Thursday 20 July 2017

நிலவேம்பு கசாயம் விநியோகம் அறிவிப்பு - சமுதாயப்பணி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  (07-07-2017) அன்று சீராசாஹிப் தெருவில் தாராபுரம் நகராட்சி அதிகாரிகள் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் நோய் எதிர்ப்பு நடவடிக்கை நிமித்தம் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்ய வந்த போது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக பொதுமக்களுக்கு பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டு மர்கஸ் வாசலிலேயே நிலவேம்பு கசாயம் அனைவருக்கும் விநியோகிக்கப் பட்டது. மத்ரஸா மாணவ மாணவியர் மற்றும் அக்கம் பக்கத்து தெருவில் வசிப்பவர்கள் அனைவரும் மருத்துவ குணம் மிகுந்த நிலவேம்பு கசாயம் அருந்தி பயன் அடைந்தனர்.  அல்ஹம்துலில்லாஹ்.!