Monday 15 October 2018

திருப்பூர் மாவட்ட பொதுக்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு 14/10/2018 அன்று காலை 10:30 மணிக்கு திருப்பூர் ரோஜா மஹாலில்  மாநில துணைப்பொதுச்செயலாளர் சகோ.அப்துர்ரஹீம் தலைமையில், மாநிலச் செயலாளர் சகோ.ஆவடி இப்ராஹிம்  அவர்கள் முன்னிலையில் துவங்கியது. 

ஆரம்பமாக மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோ.அப்துர்ரஹீம் அவர்கள்  நமது நோக்கமும் செயல்பாடும், எவ்வாறு இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கி 


தொடர்ந்து 1:30 மணி வரை பொதுக்குழு உறுப்பினர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கங்கள் வழங்கினார்கள்.



லுஹர் தொழுகை மற்றும் மதிய உணவிற்கு பிறகு இரண்டாம் அமர்வு 2:40 க்கு  ஆரம்பித்து



மாநில நிர்வாகிகள், மாநில நிர்வாக பொருளாதார பராமரிப்பு பற்றி காணொளி (டிவி)  மூலம் விளக்கம் வழங்கினார்கள். 



தொடர்ந்து 

மாவட்ட பொருளாளர் சகோ. சேக்பரீத் அவர்கள் வரவு செலவு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்..


மாவட்ட செயலாளர் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் செயல்பாட்டு அறிக்கை வாசித்தார்..


மாவட்ட துணைத்தலைவர்   சகோ.அப்துல்ரஹ்மான் கிளைகளின் தாவா மற்றும் சமுதாய சேவை செயல்பாடு 

மதிப்பீடு விவரங்கள்  அறிவித்தார்.

சிறப்பாக செயல்பட்ட கிளை நிர்வாகங்களுக்கு பரிசு ஷீல்டுகள் வழங்கி ஊக்கப்படுத்தப் பட்டது. 


தொடர்ந்து  புதிய நிர்வாக நிர்வாக தேர்வு நடைபெற்றது.. 


பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 


திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள்


தலைவர்         :   நூர்தீன் (மங்கலம்)  8973374411



செயலாளர்    : ஜாஹிர் அப்பாஸ் (Ms நகர்) 9171114161



பொருளாளர் :  அப்துல் ரஹ்மான்  (உடுமலை) 9843086807



து.தலைவர்  :   

யாஸர் அரபாத்  (Rpநகர்) 93454 56363

து.செயலாளர்கள்


1  ரபீக்  (Vkp)  9943814137


2 அப்துர்ரஷீத்  (உடுமலை) 9443522534


3 ஹனீபா)(கோம்பைத்தோட்டம்)  9894210504


4 மாபுபாஷா (வெங்கடேஸ்வரா நகர்) 9360675883


ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



இறுதியாக மாநிலசெயலாளர்.  ஆவடி இப்ராஹிம் அவர்கள் "நிர்வாகம் செய்யும் முறைகளும், நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் "எனும் தலைப்பிலும்,  திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள்  வழங்கினார்கள் 


 பொதுக்குழுவை சிறப்பாக நடந்தி வைத்த இறைவனுக்கு நன்றி தெரித்து நிறைவு செய்தோம்... 


அல்ஹம்துலில்லாஹ்....