள் உள்ளிட்ட எந்த மனிதரும் அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத்
திட்டவட்டமாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. மறுமையில்தான் இறைவனைக் காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும் கிட்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட இறைவனிடம் உரையாடியுள்ளார்களே தவிர அவனைப் பார்த்ததில்லை.
"நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, "அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?'' எனக் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 461
இறைவனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்ததில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல்  : புகாரி 3234, 4855, 7380
மூஸா நபியாலும் இறைவனை நேரில் பார்க்க முடியவில்லை. (பார்க்க :  திருக்குர்ஆன் 7:143)
மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தவர் இறைவனை நேருக்குநேர் காட்டுமாறு மூஸா நபியிடம் கேட்ட போது அவர்களை அல்லாஹ் இடியோசையினால் தாக்கினான் என்று திருக்குர்ஆனின் 2:55, 4:153 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
அவனைப் பார்வைகள் அடையாது; அவனோ பார்வைகளை அடைகிறான் என்றும் அல்லாஹ் கூறுகிறான். (பார்க்க : திருக்குர்ஆன் 6:103)
இவ்வுலகில் இறைவனைக் காண முடியும் என்ற நம்பிக்கையினால் மனித குலத்துக்கு நன்மைகள் ஏற்படாது. கேடுகள் தான் ஏற்படும்;
தாம் இறைவனைப் பார்த்ததாக எத்தனையோ ஆன்மிகவாதிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இறைவனை எவரும் காண முடியாது என்று மக்கள் நம்பினால் ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடிகளை ஒழித்திட முடியும்.
இது குறித்து மேலும் அறிய 249, 482, 488 ஆகிய குறிப்புகளையும் பார்க்கவும்.