Monday 8 June 2015

மதரசத்துத் தக்வா ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி _வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 7-6-2015 அன்று மதரசத்துத் தக்வா  ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி   நடைபெற்றது 

இதில் கிளை சகோதரர்கள் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு நாடகம் நடத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர் ..



மாணவர் மாணவியர் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்..

சகோ. அஹமது கபீர்  அவர்கள் " சிறப்புமிக்க சிறுவர்களை உருவாக்குவோம் "  என்ற தலைப்பிலும்,
சகோதரி.சஜினா அவர்கள் " ஷிர்க் ஓர் அபாயம்" எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். 

மாவட்ட நிர்வாகிகள் , கிளை நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் , மாணவ மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில் கிளை சார்பில் பரிசுகள் வழங்கினார்கள் .

இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர். . 
அல்ஹம்துலில்லாஹ்...